ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

 புங்குடுதீவு மடத்துவெளி

வயலூர் முருகன் என அழைக்கப்படும்

ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில்

முருகன் அடியார்களே.

மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வயலூர் முருகன் ஆலய புனருதாரண வேலைகள் அனைத்தும் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளன .மார்ச் மாதம் 25 ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்ய முருகன் அருள் கிடைத்துள்ளது அதனை ஒட்டி உங்களோடு ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். 1980களில் இருந்து எமது ஊர் உறவுகள் புலம் பெயர்ந்து வெளிநாடு எங்கும் வாழ்ந்து வருகின்றோம் .எமது முதலாவது தலைமுறை சுமார் 55 --70 வயது எல்லைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இனி வரும் காலங்கள் எமது இறுதிக் கட்டங்கள் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மை. எம்மைத் தொடர்ந்து வரும் ஒரு தலைமுறை தாயகம், எமது ஊர் ,சமயம், கலை ,கலாச்சாரம் ,சமூக நலம் சார்ந்து செயல்படலாம் .அதன் பின்னர் வெளிநாடுகளில் இருந்து தமிழ் உறவுகள் தாயகத்தையோ எமது பிறந்து வளர்ந்த ஊரையோ திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் என்பதும் உண்மை. ஆகவே நாம் வாழும் காலத்தில் எமது ஊரின் அடையாளங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். அந்த வகையில் எமது ஊரின் ஆலயங்கள் நாம் செல்வ செழிப்பாக வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் காலங்களில் செப்பனிடப்பட்டு பராமரிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லபடவேண்டும் .வயலூர் முருகன் ஆலயமும் இறுதியாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் பின்னர் 12 ஆண்டுகளளை கடந்துள்ளனது .12 ஆண்டுகளின் பின் கும்பாபிஷேகம் செய்யப்படுவது வழமை .எமது ஆலயத்தை பொறுத்தவரை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பதை விட ஆலயத்தின் பல பகுதிகள் சேதமடைந்திருப்பதனால் இந்த காலகட்டத்தில் புனருதாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம் .முக்கியமாக ஆலயத்தின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன .இதனால் மின்சார இணைப்புகள் பழுதாகி இருக்கின்றன. இவற்றை நாங்கள் இப்போதே உள்கட்டுமானம் செய்யாவிட்டால் பெறுமதி மிக்க முழு ஆலயமும் சீரழிந்து விடும் -

.இதனால் செய்ய வேண்டிய முழு வேலைகளும் முடிந்தளவு குறைந்த செலவில் கட்டுப்பாட்டுடனும் சிக்கனத்துடனும் நிறைவேற்றி வைக்க திட்டமிட்டுள்ளோம் .கடந்த இரண்டு வருடங்களாக எமது ஆலயத்தில் வரவு செலவு முறைகள் பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் மிகவும் சிறப்பாக கையாளப்படுகின்றன. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் இப்போது 90விதமானவை நிறைவுற்றுள்ளன .மீதி திருப்பணி வேலைகளும் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகளும் தொடர இருக்கின்றன .ஆலயம் பலஸ்தானம் செய்யப்பட்ட காலத்திலிருந்து பகிரங்கமாக ஆலய சமூகத்தினருக்கு தேவையான நிதி திரட்டல் சம்பந்தமாக அறிவித்தல்களை விடுத்துள்ளோம் .உலகெங்கும் பறந்து வாழும் முருகன் அடியார்கள் எதிர் பார்த்ததை விட அதிகமாக தமது ஆதரவை எங்களுக்கு நல்கி வருகின்றனர் .வெளிநாடுகளில் நாம் வாழும் இயந்திர வாழ்க்கையின் மத்தியில் உங்களை நேரடியாகவோ அல்லது வேறு தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு நிதி திரட்டல் சம்மந்தமான வேண்டுதல்களை விடுத்து வந்துள்ளோம் .இதுவரை திருப்பணிக்கான நிதி உதவியை வழங்காதவர்கள் அல்லது அது பற்றிய அறிவித்தவல்களை அறிந்திடாதவர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்து வந்தாலும் நேரடியாக உங்கள் பங்களிப்பை ஆலயத்தின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.உங்களை நேரடியாக நாம் கேட்கவில்லை அல்லது சந்திக்கவில்லை என்று நினைத்துக் கொள்ளாமல் எமது ஆலயம் ,எமது குலதெய்வம், எ ம்மை உலகெங்கும் சென்று பொருள் தேடி வர வரம் தந்து வழி அனுப்பி வைத்த வைத்த வயலூர் முருகன் என்று மனதில் எண்ணி ஆன்மீக சிந்தனையை விதைத்து உங்களால் முடிந்த நிதி பங்களிப்பை செய்யுமாறு இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறோம்.நேரடியாக வங்கிக் கணக்குக்கு நிதி அனுப்பி வைக்க விரும்பினால் தயவு செய்து அனுப்புபவரின் பெயர் வங்கி வரவு பற்று சீட்டில் பதிவாகுமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் .உண்டியல் மூலம் அனுப்பும் போது .உண்டியல் நிறுவனம் உங்கள் பெயரை பதிவிடாதும் விட வாய்ப்புள்ளன. ஒரே நேரத்தில் ஒரே சமதொகையை பலர் அனுப்புமிடத்து அனுப்புபவரின் பெயர் இல்லாதவிடத்து சிக்கல்களை உருவாக்கும். .மேலதிக விவரங்கள் தேவைப்படின் ஆலய நிர்வாக தலைவர் அல்லது செயலாளர் உடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிரித்தானியா.பிரான்ஸ்..கனடா.டென்மார்க் .சுவிஸ் .ஸ்வீடன். இத்தாலி.பின்லாந்து.ஆஸ்திரேலியா மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்வோர் .நேரடியாக வங்கி கணக்குக்கு அனுப்.பி வைக்கலாம் .விரும்பியவர்கள் சுவிஸ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டால் நிறைவான விளக்கத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வயலூர் முருகன் அருள் என்றென்றும் உங்களுக்கு கிட்டுவதாக

என்றும் உங்கள் அன்புக்குரிய முருக தொண்டன்

சிவ-சந்திரபாலன்

செயலாளர்

சுவிஸ் நிர்வாகம்

சுவிட்சர்லாந்து

09.02.2026

வங்கிக் கணக்கு . Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Vellanai Jaffna. Online Code:7010 Vellanai.

 தொடர்புகளுக்கு 

சு .சண்முகநாதன்  079 538 39 20.(தலைவர் )

திருமதி  கௌசலா மோகனதாஸ்0 077 866  40 05 (செயலாளர் ) 

.ந.செல்வன்..077 198 56 88.(பொருளாளர் ).

இ.ரவீந்திரன் 078 218 70 75..(தலைவர் .சுவிஸ் கிளை ) 

.அ .கைலாசநாதன் 079 957 32 89 . (குழந்தை .பொருளாளர் .சுவிஸ்கிளை ) .

சிவ-சந்திரபாலன்.079 12  0000 6 . (செயலாளர் .சுவிஸ் கிளை )

சு..பத்மநாதன்-001416 303 65 26 (கனடா கிளை .) 


புதன், 28 ஜனவரி, 2026

 

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்

மஹோற்சவ கிரியைகளும் அதன் தாற்பரியமும்
உற்சவம் (உத்சவம்) என்னும் சொல் விழா என்று பொருள் பெறும். இச் சொல்லுக்கு உத்தமமான யாகம் என்றும், மேலான ஐந்தொழில்கள் என்றும் உட்பொருள்கள் கூறுவர்.

திங்கள், 12 ஜனவரி, 2026

புங்குடுதீவு மடத்து வெளி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

சுவிஸ் நிர்வாக பொதுக்கூட்டம்

கூட்ட றிக்கை

சுவிஸ் நிர்வாக பொதுக்கூட்டம் கடந்த 11-ம் தேதி காலை 10:30 மணி அளவில் சுவிஸ் பேண் நகரில் சிறப்பாக நடைபெற்று உள்ளது இறை வணக்கத்துடன் கூட்டத்தினை ஆரம்பித்த தலைவர் தனது உரையை நிகழ்த்தி வைத்தார் தொடர்ந்து செயலாளர் தனது உரையில் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் ஆலோசிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சுருக்கமாக கூறி அமர்ந்தார் அடுத்து பொருளாளர் ஆலயத்தின் பாலஸ்தான கிரியை தொடக்கம் அன்று வரையிலான வரவு செலவு நிதி அறிக்கைதனை சமர்ப்பித்தார் அதனைத் தொடர்ந்து நிர்வாகமும் சபையினரும் பின்வரும் விஷயங்கள் பற்றி ஆழமாக அலசி ஆராய்ந்து பல முடிவுகளை எடுக்க கூடியதாக இருந்தது சபையில் ஆலோசிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு கும்பாபிஷேக நிதி வரவு செலவு பற்றிய திட்டமிடல் கும்பாபிஷே காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் அவற்றை ஒழுங்கமைத்தல் புனருத்தான வேலைகளை தவிர வேறு வேலைகள் அன்னதான மடம் ஐயர் வீடு வீதி அமைப்பு கும்பாபிஷேக மலர் ஆலயத்துக்கான இணையம் என்பன பற்றி ஆலோசிக்கப்பட்டது எதிர் வரும் காலங்களில் ஆலயத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நிதி வளத்தினை கட்டி எழுப்புதல் ஆலய பணிகளுக்கு அப்பால் எமது கிராமத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவுதல் போன்ற விஷயங்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன சபையினர் இப்போதைய ஆலய நிர்வாகமும் சுவிட்சர்லாந்து நிர்வாகமும் மிகவும் சிறப்பாக கட்டுப்பாடுடன் நேர்மையாக பாராட்டப்படக்கூடிய செயற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்தனர் முக்கியமாக ஆலயத்தின் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த மோசமான நிதி நிலைமையை திறம்பட சீரமைத்து இப்போதைய உயர்ந்த நிலைக்கு எடுத்து வந்தது பாராட்டப்பட்டது அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது மிகவும் மோசமான குளிர் காலத்திலும் கூட்டத்தில் பங்கு பற்றிய உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது .நன்றி

உங்கள் அன்புக்குரிய

சிவ சந்திரபாலன்

செயலாளர்

சுவிஸ் வயலூர் முருகன்

நிர்வாக சபை .

12.01.2028

அழைப்பினை ஏற்று கூட்டத்தில் பங்கு பற்றி சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் அனைவருக்கும் வயலூர் முருகன் அருள் புரிவார்

சனி, 10 ஜனவரி, 2026

 


மடத்துவெளி அருள்மிகு வயலூர் முருகன் ஆலயம்

சுவிஸ் நிர்வாக பொதுக் கூட்டம்
----------------------------------------------
அன்புடையீர்!
அருள்மிகு வயலூர் முருக பெருமானின் திருவருளால்,
மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயப் பணிகள்
மேலும் சிறப்புற நடைபெற வேண்டிய
புனித நோக்குடன்,
11.01.2026 (ஞாயிற்றுக்கிழமை)
காலை 10:00 மணிக்கு,
Treffpunkt – Untermatt
Bümplizstrasse 21,
3027 Bern
என்னுமிடத்தில்
மடத்துவெளி வயலூர் முருகன்
சுவிஸ் நிர்வாக பொதுக் கூட்டம்
நடத்த திருவருள்கைகூடியுள்ளது.
ஆகவே, முருக பக்தர்கள்,
மடத்துவெளி – ஊரதீவு உறவுகள்
அனைவரையும் அன்போடும் பணிவோடும் இந்தப் பொதுக்
கூட்டத்தில் கலந்து கொண்டு,
தங்களின் ஆதரவும்
ஆலோசனையும் வழங்குமாறு
முருகன் திருவருளால்
மனமார்ந்த வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல் :
1.தலைவர் உரை
2.செயலாளர் உரை
3.பொருளாளர் கணக்கறிக்கை
• பாலஸ்தான் நிகழ்விலிருந்து தற்போதைய நிலவரம்
• சுவிஸ் நிதி தொடர்பான விபரங்கள்
• உலக நாடுகளிலிருந்து ஆலய வங்கி கணக்கிற்கு
பெறப்பட்ட அன்பளிப்பு விபரங்கள்
4.மகா கும்பாபிஷேக ஆலய புனருத்தான செயற்பாடுகள்
5.ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்ட பண விபரங்கள்
6.கும்பாபிஷேக திகதி குறித்த
• அதற்கான வேலைத்திட்டங்கள்
• எதிர்வரும் தேவைகள்
இந்தப் புனித முயற்சிக்கு
தங்களின் வருகையும் ஆதரவும்
மிகவும் அவசியமானது.ஆகவே
அனைவரும் தவறாது கலந்து கொள்ள பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
பின் குறிப்பு:
கூட்டத்திற்கு வருகை தரவிருக்கும் அன்பர்கள்
முன்கூட்டியே தகவல் வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
(மதிய உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியதினால்)
நன்றியுடனும் பக்தியுடனும்,
சிவ-சந்திரபாலன்.
செயலாளர்
சுவிஸ் வயலூர் முருகன்
நிர்வாக சபை
04.01.2026

திங்கள், 15 டிசம்பர், 2025

 அனபான உறவுகளே,முருக பக்தர்களே அனைவருக்கும் அன்பு

வணக்கம்.இன்று கனடா வாழ் முருக பக்தர்கள்.
அருள்மிகு வயலூர் முருக பெருமானின்
மகா கும்பாபிஷேக நிதிக்காக தாங்கள் உறுதிமொழியுடன்,
ஆழ்ந்த பக்தி உணர்வுடன், அன்பும் ஆதரவும் கலந்த மனப்பூர்வ அர்ப்பணிப்பாக.
திரு&திருமதி அம்பலவாணர்
திருவருட்செல்வன்(ராசன்)அவர்கள்
3000.00 கனடியன்டொலர்.
திரு&திருமதி மார்கண்டு
மோகனபாலன் அவர்கள்
2500.00 கனடியன் டொலர்
திரு&திருமதி திருநாவுக்கரசு
கருணாகரன்(கரன்)
2500.00 கனடியன் டொலர்.
மொத்தமாக 8000.00 கனடியன் டொலர் புனிதப் பணத் தொகை,
எங்கள் கரமடைந்து புனிதப் பணிக்குச் சேர்ந்துள்ளது என்பதை
மனமார்ந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அர்ப்பணிப்பு
ஒரு சாதாரண கொடை அல்ல—
திருவருளில் பிறந்த ஒரு தெய்வீக சேவை. வயலூர் முருகனின் திருக்கோயில். புது ஒளியில் விளங்க வேண்டும் என்ற உங்கள் பக்தியும் பாவனையும். எங்கள் இதயத்தில் மிகுந்த நன்றியையும் ஆழ்ந்த பாசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த போன்ற புனிதப் பணிகளில் உங்கள் தாராள மனமும்,
உண்மையான முருக பக்தியும் ஒரு சக்தியாக, ஒரு அருள்துளியாக எங்களுக்கு துணை நிற்கிறது.
உங்கள் அருள்பூர்வ பங்களிப்பு கும்பாபிஷேகப் பணிகளில்
ஒரு மாற்ற முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. அருள்மிகு வயலூர் முருக பெருமான், வேல் ஒளியால் உலகை காக்கும் அந்த தெய்வம், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என்றும் பின்பற்றும் நிழலாக இருப்பாராக.
ஆரோக்கியம் பெருகட்டும்,
ஆனந்தம் மலரட்டும்,
ஐசுவரியம் வளம் தரட்டும்,
சேவை–பக்தி இரண்டும் என்றும் துணையாகட்டும். தங்களின் நற்செயல் இந்த புனித முயற்சிக்குப் பாசமும், பெருமையும்,
உற்சாகமும் சேர்த்துள்ளது. அதற்காக எங்கள் நன்றி
எண்ணிலும் அளவிலும் எட்டாது.
**வாழ்க வளமுடன், வாழ்க பக்தியுடன், வாழ்க முருகன் அருளுடன்!**
சுவிஸ் நிர்வாக சபை சார்பாக,
வி.அ.கைலாசநாதன் (குழந்தை)
பொருளாளர்

ஞாயிறு, 23 நவம்பர், 2025

 வயலூர் முருகன்  அடியார்களுக்கு  வணக்கம் 


எதிர்வரும் மார்ச் 25 ஆம்  திகதி  எமது வயலூர்  முருகனுக்கு   கும்பாபிஷேகம்  செய்ய   முருகப்பெருமானின்  அருள்  பாலித்துள்ளது . துரிதமாக  நடைபெற்றுவரும்  எமது ஆலயத்தின் திருப்பணி வேலைகளுக்கு  உங்கள்  பங்களிப்பை  செய்ய  விரும்பும்  எவரும்  பின்வரும்   வழிகளில் உங்கள்  நிதி வழங்கலை   செய்து  வயலூர் முருகனின் அருளை  பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

உங்கள்  நாடுகளில் உள்ள  எமது  பிரதிநிதிகளிடமோ அல்லது நேரடியாக  வங்கி கண்ணக்குக்கோ  உங்கள் பங்களிப்பை  செய்யுங்கள். நன்றி-

வங்கிக் கணக்கு . Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Vellanai Jaffna. Online Code:7010 Vellanai.

 தொடர்புகளுக்கு 

சு .சண்முகநாதன்  079 538 39 20.(தலைவர் )

திருமதி  கௌசலா மோகனதாஸ்0 077 866  40 05 (செயலாளர் ) 

.ந.செல்வன்..077 198 56 88.(பொருளாளர் ).

இ.ரவீந்திரன் 078 218 70 75..(தலைவர் .சுவிஸ் கிளை ) 

.அ .கைலாசநாதன் 079 957 32 89 . (குழந்தை .பொருளாளர் .சுவிஸ்கிளை ) .

சிவ-சந்திரபாலன்.079 12  0000 6 . (செயலாளர் .சுவிஸ் கிளை )

சு..பத்மநாதன்-001416 303 65 26 (கனடா கிளை .) 



 

வியாழன், 20 நவம்பர், 2025

 

முருகன் 

               ஒம்சரவணபவஓம்

முருகன்- அழகன் 
பெருமான்-கௌமார சமய நெறிகளின் தலைவன். 
வேறுபெயர்கள்- ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமண்யன், பழனிஆண்டவன், குமரன், சிங்கார வேலன், வேலாயுதன், சரவணபவன், ஞானபண்டிதன், ஸ்கந்தன், காங்கேயன், ஷண்முகன், தகப்பன்சாமி, 

எண் ஒன்று ----எண் ஒன்பது

 

எண் ஒன்று (சூரியன்)

Written by 

1.எண் ஒன்று (சூரியன்)

பிறவிஎண்-1

ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 1, 10, 19, 28 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-1

எண்ணின் அதிபதி-

சூரியபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

1, 10, 19, 28

அதிர்ஷ்ட கிழமைகள்-

எண்

 

எல்லாவற்றிற்கும் வேதங்கள் அடிப்படை. ஆகமங்கள் அதனின் விரிவு. அதனால் பயனாவது 64 கலைகளாகும். இந்தக் கலைகளுக்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்புகளை அளவிடமுடியாது. அதில் ஒன்று சோதிடக்கலை. அதில் ஒரு பகுதியாக எண்கணித சோதிடம் (Numerology) இருக்கின்றது. தனித்தன்மைவாய்ந்த எழுத்துக்களைப்போல் எண்களுக்கும் உயிர்சக்தி இருக்கின்றது. இந்த நாளில் பிறந்தவர்க்கு இன்ன எண் முக்கியமானது என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எண் எது எனத்தெரிந்து கொண்டால் அது பொருந்துகிறதா என நீங்களே சரி பார்க்கலாம்.

செவ்வாய், 18 நவம்பர், 2025

 

சகல நன்மைகளைத் தரும் ஸ்ரீ ஐயப்பன் கவசம்

featured-imgfeatured-img

 

சரணம் சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

featured-imgfeatured-img

கார்த்திகை மாதச் சிறப்பு

கார்த்திகை மாதம் பிறந்தாலே, எங்கெங்கும் ஐயப்ப பக்தர்களின் சரண

சனி, 15 நவம்பர், 2025

 வயலூர் முருகன் கும்பாபிஷேகம் மார்ச்25

 வயலூர் முருகன்கொடியேற்றம் ஏப்ரல் 06-தேர் ஏப்ரல்14- தீர்த்தம் ஏப்ரல்15

கொம்மாப்பிட்டி பிள்ளையார் கொடியேற்றம் ஏப்ரல்06-தேர் ஏப்ரல்14-தீர்த்தம் ஏப்ரல்15-

 பாணாவிடை சிவன் கொடியேற்றம் மே01-தேர் மே09-தீர்த்தம் மே10

கண்ணகி அம்மன் கொடியேற்றம் ஏப்ரல்17-தேர் ஏப்ரல்30- தீர்த்தம் மே01

 வயலூர் முருகன்  அடியார்களுக்கு  வணக்கம் 


எதிர்வரும் மார்ச் 25 ஆம்  திகதி  எமது வயலூர்  முருகனுக்கு   கும்பாபிஷேகம்  செய்ய   முருகப்பெருமானின்  அருள்  பாலித்துள்ளது . துரிதமாக  நடைபெற்றுவரும்  எமது ஆலயத்தின் திருப்பணி வேலைகளுக்கு  உங்கள்  பங்களிப்பை  செய்ய  விரும்பும்  எவரும்  பின்வரும்   வழிகளில் உங்கள்  நிதி வழங்கலை   செய்து  வயலூர் முருகனின் அருளை  பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

உங்கள்  நாடுகளில் உள்ள  எமது  பிரதிநிதிகளிடமோ அல்லது நேரடியாக  வங்கி கண்ணக்குக்கோ  உங்கள் பங்களிப்பை  செய்யுங்கள். நன்றி-

வங்கிக் கணக்கு . Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Vellanai Jaffna. Online Code:7010 Vellanai.

 தொடர்புகளுக்கு 

சு .சண்முகநாதன்  079 538 39 20.(தலைவர் )

திருமதி  கௌசலா மோகனதாஸ்0 077 866  40 05 (செயலாளர் ) 

.ந.செல்வன்..077 198 56 88.(பொருளாளர் ).

இ.ரவீந்திரன் 078 218 70 75..(தலைவர் .சுவிஸ் கிளை ) 

.அ .கைலாசநாதன் 079 957 32 89 . (குழந்தை .பொருளாளர் .சுவிஸ்கிளை ) .

சிவ-சந்திரபாலன்.079 12  0000 6 . (செயலாளர் .சுவிஸ் கிளை )

சு..பத்மநாதன்-001416 303 65 26 (கனடா கிளை .) 

  தொடர்புகளுக்கு 

சு..பத்மநாதன்-001416 303 65 26 (கனடா கிளை .) 

  தொடர்புகளுக்கு 


இ.ரவீந்திரன் 078 218 70 75..(தலைவர் .சுவிஸ் கிளை ) 

.அ .கைலாசநாதன் 079 957 32 89 . (குழந்தை .பொருளாளர் .சுவிஸ்கிளை ) .

சிவ-சந்திரபாலன்.079 12  0000 6 . (செயலாளர் .சுவிஸ் கிளை )

  தொடர்புகளுக்கு 

சு .சண்முகநாதன்  079 538 39 20.(தலைவர் )

திருமதி  கௌசலா மோகனதாஸ்0 077 398 40 06 (செயலாளர் ) 

.ந.செல்வன்..0771985688.(பொருளாளர் ).

இ.ரவீந்திரன் 078 218 70 75..(தலைவர் .சுவிஸ் கிளை ) 

.அ .கைலாசநாதன் 079 957 32 89 . (குழந்தை .பொருளாளர் .சுவிஸ்கிளை ) .

சிவ-சந்திரபாலன்.079 12  0000 6 . (செயலாளர் .சுவிஸ் கிளை )

சு..பத்மநாதன்-001416 303 65 26 (கனடா கிளை .) 

0
முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி