முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

செவ்வாய், 21 அக்டோபர், 2025

 புங்குடுதீவு மடத்துவெளி  பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

குடமுழுக்கு மலர் வெளியீடு 

äääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääää

  அடியார்களுக்கு  இறை  வணக்கம் 

எதிர்வரும் மார்ச் 25 அன்று  எமது குலதெய்வம் வயலூர்  முருகனுக்கு குடமுழுக்கு  நிகழ்த்த  எல்லாம் வல்ல  மடத்துவெளி முருகன் அருள் பாலித்துள்ளார் .

இந்த குடமுழுக்கு  நாளில் ஒரு  மலர் ஒன்றினை  வெளியிட்டு வைக்க  நிர்வாகம் முடிவு செய்துள்ளது .இந்த மலரில்  இடம்பெறவென வாழ்த்துரைகள், .வரலாற்று நிகழ்வுகள், ஆலய  விழா நடைமுறைகள் சம்பவங்கள்  தொடர்பிலான அனுபவங்கள் நினைவலைகள் ,  ஆலய தொடர்பிலான  ஆன்மீகக் கட்டுரைகள் ,என பல்வேறு ஆக்கங்களை  நீங்களும்  எழுதி அனுப்பலாம் . உங்களது கடவுச்சீட்டு அளவிலான நிழல் படத்துடன் மின்னஞ்சல் , வாட்சப், வைபர் மூலமாக  அனுப்பிவைக்க முடியும் ..ஆக்கங்களில் இலக்கண, சொல் ,பொருள் தவறுகள் இருப்பின் உங்கள் விருப்பத்தோடு உங்களை  கொண்டு  திருத்தி அமைப்போம் . . தரமான அரிதான ஆலய  சம்பந்தமான நிழல் படங்கள்  இருந்தால் எமக்கு அனுப்பி   வைத்தால் சிறப்பாகும் . , மலர்  அமைப்பு வேலைகளில் கடைசி நேர பதடடத்தை  தடுக்குமுகமாக  முன்கூட்டியே  உங்கள் ஆகக்கங்களை  அனுப்பி  வைக்குமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் . இந்த  மலர் எமது ஆலயத்தின் மிகமுக்கியமான ஒரு வரலாற்று ஆவணமாக  .திகழும்  நன்றி 

சிவ-சந்திரபாலன் .


ஆலய சுவிஸ் நிர்வாக செயலாளர்

.சுவிட்சர்லாந்து .

.pungudutivu1@gmail.com 

 0041791200006

22.10.2025.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக