முருகன் - |
அழகு அழகு அழகு நம் முருகன் அழகு அழகு அழகு அழகு அவன் கருணை அழகு பழநியிலே நிற்கின்ற ஆண்டியும் அழகு- அவன் பிடித்திருக்கும் தண்டத்தின் பெருமையும் அழகு ராஜவேடம் காண்பதில் தான் எத்தனை அழகு – நம்மை ராஜாவுக்கும் அவன் கருணை அதை விட அழகு உபதேசம் உரைக்கின்ற சுவாமியும் அழகு- அவன் சிவன்மடியில் அமர்ந்திருக்கும் சிறப்பும் அழகு மௌனமொழி மந்திரத்தின் பெருமையும் அழகு – அதை உணர்ந்தால் நாம் அடையும் நிலையும் அழகு மாயை அழித்த மன்னவனின் கோலம் அழகு- அவன் பூஜை செய்யும் விதம் என்றும் காண்பதற்கழகு செந்தூரின் கடற்கரையும் கோவிலும் அழக -அவன் கமல மலர் தாழ்வருடும் அலைகளோ அழகு குன்றம் அமர் குகனோ நல்ல மாப்பிள்ளை அழகு அவனைச் சூழ்ந்திருக்கும் தேவர்களின் மனம் நிறைவும் அழகு தெய்வானை திருமணமோ நித்திய அழகு – அதை காணுகின்ற நம் கண்கள் என்றும் அழகு தணிகையிலே நிற்கின்ற குமரனும் அழகு அவன் கொண்ட சாந்தமோ அகிலத்தில் அழகு திருப்படியின் உற்சவமோ முதல் நாள் அழகு – அதில் அவன் உணர்த்தும் நம் வாழ்வின் ஏற்றம் அழகு மாமன் வீட்டில் அவனிருக்கும் அழகோ அழகு அதை காணும் பக்தர்களின் ஆனந்தம் அழகு சோலைமலைக் காட்சிகளோ இயற்கையின் அழகு – அங்கு சோர்வகற்றி பொலிவுதரும் கிழவோன் அழகு ஆறுபடை வீடுகளோ நாட்டின் அழகு – அதில் அவன் நடத்தும் ஆட்சியோ தர்மத்தின் அழகு முருகன் இருக்கும் இடமெல்லாம் இளமையின் அழகு – அவன் வீற்றிருக்கும் நம்மனமோ விந்தையின் அழகு |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக