செவ்வாய், 21 அக்டோபர், 2025

 புங்குடுதீவு மடத்துவெளி  பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

குடமுழுக்கு மலர் வெளியீடு 

äääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääää

  அடியார்களுக்கு  இறை  வணக்கம் 

எதிர்வரும் மார்ச் 25 அன்று  எமது குலதெய்வம் வயலூர்  முருகனுக்கு குடமுழுக்கு  நிகழ்த்த  எல்லாம் வல்ல  மடத்துவெளி முருகன் அருள் பாலித்துள்ளார் .

இந்த குடமுழுக்கு  நாளில் ஒரு  மலர் ஒன்றினை  வெளியிட்டு வைக்க  நிர்வாகம் முடிவு செய்துள்ளது .இந்த மலரில்  இடம்பெறவென வாழ்த்துரைகள், .வரலாற்று நிகழ்வுகள், ஆலய  விழா நடைமுறைகள் சம்பவங்கள்  தொடர்பிலான அனுபவங்கள் நினைவலைகள் ,  ஆலய தொடர்பிலான  ஆன்மீகக் கட்டுரைகள் ,என பல்வேறு ஆக்கங்களை  நீங்களும்  எழுதி அனுப்பலாம் . உங்களது கடவுச்சீட்டு அளவிலான நிழல் படத்துடன் மின்னஞ்சல் , வாட்சப், வைபர் மூலமாக  அனுப்பிவைக்க முடியும் ..ஆக்கங்களில் இலக்கண, சொல் ,பொருள் தவறுகள் இருப்பின் உங்கள் விருப்பத்தோடு உங்களை  கொண்டு  திருத்தி அமைப்போம் . . தரமான அரிதான ஆலய  சம்பந்தமான நிழல் படங்கள்  இருந்தால் எமக்கு அனுப்பி   வைத்தால் சிறப்பாகும் . , மலர்  அமைப்பு வேலைகளில் கடைசி நேர பதடடத்தை  தடுக்குமுகமாக  முன்கூட்டியே  உங்கள் ஆகக்கங்களை  அனுப்பி  வைக்குமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . இந்த  மலர் எமது ஆலயத்தின் மிகமுக்கியமான ஒரு வரலாற்று ஆவணமாக  .திகழும்  நன்றி 

சிவ-சந்திரபாலன் .


ஆலய சுவிஸ் நிர்வாக செயலாளர்

.சுவிட்சர்லாந்து .

.pungudutivu1@gmail.com 

 0041791200006

22.10.2025.


வெள்ளி, 17 அக்டோபர், 2025

 


புங்குடுதீவு மடத்துவெளி 

ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமிகோவில்

-----------------------------------------------"மஹாகும்பாபிஷேகம் : 25.03.2026 "

"மகோற்சவம் "
கொடியேற்றம்:06.04.2026
தேர்:14.04.2026
தீர்த்தம்:15.04..2026

மண்ணானாலும் திருச்செந்தூரில்

 

முருகன்   -   

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

திருச்செந்தூரின் கடலோரத்தில்

 

முருகன்   - 

திருச்செந்தூரின் கடலோ ரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்

காவடிப்பாட்டு

 

முருகன்   -
காவடியாம் காவடி
கந்தவேலன் காவடி
கண்கொள்ளாக் காட்சிதரும்
கடம்பனுக்குக் காவடி

என்னப்பனே ... என் அய்யனே

 

முருகன்   - 

  
என்னப்பனே ... என் அய்யனே
என்னப்பனே ... என் அய்யனே ... கந்தப்பனே கந்தக் காருண்யனே

பாசி படர்ந்த மலை முருகையா

 

முருகன்   -
பாசி படர்ந்த மலை முருகையா
பங்குனித்தேர் ஓடும் மலை முருகையா
ஊசி படர்ந்த மலை முருகையா
உருத்திராக்ஷம் காய்க்கும் மலை முருகையா


மலைக்குள் மலை நடுவே முருகையா
மலையாள தேசமப்பா முருகையா
மலையாள தேசம் விட்டு முருகையா
மயிலேறி வருவாயிப்போ முருகையா

அந்த மலைக்குயர்ந்த மலை முருகையா
ஆகும் பழநி மலை முருகையா
எந்த மலையைக் கண்டு முருகையா
ஏறுவேன் சந்நிதி முன் முருகையா

ஏறாமல் மலை தனிலே முருகையா
ஏறி நின்று தத்தளிக்க முருகையா
பாராமல் கைகொடுப்பாய் முருகையா
பழநிமலை வேலவனே முருகையா

வேலெடுத்து கச்சை கட்டி முருகையா
விதவிதமாய் மயிலேறி முருகையா
கோலா கலத்துடனே முருகையா
குழந்தை வடிவேலவனே முருகையா

உச்சியில் சடையிருக்க முருகையா
உள்ளங்கை வேலிருக்க முருகையா
நெற்றியில் நீறிருக்க முருகையா
நித்தமய்யா சங்குநாதம் முருகையா

தேரப்பா தைப்பூசம் முருகையா
தேசத்தார் கொண்டாட முருகையா
இடும்பன் ஒரு புறமாம் முருகையா
இருபுறமும் காவடியாம் முருகையா

ஆற்காட்டு தேசத்திலே முருகையா
ஆறு லட்சம் காவடிகள் முருகையா
தென்னாட்டு சீமையிலே முருகையா
தேசமெங்கும் காவடிகள் முருகையா

கடம்ப வனங்கண்டு முருகையா
காட்சிதர வருவாயிப்போ முருகையா
பாவிநான் என்றுசொல்லி முருகையா
பாராம லிருக்கிறாயோ முருகையா

பழநி நான் வருகிறேனே முருகையா
பார்த்துவரம் தந்திடுவாய் முருகையா

சென்னிக்குள நகர் வாசன்

 

முருகன்   - 
  
சென்னிக்குள நகர் வாசன் -தமிழ்த்
தேரும் அண்ணாமலை தாசன் செப்பும்
ஜகமெச்சிய மதுரக்கவி அதனைப்புய வரையில்

வாவா முருகா வடிவேலா

 

முருகன்   - 

வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா

வாவா முருகா வடிவேலா
வளரும் தமிழே சிவபாலா
கருணை பொழியும் கதிர்வேலா – எனைக்
காக்கும் துணையாய் வருவாயே

சக்திக் கனலாய் உருவாகி
சரவணப் பொய்கை மலராகிக்
கார்த்திகை பெண்கள் தாலாட்டக்
கருணை வடிவாய் வளர்ந்தவனே

தங்க ரதங்கள் கொண்டவனே
தரணி புகழும் ஆண்டவனே
சரவணபவ ஓம் மந்திரத்தில்
சகலமும் அடக்கி ஆள்பவனே

பஞ்சாமிர்தம் பன்னீரு
பாலுடன் தேனுடன் திருநீறு
சந்தனம் மணக்கும் உந்தன்மேனி
ஷ்ண்முகநாதா உன்புகழ் சொல்லும்

கால்நடை வருவோர் ஒருபக்கம்
காவடி சுமப்போர் மறுபக்கம்
இடுமபன் காவல் இப்பக்கம்
கடம்பன் காவல் எப்பக்கம்

அன்னை தந்த வேலடுத்து
அசுரர் குலத்தை அழித்தொழித்து
சேவலை மயிலை உன்னிடமாக
ஜெகமே புகழக் கொண்டவன் நீயே

தேவர் மூவர் சிறைமீட்டு
தெய்வானை கரம் பிடித்து
திருப்பரங்குன்றத் திருமணக்கோலம்
தினமும் காட்சி தருபவன் நீயே

பழமுதிர்ச் சோலை மரமாகிப்
பார்த்தவர் மயங்கும் கிழமாகி
வம்புக்கார வள்ளிப் பெண்ணின்
வளைக்கரம் பற்றிய பெருமான்நீயே

வள்ளியம்மை சடையப்பர்
வழங்கிய நல்ல மண்டபத்தில்
அள்ளித் தந்திடும் வள்ளல் முருகன்
ஆடுகின்றார் பொன் ஊஞ்சல்

செம்மட பட்டி ஊஞ்சலிலே
சின்ன குழந்தை வடிவேலன்
வண்ணப் பூக்கள் தொட்டுத்தழுவ
வடிவேலுடன் ஆடுகின்றான்

செம்மட பட்டி ஊஞ்சலிலே
ஜெகமே புகழும் உன்னழகை
கண்டால் போதும் கவலைதீரும்
கஷ்டம் எல்லம் ஓடுப்பொகும்

அண்ண மலையும் அகம்கிழ்ந்தே
அப்பா முருகா உனக்கென்றே
செய்து வைத்த வெள்ளிஊஞ்சல்
புள்ளி மயிலாய் ஆடுதய்யா

மழலைச் சிரிப்பு அழகோடு
மாதா தந்த வேலோடு
அழகிய ஊஞ்சல் ஆடிம்கிழ்ந்திடும்
ஆனந்த காட்சிக்கு ஈடே இல்லை

அய்யா என்றே பெருமையுடன்
அடியவர் வணங்கும் அருளாடி
அள்ளித் தந்திடும் திருநீற்றீல்
அப்பா உன்முகம் கண்டோமே

காவடி ஆடிடும் அழகினிலே
கலந்து நின்று சிரிப்பவனே
திருவடி சரணம் சரணமென்றே
தினமும் பணிவேன் நலந்தருவாயே

சந்தத் தமிழில் நான்பாட
ஷ்ண்முக நாதா வந்திடுவாய்
வந்தென் இல்லம் தங்கியிருந்தே
வளங்கள் எல்லாம் தருவாயப்பா

செய்யும் தொழில்கள் சிறந்திடவே
சிறப்புடன் வளங்கள் பெருகிடவே
தொட்ட தொழிலில் நட்டம் வராமல்
தொடர்ந்து லாபம் தருவாயப்பா

ஆடிடும் காவடி அழகினிலே
அற்புதம் காட்டும் வேலவனே
ஆடும்மயிலும் அற்புத வேலும்
உன்னுடன் காண வந்திடு முருகா

அன்ன தானம் செய்திடுவோம்
அப்பா உன்னைப் புகழ்ந்திடுவோம்
பண்ணை எல்லாம் செல்வம் கொழிக்க
பழம் நீ அப்பா வருவாயே

அப்பா முருகா என்போமே
ஆனந்த முருகா என்போமே
எப்பொழுதும் என்பக்கம் இருந்து
எல்லா நலமும் தருவாய்யப்பா

தங்கத் தேரில் பவனிவரும்
ஷ்ண்முக நாதன் திருமுகத்தைக்
கண்டால் போதும் கவலைதீரும்
கஷ்டம் எல்லாம் ஓடிப்போகும்

சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்

 

முருகன்   - 
அ. மருதகாசி
சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன்
செந்தில் வளர் கந்தன்

எட்டுக்குடி நொண்டிச்சிந்து சீர்மேவும் எட்டிக்குடி வாழும்

 

முருகன்   - 

சீர்மேவும் எட்டிக்குடி வாழும் ...... வேல் வேல்
தெய்வானை தன்னுடைய மணாளனே ...... வா வா

ஆடு மயிலே கூத்தாடு மயிலே

 

முருகன்   - 

ஆடு மயிலே கூத்தாடு மயிலே கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே
ஆடு மயிலே கூத்தாடு மயிலே

ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே

 

முருகன்   - 

ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே
அரோகரா என்று சொல்லிப் பாடிவாரோமே
தேடி வந்தோர் வாழ்க்கையிலே நலங்கொடுத்திடும்
தண்டபாணித் தெய்வமே தங்கத்தேரில் வா வா

பார்புகழும் பழனிமலை ஆண்டவனே வா
பரங்குன்றப் பேரழகே வேலெடுத்து வா
சீர் மேவும் சரவணையில் தவழ்ந்தவனே வா
சிங்கார வேலவனே தங்கத்தேரில் வா வா!

வண்ணமயில் கொண்டவனே வா வா வா
வடிவழகே திருமுருகே ஓடோடி வா
எண்ணமெல்லாம் நிறைந்தவனே வா வா வா
எழில் நிலவே தங்கத்தேரில் ஏறிநீயும் வா வா!

பிரணவத்தின் பொருள் உரைத்துப் பெருமைகொண்டவா
திறமைமிகு சூரர்படை வென்று வந்தவா
அருணகிரி பாட்டினிலே அகமகிழ்ந்தவா
அன்பரெல்லாம் மகிழ்ந்திடவே தங்கத்தேரில் வா வா!

ஆறுமுகம் ஆகிவந்த வேலவனே வா
அன்பருள்ளம் கோயில் காணும் ஆனந்தனே வா
கூறும் வினை தீர்த்துவைக்க வேலெடுத்துவா
குன்றம் கண்ட தண்டபாணி தங்கத்தேரில் வா வா!

காவடிக்கு வழித்துணையாய் வேலைத்தந்த வா
கடம்பனோடு இடும்பனையும் காவல் தந்த வா
ஆடிவரும் காவடியைக் காணவேண்டாமா?
அழகுமுகம் காட்டி இங்கே சிரித்து மகிழ வா வா

ஆடிவரும் காவடிக்குள் சேர்ந்துவருபவன்
அழகுமுகம் காட்டி அங்கே சிரித்து நிற்பவன்
அருளாடி உருவினிலே காட்சி தருபவன்
அவரோடு தனிமையிலே பேசிப் பேசி மகிழ்பவன்!

குட்டையய்யா குடும் பத்திலே சொந்தம் கொண்டவன்
கும்பிட்டோர் நலம்காக்கப் பிரம் பெடுப்பவன்
பிரம் பெடுத்து ஆடுகின்ற பேரழகே வா
பெருமை சொன்னோம் தண்டபாணி தங்கத்தேரில் வா வா!

உன்னருளால் வாழ்வதிலே பெருமை கொள்கிறோம்
உன்வாசல் வருவதிலே சுகமும் காண்கிறோம்
எண்ணமெல்லாம் நிறைந்தவனே எழில் முருகே வா
வண்ணமயில் விட்டிறங்கித் தங்கத் தேரில் வா வா!

பழத்துக்காக சண்டைபோட்டுப் பழனிசென்ற வா
ஒளவைப் பாடலுக்கே பழமும் தந்து ஊதச் சொன்ன வா
அள்ளித்தரும் வள்ளலே என் செந்திலாண்டவா
ஆனந்தமாய் வேல் பிடித்துத் தங்கத் தேரில் வா வா!

உன்னழகைக் காண்பதற்கே ஓடி வருகிறோம்
உன்னருளைப் பெருவதற்கே தேடி வருகிறோம்
வண்ணமயில் ஏறிவரும் வடிவழகே வா
அன்னை தந்த வேலுடனே தங்கத் தேரில் வா வா!

அன்னையவள் மீனாட்சி வாழ்த்தி மகிழ்கிறாள்
அப்பன் மதுரைச் சொக்கேசன் பெருமை கொள்கிறார்
தேவர்மகள் தெய்வயானை மெல்ல சிரிக்கிறாள்
தினைப்புனத்து வள்ளி மயில் குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கிறாள்
Add Audio/Video Link

அழகென்ற சொல்லுக்கு முருகா

 

முருகன்   -

முருகா! முருகா!

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு

 

முருகன்   -   

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு
அழகு அழகு அழகு அவன் கருணை அழகு

அரஹரோஹரா சுவாமி

 

முருகன்   -

அரஹரோஹரா சுவாமி அரஹரோஹரா
அரஹரோஹரா சுவாமி அரஹரோஹரா
கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா
கந்தப்ப சுவாமிக்கு அரஹரோஹரா (அரஹரோ)

திருவிசைப்பா

 திருமாளிகைத்தேவர் அருளிய கோயில் - திருவிசைப்பா Odhuvarகரூர் சுவாமிநாதன்கரூர் சுவாமிநாதன்உரை சொ சொ மீ சுந்தரம்Odhuvar Songஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !


 

புங்குடுதீவு மடத்துவெளி 

ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமிகோவில்

-----------------------------------------------"மஹாகும்பாபிஷேகம் : 25.03.2026 "

"மகோற்சவம் "
கொடியேற்றம்:06.04.2026
தேர்:14.04.2026
தீர்த்தம்:15.04..2026


திங்கள், 13 அக்டோபர், 2025

 

திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

 

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாசுரங்களும், அவற்றின் பத உரையும்

திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி

 

சனி, 11 அக்டோபர், 2025

 

பங்களிக்க விரும்பும் அனைத்து பக்தர்கள்.

---------------------------------------------------------------

தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம்:
Twint
அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை)
0041799373289
வங்கிக் கணக்கு விவரங்கள்.
Madathuveli Sri Balasubramaniar Swami Temble
Bank Of Ceylon
A/C No74602768.
Vellanai Jaffna.
Online Code:7010 Vellanai.
நன்றியோடு ஆலய நிர்வாக சபை.


 அன்பும் அருளும் நிறைந்த முருக பக்தர்களே,
-----------------------------------------------------------
எமது மடத்துவெளி வயலூர் சுவாமி ஸ்ரீ சுப்ரமணியஸ்வாமியின் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருப்பணி (புனரமைப்பு) பணிகள் மிகுந்த உழைப்பும் பக்தி உணர்வும் கலந்த நிலையில், முருகனின் தெய்வீக அருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பேரானந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த திருப்பணி பணிகள், நம் அனைவரது ஒருமித்த பிரார்த்தனைக்கும், அர்ப்பணிப்பிற்கும், மற்றும் தெய்வீக துணை நிறைவிற்கும் ஒரு சின்னமாகும். எமது ஆலயத்தை இன்னும் அழகுறவும், ஆன்மீக ஒளி பரப்பும் புனித தலமாக மாற்றும் நோக்கில் பல முக்கிய பணிகள் துல்லியமாக நடைபெறுகின்றன.
மிக விரைவில், எமது ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நிகழ நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் மற்றும் திருவிழா ஆகிய புண்ணிய நிகழ்வுகளும் நடைபெறும். இந்நிகழ்வுகளின் திகதிகள், ஆலயத்தின் அதி உச்ச குருக்கள் தீர்மானித்த திகதிக்குள் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அன்பான உறவுகளே, எமது முருகன் ஆலயத்தின் வளர்ச்சிக்கும், அதன் திருப்பணி நிறைவேற்றத்திற்கும் நீங்கள் வழங்கிய நன்கொடைகள் மிகுந்த அருமையுடையவை. நீங்கள் உறுதியளித்த தொகைகளை, இயன்றவரை விரைவில் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஒவ்வொரு பங்களிப்பும் ஆலயத்தின் புனிதப் பணியில் ஒளி சேர்க்கும் விளக்காக விளங்கும்.
மேலும், “வயலூர் முருகன் சமூகம்” எனும் புண்ணிய உறவாக இணைந்திருந்த சிலர் தங்களாக விலகிச் சென்றிருப்பதைக் காண்கிறோம். இதற்கான காரணம் எமக்குத் தெளிவாகத் தெரியாதபோதிலும், நாங்கள் அன்போடும் நம்பிக்கையோடும் அனைவரையும் மீண்டும் இந்த புனித பணிக்குள் இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். முருகனின் பணியில் பிரிவில்லாத ஒற்றுமை தான் நமக்கு மிகப் பெரிய பலமாகும்.
முருக பக்தர்களே, இப்பெரிய புனித முயற்சியில் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை வழங்கி, “முருகனுக்கு நாமும் ஒன்றாக அர்ப்பணம் செய்கிறோம்” என்ற எண்ணத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
முருகனின் அருளும் ஆசீர்வாதமும் எப்போதும் உங்கள் குடும்பத்தையும், உழைப்பையும், உள்ளத்தையும் வளப்படுத்தட்டும்.
அன்போடு,
முருகனின் திருவருளுடன்,
சுவிஸ் நாட்டு நிர்வாக சபை சார்பாக
பொருளாளர் – வி. அ. கைலாசநாதன் (குழந்தை)

வெள்ளி, 10 அக்டோபர், 2025

 

யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்


“தாதையெனத் தண்ணருள் பொழிந்திடர் தடிந்தே
 தீதில் நெறி யுய்த்தெமது பாசமது தீயக்
கோதில் வழி காட்டுகடைச் சாமி, குருவள்ளல்
பாதமலர் சிந்தையிற் பதித்தினிது வாழ்வாம்”

திருச்சிற்றம்பலம்

யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்
யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்

முருகனின் பல்வேறு தோற்றங்கள்


Birth of Karttikeya, son of Siva and Parvatiந்து தெய்வங்களில் பல கடவுட்களும், பெண் தெய்வங்களும் உண்டு. அவர்களில் மூல தெய்வங்கள், மற்றும் அதற்கு அடுத்த நிலை தெய்வங்கள் என பிரிவுகளும் உண்டு. சிவன், சக்தி, விஷ்ணு, லஷ்மி, சரஸ்வதி, கணபதி மற்றும் முருகன் போன்றவர்கள் மூல தெய்வங்கள். அய்யனார், மாரி அம்மான், முனீஸ்வரன், மற்றும் மதுரை வீரன் போன்றவர்கள் கிராம தெய்வங்கள். அவர்கள் அனைவரையும் விட தமிழர்கள் அதிகமாகப் போற்றி வணங்குவது தமிழ் கடவுள் என கருதப்படும் முருகனைத்தான்.

வியாழன், 9 அக்டோபர், 2025

 பங்களிக்க விரும்பும் அனைத்து பக்தர்களும்:

தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம்:
Twint
அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை)
0041799373289
வங்கிக் கணக்கு விவரங்கள்.
Madathuveli Sri Balasubramaniar Swami Temble
Bank Of Ceylon Seving A/C No
74602768. Vellanai Jaffna.
Online Code:7010 Vellanai.
நன்றியோடு ஆலய நிர்வாக சபை.

 மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய திருப்பணி – அன்பு பூர்வமான அறிவிப்பு

-----------------------------------------------------------------------------------------------------







------


அன்பும் அருளும் நிறைந்த முருக பக்தர்களே,
எமது மடத்துவெளி வயலூர் சுவாமி ஸ்ரீ சுப்ரமணியஸ்வாமியின் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருப்பணி (புனரமைப்பு) பணிகள் மிகுந்த உழைப்பும் பக்தி உணர்வும் கலந்த நிலையில், முருகனின் தெய்வீக அருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பேரானந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த திருப்பணி பணிகள், நம் அனைவரது ஒருமித்த பிரார்த்தனைக்கும், அர்ப்பணிப்பிற்கும், மற்றும் தெய்வீக துணை நிறைவிற்கும் ஒரு சின்னமாகும். எமது ஆலயத்தை இன்னும் அழகுறவும், ஆன்மீக ஒளி பரப்பும் புனித தலமாக மாற்றும் நோக்கில் பல முக்கிய பணிகள் துல்லியமாக நடைபெறுகின்றன.
மிக விரைவில், எமது ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நிகழ நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிஷேகம் மற்றும் திருவிழா ஆகிய புண்ணிய நிகழ்வுகளும் நடைபெறும். இந்நிகழ்வுகளின் திகதிகள், ஆலயத்தின் அதி உச்ச குருக்கள் தீர்மானித்த திகதிக்குள் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அன்பான உறவுகளே, எமது முருகன் ஆலயத்தின் வளர்ச்சிக்கும், அதன் திருப்பணி நிறைவேற்றத்திற்கும் நீங்கள் வழங்கிய நன்கொடைகள் மிகுந்த அருமையுடையவை. நீங்கள் உறுதியளித்த தொகைகளை, இயன்றவரை விரைவில் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஒவ்வொரு பங்களிப்பும் ஆலயத்தின் புனிதப் பணியில் ஒளி சேர்க்கும் விளக்காக விளங்கும்.
மேலும், “வயலூர் முருகன் சமூகம்” எனும் புண்ணிய உறவாக இணைந்திருந்த சிலர் தங்களாக விலகிச் சென்றிருப்பதைக் காண்கிறோம். இதற்கான காரணம் எமக்குத் தெளிவாகத் தெரியாதபோதிலும், நாங்கள் அன்போடும் நம்பிக்கையோடும் அனைவரையும் மீண்டும் இந்த புனித பணிக்குள் இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். முருகனின் பணியில் பிரிவில்லாத ஒற்றுமை தான் நமக்கு மிகப் பெரிய பலமாகும்.
முருக பக்தர்களே, இப்பெரிய புனித முயற்சியில் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை வழங்கி, “முருகனுக்கு நாமும் ஒன்றாக அர்ப்பணம் செய்கிறோம்” என்ற எண்ணத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
முருகனின் அருளும் ஆசீர்வாதமும் எப்போதும் உங்கள் குடும்பத்தையும், உழைப்பையும், உள்ளத்தையும் வளப்படுத்தட்டும்.
அன்போடு,
முருகனின் திருவருளுடன்,
சுவிஸ் நாட்டு நிர்வாக சபை சார்பாக
பொருளாளர் – வி. அ. கைலாசநாதன் (குழந்தை)

2025 Ther



 



முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி