புங்குடுதீவு மடத்துவெளி ஸ்ரீ பாலசுப்பிரமானிய சுவாமி மீது பாடப்பட்டகந்தரேசல்
///////////////////////////////////////////////
வெண்பா
சீரார மடத்துவெளி சேர் செய்ய கந்தவேற்கு
பாராருமேசலைதான் பாடுதற்கு .. காராரும்
ஐந்துக்கரத்தண்ணலெனும் அன்பரிதயத்துள்
தந்திமுகத் தெந்தை சரண் .
நூல்
பூதலத்தோர் போற்றும் மடத்துவெளி
இறைவராம் கந்தர்க்கு ஏசல் பாட
அரசமரத்தடி ஆதிவிநாயகர்
பதமலரடியினைக்காப்பு --எழில்
பதமலரடியினைக்காப்பு
தெய்வயானை
மங்கையே சண்பகம் கதவினைத் தட்டியே
திறவென்று சொன்னவர் யாரோ --இந்த
வீதியில் வந்தவர் யாரோ
கந்தசுவாமி
கட்டிக்கரும்பேயெனை யறியாயோ நான்தான்
மடத்துவெளி வயலூர் கந்தன் --பெண்ணே கந்தன்
தெய்வயானை
வயலூர் பதியினில் வள்ளியை நீர் விட்டு
எப்படிச் சாமத்தில் வந்தீர்--சுவாமி
எப்படிச் சாமத்தில் வந்தீர்
கந்தசுவாமி
பெண்ணே நின் பல்லொளி வெண்ணில்வைத் தர
வந்தேனே நானிந்த வேளை --மாதே
வந்தேனே நானிந்த வேளை
தெய்வயானை
இந்த வேளை இரு யோசனை தூரத்தை
எவ்விதம் நடந்து வந்தீரோ --சுவாமி
எவ்விதம் நடந்து வந்தீரோ
கந்தசுவாமி
மாதரசே யுனை மனதினில் நினைத்தால்
யோசனை தூரமென்ன தூரம் -இரு
யோசனை தூரமென்ன தூரம்
தெய்வயானை
ஒருகானமுமை விட்டுப் பிரியாளே யந்த வள்ளி
எப்படி ஓடி வந்தீரோ -சுவாமி
எப்படி ஓடி வந்தீரோ
கந்தசுவாமி
சுந்தரியவளை விட்டு உந்தன் முகத்தைக்காண
ஆசை கொண்டு தேடி வந்தேன் -பெண்ணே
ஆசை கொண்டு தேடி வந்தேன்
தெய்வயானை
காண வந்ததிலென்ன கையினில் மடியினில்
கையுறை கொண்டு வந்தீரோ --சுவாமி
கையுறை கொண்டு வந்தீரோ
கந்தசுவாமி
விரும்பிய பொருளெல்லாம் நானிங்கு தருகின்றேன்
விரைவுடனே சொல்லு நீயே --பெண்ணே
விரைவுடனே சொல்லு நீயே
தெய்வயானை
உம்முடைப் பொருளொன்றும் எனக்கு நீர் தரவேண்டாம்
எழுந்து நீர் வள்ளியிடம் ஓடும் --சுவாமி
எழுந்து நீர் வள்ளியிடம் ஓடும்
கந்தசுவாமி
கண்மணியே யென்னைக் கருதிநீ வந்தணைந்தால்
கனவிலு முனைப்பிரியேனே -சுவாமி
கனவிலு முனைப்பிரியேனே
தெய்வயானை
வனிதையாம் வள்ளியை வதுவை செய் செய்திட்டிங்கு
வார்த்தை பழக்க வந்தீரோ --சுவாமி
வார்த்தை பழக்க வந்தீரோ
கந்தசுவாமி
வார்த்தை பழக்கிட வல்லவனல்ல நான்
மனதிற் கோபம் செயாதே -உன்
மனதிற் கோபம் செய்யாதே
தெய்வயானை
இனியேதும் பேசினா விருக்குது காரியம்
எழுந்தப்பாலே போம் சுவாமி - இப்போ
எழுந்தப்பாலே போம் சுவாமி
கந்தசுவாமி
பொண்ணு மணியே யென் பொற்கிளியே யினி
பூங்கையாற் கதவைத் திறப்பாயே -கண்ணே
பூங்கையாற் கதவைத் திறப்பாயே
தெய்வயானை
கதைத்திற வென்று கனக்கவே பேசுகின்றீர்
கனதனமென்ன கொண்டு வந்தீர் -சுவாமி
கனத்தனமென்ன கொண்டு வந்தீர்
கந்தசுவாமி
புங்குடுதீவு நகர்ச்செல்வர் காணிக்கையாக வைத்த
வைரப்பதக்கமொன்று தாரேன் -உனக்கு
வைரப்பதக்கமொன்று தாரேன்
தெய்வயானை
வைரப்பதக்கமதை மாயவள்ளியது
மார்பினில் விடடலகு பாரும்
தைப்பூச நன்னாளில்
கந்தசுவாமி
திகழும் பொன்மாலைகள் தாரேன் -பெண்ணே
திகழும் பொன்மாலைகள் தாரேன்
தெய்வயானை
திகழும் பொன்மலையை தெரிவையாம்
வள்ளி கழுத்தில் நீரிட்டுப்பாரும் -சுவாமி
கழுத்தினில் நீரிட்டுப்பாரும்
கந்தசுவாமி
கார்த்திகை நாட்களில் காணிக்கையாகவைத்த
கனகநற்காப்புக்களுண்டு -பெண்ணே
கனகநற்காப்புக்களுண்டு
தெய்வயானை
கதவினைத் திறந்திட நீர் செய்யும் சூழ்ச்சியோ
கண்ணில்லவரை நான் பாரேன் -சுவாமி
கண்ணிலவரை நான் பாரேன்
கந்தசுவாமி
அடைத்திடவுன் கதவினைத் திறக்கவோர் மந்திரம்
என்னிடத்திலிருக்குது பாராய்-பெண்ணே
என்னிடத்திலிருக்குது பாராய்
தெய்வயானை
இக்கணம் கதவினைத் திறப்பீரோ யாமாகில்
இன்பமுடனணை வேனே --உம்மை
இன்பமுடனணை வேனே
பொது
காங்கேயன் ஐந்தெழுத்தை கருத்துடன் செப்பவே
கதவுதான் திறந்தது தானே-அப்போ
கதவு தான் திறந்தது தானே
வதிருத்தம்
வையகமது வாழி வான்முகில் பொழிந்துவாழி
வையகமதனைக் காக்கும் மன்னனோடனும் வாழி
வையகமதனில் நீறும் நிகரில்லா றெழுத்தும் வாழி
வையகம் போற்றும் கந்தரேசலும் சிறந்து வாழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக