முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

சனி, 30 ஆகஸ்ட், 2025

பாலஸ்தாபனம்

 

மடத்துவெளி வயலூரில், முருகன் தலம் மின்னுது,

பாலஸ்தாபன கும்பாபிஷேகம் – பரவசமே தினமும் பொங்குது!
வெண்மயிலில் வீறுடன் வந்தாய், வேலொளியில் விளங்குகின்றாய்,
வாழ்வின் வலிமை தரும் முருகா, எங்கள் நெஞ்சம் நிறைந்திடுவாய்!
பசுமை வயலின் நடுவே, பக்தி பூமி செழிக்குது,
வாழ்நாள் ஆசைகள் எல்லாம், அடி பணிந்து திறக்குது.
வேள்விகள் புகைபடர, வேதங்கள் ஒலிக்குதே,
மணமாடும் மஞ்சள் நீரில், முருகன் வடிவம் ஒளிக்குதே!
வள்ளி தெய்வானை பக்கம், சிரிக்கும் முகம் சாந்தமே,
பார்த்தவுடன் பரிசுத்தம், பரிவின் பெரும் யாந்தமே.
அருணோதயத்திலே எழுந்து, ஆராதனை செய்யவே,
அழகு அர்ச்சனை ஓங்கி, ஆசீர்வாதம் பெறவே!
அருளால் எழுந்த ஆலயம், அகிலம் பூஜிக்கச் செய்க,
மணிவிழா போல கும்பாபிஷேகம், மகிழ்ச்சி தேறிட செய்க!
மடத்துவெளி முருகா, எங்கள் வாழ்வில் வாழ்ந்திடுவாய்,
வேலால் தடைகளை அகற்றி, வெற்றி நல்கி மகிழ்வடையவாய்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக