முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

 புங்குடுதீவு மடத்துவெளி  வயலூர் முருகன் என அழைக்கப்படும் 

 ஸ்ரீ  பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 

கும்பாபிஷேக மலர் வெளியீடு 

14.04.2026  அன்று ஆலய முன்றலில் நடைபெறும் 


திங்கள், 23 மார்ச், 2026

வயலூர் முருகன் மகா கும்பாபிஷேகம்  25.03.2026  


இன்று 24.03.2026 இப்போது  எண்ணெய் சாத்து வெகுசிறப்பாக  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது 

ஞாயிறு, 22 மார்ச், 2026

 இன்று அருள்மிகு மடத்துவெளி வயலூர் முருகன் திருக்கோயிலில். மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்ற. நவக்கிரக ஓமகுண்ட பூஜை

புனிதமான ஆன்மீக சூழலில் சிறப்பாக நடைபெற்றது. வேத மந்திரங்களின் ஒலியோடு,
அக்னி குண்டத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஹோம திரவியங்கள், பக்தர்களின் மனமார்ந்த பிரார்த்தனைகள் —. இவை அனைத்தும் ஒன்றிணைந்து. அருள் பொங்கும் தெய்வீக தருணமாக அமைந்தது.
நவக்கிரகங்களின் அனுக்ரஹம் பெற்று
அனைவரின் வாழ்விலும். தோஷங்கள் நீங்கி, நலன்கள் பெருக. இப்பூஜை அருளின் வாயிலாக அமைந்தது. இந்த புனித நிகழ்வில் கலந்து கொண்ட. அனைத்து அடியார்களும்
முருகன் திருவருளால் மனநிறைவும் ஆனந்தமும் பெற்று. திரும்பினர்.
அருள்மிகு வயலூர் முருகன் திருவருளால்
அனைவரின் இல்லங்களிலும்
ஆரோக்கியம், அமைதி, வளம்
என்றும் நிலைக்கட்டும். அதன் போதான பதிவுகள்.












புதன், 18 மார்ச், 2026

 #ஷோடச_உபசார_பூசை (தமிழிலும்)

SIXTEEN STEP -SHODASHA UPASAARA PUJĀ
Canada Saiva Siddantha Peedam.
ஷட் (ஆறு) +தச (பத்து)= ஷோடச (பதினாறு)

புதன், 11 மார்ச், 2026

 வயலூர் முருகன் ஆலய சமூகத்துக்கான வேண்டுகோள்  

---------------------------------------------------------------------------------------

முருகன் அடியார்களுக்கு  வணக்கம் 

எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி ஆலய மகா குடமுழுக்கு விழா நடைபெற முருகப்பெருமான் அருள் பாலித்திருப்பது விருப்பது யாவரும் அறிந்ததே அதனையொட்டி சில வேண்டுகோள்களை உங்கள் முன்வைக்கிறோம். 

1.வயலூர் முருகன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்காக  நிதி சேகரிப்பு தாயகத்தில் விரைவில்  நடைபெறவுள்ளது,தயவு செய்து குறுகிய காலம் குடமுழுக்குக்கு இருப்பதால் உங்களிடம் நேரில் வருகை தாராவிடடாலும் நீங்களாகவே  முன்வந்து திருப்பணி நிதியினை வழங்கலாம் .அல்லது ஆலய வாங்கி ககணக்கில் வைப்பிடலாம் 

2,.கும்பாபிஷேக தினத்துக்கு முந்திய சில நாட்களில் சுத்தம் செய்தல். பொருட்களை இடம் மாற்றுதல்.சேமித்தல்,ஒழுங்குபடுத்தல் போன்ற சில பணிகளை சிரமதான முறையில் செய்ய  முன்கூட்டியே தொடர்பு கொண்டு ஒத்துழையுங்கள் 

3,.23,24 ஆம் திகதிகள் எண்ணெய் சாத்துதல். குடமுழுக்கு நாட்களில் தொண்டு செய்யவென அடியார்களின் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து உதவுங்கள்.

4.ஆலயத்தின் பொதுச்சபை உறுப்பினராக  உரிய சந்தாப்பணத்தினை  செலுத்தி  சேர்ந்து கொள்ளுங்கள்.பழைய உறுப்பினர்களும் 2026 ஆம் ஆண்டுக்குரிய  சந்தாப்பணத்தினை  செலுத்தி கொள்ளுங்கள் .மார்ச் 13 வரை சென்ற்து கொள்வோர் மட்டுமே உண்மையான உறுப்பினர்களாக  கணிக்கப்படுவர் .

5.எதிர்வரும் ஏப்ரில் 14 ஆம் திகதி தேர்த்திருவிழா அன்று ஆலய பொதுச்சபை கூடடம் ஆலய மண்டபத்தில் நடைபெறும் .

நன்றி 

பே .கோசலை 

www .vayaloormurugan .com 

செயலாளர் 

ஆலய பரிபாலனசபை 

மடத்துவெளி புங்குடுதீவு 

06.03.2026

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

 அகவை 75 - பவள விழாவில் தடம் பதிக்கும்


சண் அண்ணா 01.03.2026.
உன் அன்னையின் வயது 101. சண் அண்ணையின் வயது 101 ப்ளஸ் தானே
********************************************************
********************************************************
வெள்ளி விழா நாயகன் வள்ளி மணாளன் அருளை அள்ளி அள்ளி வழங்க
சொல்லி சொல்லி வாழ்வாயாக 101 மேலாக
ஒரு மனிதன் ஒரு தமிழன் மண்ணுக்காக இனத்துக்காக மொழிக்காக எப்படி வாழவேண்டும் என்று தேடிப்பார்க்க அகராதியை புரட்டினால் கிடைக்கும் விடை கண்ணாடி என்னும் சண்முகநாதனின் நாமமே .கிழக்கூர் அம்மா கடைசந்தியை

புதன், 25 பிப்ரவரி, 2026

 புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் என அழைக்கப்படும்

ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில்


----------------------------------------------------------------
முருகன் அடியார்களே மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வயலூர் முருகன் ஆலய புனருதாரண வேலைகள் அனைத்தும் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளன எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முருகன் அருள் கிடைத்துள்ளது அதனை ஒட்டி உங்களோடு ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம் 19 80களில் எமது ஊர் உறவுகள் புலம் பெயர்ந்து வெளிநாடு எங்கும் வாழ்ந்து வருகின்றோம் எமது முதலாவது தலைமுறை சுமார் 55 எழுபது வயது எல்லைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இனி வரும் காலங்கள் எமது இறுதிக் கட்டங்கள் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மை எம்மைத் தொடர்ந்து வரும் ஒரு தலைமுறை தாயகம் எமது ஊர் சமயம் கலை கலாச்சாரம் சமூக நலம் சார்ந்து செயல்படலாம் அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து தமிழ் உறவுகள் தாயகத்தையோ எமது பிறந்து வளர்ந்த ஊரையோ திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் என்பதும் உண்மை ஆகவே நாம் வாழும் காலத்தில் எமது ஊரின் அடையாளங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும் அந்த வகையில் எமது ஊரின் ஆலயங்கள் நாம் செல்வ செழிப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் காலங்களில் செப்ப னிடப்பட்டு பராமரிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் வயலூர் முருகன் ஆலயம் இறுதியாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின்னர் 12 ஆண்டுகள் நிறைவேற்றுள்ளன 12 ஆண்டுகளின் பின் கும்பாபிஷேகம் செய்யப்படுவது வழமை எமது ஆலயத்தை பொறுத்தவரை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பதை விட ஆலயத்தின் பல பகுதிகள் சேதமடைந்திருப்பதனால் இந்த காலகட்டத்தில் புனரு தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம் முக்கியமாக ஆலயத்தின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன இதனால் மின்சார இணைப்புகள் பழுதாகி இருக்கின்றன இவற்றை நாங்கள் உள் கட்டுமானம் செய்யாவிட்டால் பெறுமதி மிக்க மிக்க முழு ஆலயமும் சீரழிந்து விடும் இதனால் செய்ய வேண்டிய முழு வேலைகளும் முடிந்தளவு குறைந்த செலவில் கட்டுப்பாட்டுடனும் சிக்கனத்துடனும் நிறைவேற்றி வைக்க திட்டமிட்டுள்ளோம் கடந்த இரண்டு வருடங்களாக எமது ஆலயத்தில் வரவு செலவு முறைகள் பெரிய சபையின் கண்காணிப்பின் கீழ் மிகவும் சிறப்பாக கையாளப்படுகின்றன ஆலயத்தின் திருப்பணி வீரர்கள் 90விதமானவை நிறைவுற்றுள்ளன மீதி திருப்பணி வேலைகளும் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகளும் தொடர இருக்கின்றன ஆலயம் பலஸ்தானம் செய்யப்பட்ட காலத்திலிருந்து பகிரங்கமாக ஆலய சமூகத்தினருக்கு தேவையான நிதி திரட்டல் சம்பந்தமாக அறிவித்தவர்களை விடுத்துள்ளோம் உலகெங்கும் பறந்து வாழும் முருகன் அடியார்கள் எதிர் பார்த்ததை விட அதிகமாக தமது ஆதரவை எங்களுக்கு நல்கி வருகின்றனர் வெளிநாடுகளில் நாம் வாழும் இயந்திர வாழ்க்கையின் மத்தியில் உங்களை நேரடியாகவோ அல்லது வேறு தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு நிதி திரட்டல் சம்மந்தமான வேண்டுதல்களை விடுத்து வந்துள்ளோம் இதுவரை திருப்பணிக்கான நிதி உதவியை வழங்காதவர்கள் அல்லது அது பற்றிய அறிவித்தவர்களை அறிந்திடாதவர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் நேரடியாக உங்கள் பங்களிப்பை ஆலயத்தின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் உங்களை நேரடியாக நாம் கேட்கவில்லை அல்லது சந்திக்கவில்லை என்று நினைத்துக் கொள்ளாமல் எமது ஆலயம் எமது குலதெய்வம் இம்மை உலகெங்கும் சென்று பொருள் தேடி வர வரம் தந்து வழி அனுப்பி வைத்த வைத்த வயலூர் முருகன் என்று மனதில் எண்ணி ஆன்மீக சிந்தனையை விதைத்து உங்களால் முடிந்த நிதி பங்களிப்பை செய்யுமாறு இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறோம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு நிதி அனுப்பி வைக்க விரும்பினால் தயவு செய்து அனுப்புபவரின் பெயர் வங்கி வரவு பற்று சீட்டில் பதிவாகுமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் மேலதிக விவரங்கள் தேவைப்படின் ஆலய நிர்வாக தலைவர் அல்லது செயலாளர் உடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் பிரித்தானியா பிரான்ஸ் கனடா டென்மார்க் சுவிஸ் ஸ்வீடன் இத்தாலி பின்லாந்து ஆஸ்திரேலியா மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்வோர் நேரடியாக வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கலாம் விரும்பியவர்கள் சுவிஸ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டால் நிறைவான விளக்கம் விட்டுக் கொள்ள முடியும் என்றும் உங்கள் அன்புக்குரிய முருக தொண்டன் சிவசந்திரபாலன் செயலாளர் சுவிஸ் நிர்வாகம் ஸ்விட்சர்லாந்து

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

 Arunasalam Shanmuganathan

வயலூர் கிராம மீள் கட்டுமானப் பணிக்காக சுவிஸ் வயலூர் கிராம மக்களால் அன்பளிப்பு
செய்த உழவு யந்திரம் அதனுடன் கூடிய
வவுசர்,பெட்டி,றொட்டேற்ரர்,
கலப்பை,வரம்புகட்டும் கலப்பை,கம்பிப் கலப்பை என்பனவும் 15.07.2024ல் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் பெயரில் எனக்கு பினான்ஸ் கட்டிய வகையில் எனக்கு தர வேண்டிய 13 இலட்சத்தில்
10 இலட்சத்தை பெற்றுக்கொண்டு உளவுயந்திர யந்திரம் J/22
கிராம சேவகர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டு ஒப்புதல்
கடிதம் ஆலய நிர்வாகத்திடம் பெற்று உழவு யந்திர பிரச்சனை
முடிவுக்கு கொண்டு வரப்பட்டது இதற்கு முன்னின்று முயற்சி செய்தவர்கள் சந்திரபாலன்,கருணாகரன்,
திருச்செல்வம் இவர்களுக்கு எனது நன்றிகள்.......