வெள்ளி, 17 அக்டோபர், 2025

மண்ணானாலும் திருச்செந்தூரில்

 

முருகன்   -   

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்

ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும் பெயரும் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்

பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

முருகா.....முருகா.....முருகா..
Add Audio/Video Link

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி