வெள்ளி, 17 அக்டோபர், 2025

திருவிசைப்பா

 திருமாளிகைத்தேவர் அருளிய கோயில் - திருவிசைப்பா Odhuvarகரூர் சுவாமிநாதன்கரூர் சுவாமிநாதன்உரை சொ சொ மீ சுந்தரம்Odhuvar Songஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !

  உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !

  சித்தத்துள் தித்திக்கும் தேனே !

அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !

  அம்பலம் ஆடரங் காக

வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்

  தொண்டனேன் விளம்புமா விளம்பே.  1  இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்

  இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த

சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும்

  தூயநற் சோதியுள் சோதீ !

அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !

  அயனொடு மாலறி யாமைப்

படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்

  தொண்டனேன் பணியுமா பணியே.  2  தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா !

  சாமகண்டா ! அண்ட வாணா !

நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை

  என்னுடை நாவினால் நவில்வான்

அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்

  தந்தபொன் அம்பலத்து ஆடி !

கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்

  தொண்டனேன் கருதுமா கருதே.  3  பெருமையிற் சிறுமை பெண்ணொடுஆ ணாய்என்

  பிறப்புஇறப்பு அறுத்தபே ரொளியே !

கருமையின் வெளியே கயற்கணாள் இமவான்

  மகள்உமை யவள்களை கண்ணே !

அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்

  அப்பனே அம்பலத்து அமுதே

ஒருமையிற் பலபுக்கு உருவிநின் றாயைத்

  தொண்டனேன் உரைக்குமாறு உரையே.  4  கோலமே மேலை வானவர் கோவே !

  குணங்குறி இறந்ததோர் குணமே !

காலமே கங்கை நாயகா எங்கள்

  காலகாலா! காம நாசா !

ஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொற்

  கோயில்கொண்டு ஆடவல் லானே !

ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்

  தொண்டனேன் நணுகுமா நணுகே.  5  நீறணி பவளக் குன்றமே ! நின்ற

  நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே !

வேறணி புவன போகமே யோக

  வெள்ளமே மேருவில் வீரா !

ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா

  அம்பொன்செய் அம்பலத் தரசே !

ஏறணி கொடியெம் ஈசனே, உன்னைத்

  தொண்டனேன் இசையுமாறு இசையே.  6  தனதன்நல் தோழா சங்கரா ! சூல

  பாணியே! தாணுவே சிவனே !

கனகநல் தூணே! கற்பகக் கொழுந்தே

  கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !

அனகனே குமர விநாயக சனக

  அம்பலத்து அமரசே கரனே !

நுனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்

  தொண்டனேன் நுகருமா நுகரே.  7  திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே

  திகைக்கின்றேன் தனைத்திகை யாமே

நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்

  நிகழ்வித்த நிகரிலா மணியே !

அறம்பல திறங்கண்டு அருந்தவர்க்கு அரசாய்

  ஆலின்கீழ் இருந்தஅம் பலவா !

புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்

  தொண்டனேன் புணருமா புணரே.  8  தக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்

  தாமரை நான்முகன் தலையும்

ஒக்கவிண்(டு) உருள ஒண்திருப் புருவம்

  நெறித்தரு ளியவுருத் திரனே !

அக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட

  ஆடப்பொன் னம்பலத்து ஆடும்

சொக்கனே எவர்க்கும் தொடர்வரி யாயைத்

  தொண்டனேன் தொடருமா தொடரே.  9  மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு

  அருள்புரி வள்ளலே ! மருளார்

இடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்

  ஏறிய ஏறுசே வகனே !

அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்

  அடர்த்தபொன் னம்பலத் தரசே !

விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே ! உன்னைத்

  தொண்டனேன் விரும்புமா விரும்பே.  10  மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது

  அயன்திரு மாலொடு மயங்கி

முறைமுறை முறையிட்(டு) ஓர்வரி யாயை

  மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்

அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்

  சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்

நிறைதரு கருணா நிலயமே ! உன்னைத்

  தொண்டனேன் நினையுமா நினையே.


சிற்சபை: சுவாமி: ஆனந்தநடராஜ மூர்த்தி ; அம்பிகை: சிவகாமசுந்தரி 

மூலஸ்தானம்: ஸ்ரீமூலநாதர்; அம்பிகை: உமாபார்வதி  11 அ௫ளியவர் :  கருவூர்த்தேவர்திருமுறை : ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா-திருப்பல்லாண்டு  பண் : பஞ்சமம்நாடு :சோழநாடு காவிரித் தென்கரை தலம் :  முகத்தலை  சிறப்பு: —  கருவூர்த்தேவர் அருளிய திருமுகத் தலை திருவிசைப்பா Odhuvarகரூர் சுவாமிநாதன்கரூர் சுவாமிநாதன்உரை சொ சொ மீ சுந்தரம்Odhuvar Songபுவனநா யகனே ! அகவுயிர்க்(கு) அமுதே

  பூரணா ! ஆரணம் பொழியும்

பவளவாய் மணியே ! பணிசெய்வார்க்(கு) இரங்கும்

  பசுபதீ ! பன்னகா பரணா !

அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்

  அகத்திலும் முகத்தலை மூதூர்த்

தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்

  தனியனேன் தனிமைநீங் குதற்கே.  1  புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து

  புணர்பொருள் உணர்வுநூல் வகையால்

வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்

  வளரொளி மணிநெடுங் குன்றே

முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்

  முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்

விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த

  வெள்ளமாய் உள்ளமா யினையே.  2  கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்

  கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்

முன்னகா ஒழியேன் ஆயினும் செழுநீர்

  முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும்

பன்னகா பரணா பவளவாய் மணியே !

  பாவியேன் ஆவியுள் புகுந்த(து)

என்னகா ரணம்நீ ஏழைநாய் அடியேற்கு

  எளிமையோ பெருமையா வதுவே.  3  கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்

  கிடையனா ருடையஎன் நெஞ்சில்

பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்

  பரமனே ! பன்னகா பரணா !

மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து

  மிகத்திகழ் முகத்தலை மூதூர்

நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்

  நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே !  4  அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)

  ஐவரோ(டு) என்னொடும் விளைந்த

இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)

  என்னைஆள் ஆண்டநாய கனே !

முக்கண்நா யகனே முழுதுல(கு) இறைஞ்ச

  முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்

பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்

  பண்ணினாய் பவளவாய் மொழிந்தே.  5  புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்

  பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்

வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்

  மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே

முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே !

  முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன்

வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்

  விழுமிய விமானமா யினதே.  6  விரியநீர் ஆலக் கருமையும் சாந்தின்

  வெண்மையும் செந்நிறத் தொளியும்

கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும்

  கழுத்திலோர் தனிவடங் கட்டி

முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்

  முகத்தலை அகத்தமர்ந் தாயைப்

பிரியுமா றுளதே பேய்களோம் செய்த

  பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே.  7  என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து)

  என்பெலாம் உருகநீ எளிவந்(து)

உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும்

  ஒழிவற நிறைந்தஒண் சுடரே !

முன்னைஎன் பாசம் முழுவதும் அகல

  முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே

கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்

  கனியுமாய் இனியை ஆயினையே.  8  அம்பரா அனலா; அனிலமே புவிநீ

  அம்புவே இந்துவே இரவி

உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்

  ஒழிவற நிறைந்தஒண் சுடரே

மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்

  முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே

எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே

  எந்தையும் தாயுமா யினையே.  9  மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்

  முகத்தலை அகத்தமர்ந்(து) இனிய

பாலுமாய், அமுதாம் பன்னகா பரணன்

  பனிமலர்த் திருவடி இணைமேல்

ஆலையம் பாகின் அனையசொற் கருவூர்

  அமுதுறழ் தீந்தமிழ் மாலை

சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்

  சிவபதம் குறுகிநின் றாரே.


திருத்துறைப்பூண்டிக்கு அண்மையில் உள்ள இத்தலம்,பன்னத்தெரு எனப்படுகிறது. 


சுவாமி: பன்னகாபரணர்  அம்பிகை: சாந்த நாயகி  10 

9.005 சேந்தனார் - திருவீழிமிழலை   (திருவீழிமிழலை )
ஏகநா யகனை இமையவர்க்(கு) அரசை
    என்னுயிர்க்(கு) அமுதினை எதிரில்
போகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்
    பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த
மேகநா யகனை மிகுதிரு வீழி
    மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
யோகநா யகனை அன்றிமற் றொன்றும்
    உண்டென உணர்கிலேன் யானே.
[1]
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
    கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
    மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்
    திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்
    குளிரஎன் கண்குளிர்ந் தனவே.
[2]
மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த
    மருந்தைஎன் மாறிலா மணியைப்
பண்டலர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு)
    எளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
    திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக்
    குறுகவல் வினைகுறு காவே.
[3]
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
    சசிகுலா மவுலியைத் தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
    எழுஞ்செழுஞ் சுடரினை அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
    மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக
    விடுவனோ பூண்டுகொண் டேனே.
[4]
இத்தெய்வ நெறிநன் றென்(று)இருள் மாயப்
    பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
    புராணசிந்தா மணி வைத்த
மெய்த் தெய்வ நெறிநான் மறையவர் வீழி
    மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா(து) அவமும்
    அறிவரோ அறிவுடை யோரே.
[5]
அக்கனா அனைய செல்வமே சிந்தித்து
    ஐவரோ(டு) அழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட
    புனிதனை வனிதைபா கனைஎண்
திக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி
    மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்
    பொடியணிந்(து) அடிமைபூண் டேனே.
[6]
கங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்
    கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்
    மாடநீ டுயர்திரு வீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
    நம்பியைத் தன்பெருஞ் சோதி
மங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தை
    வருந்திநான் மறப்பனோ இனியே.
[7]
ஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக்
    கண்முக கரசர ணத்தோன்
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
    படர்சடை மின்னுபொன் முடியோன்
வேயிருந் தோளி உமைமண வாளன்
    விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
    போற்றுவார் புரந்தரா திகளே.
[8]
எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்
    எண்ணில்பல் கோடிதிண் தோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
    ஏர்கொள்முக் கண்முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்(கு)அப் பாலாய்
    நின்(று)ஐஞ்ஞூற்(று) அந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
    இவர்நம்மை ஆளுடை யாரே.
[9]
தக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன்
    சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன்
    மறலிவேள் இவர்மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி
    மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்
    பொடியணிந்(து) அடிமைபூண் டேனே.
[10]
உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல்
    அருள்சொரி தரும்உமா பதியை
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
    மழவிடை மேல்வரு வானை
விளங்கொளி வீழி மிழலைவேந் தேயென்(று)
    ஆந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
    கைக்கொண்ட கனககற் பகமே.
[11]

பாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்
    பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத்து எம்பெரு மக்கள்
    நெஞ்சினுள் நிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தின் அமுதைத்
    திருவீழி மிழலையூர் ஆளும்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்
    கெழுமுதற்(கு) எவ்விடத் தேனே.
[12]

Back to Top
சேந்தனார்   திருவிசைப்பா  
9.006   சேந்தனார் - திருவாவடுதுறை  
பண் -   (திருத்தலம் திருவாவடுதுறை ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=4wIBnbeq_Rk
Audio: https://www.youtube.com/watch?v=Mpevt7yqbgQ
Audio: https://www.youtube.com/watch?v=b1qy2RLVlSg

பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப்
    புகழாளர் ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
    மிகுகா விரிக்கரை மேய
ஐயா ! திருவா வடுதுறை அமுதே !
    என்றுன்னை அழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்(கு)ஒன்(று)
    அருளாது ஒழிவது மாதிமையே.
[1]
மாதி மணங்கம ழும்பொழில்
    மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச்
    சுருதி விதிவழி யோர்தொழும்
ஆதி அமரர் புராணனாம்
    அணிஆ வடுதுறை நம்பிநின்ற
நீதி அறிகிலள் பொன்நெடும்
    திண்தோள் புணர நினைக்குமே.
[2]
நினைக்கும் நிரந்தர னே !என்னும்
    நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல்
    நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் !
மனக்கின்ப வெள்ள மலைமகள்
    மணவாள நம்பிவண் சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்துறைத்
    தருணேந்து சேகரன் என்னுமே.
[3]
தருணேந்து சேகர னேஎனும்
    தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருள்நேர்ந்த சிந்தை யவர்தொழப்
    புகழ்செல்வம் மல்குபொற் கோயிலுள்
அருள்நேர்ந்(து) அமர்திரு வாவடு
    துறையாண்ட ஆண்டகை அம்மானே
தெருள்நேர்ந்த சித்தம் வலியவா
    திலக நுதலி திறத்திலே.
[4]
திலக நுதல்உமை நங்கைக்கும்
    திருவா வடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க்(கு) என்னையாட்
    கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன்(று) அறிகின்றி லேம்எனும்
    அணியும்வெண் ணீ(று)அஞ் செழுத்தலால்
வலதொன் றிலள்இதற்(கு) என்செய்கேன்
    வயலந்தண் சாந்தையர் வேந்தனே !
[5]
வேந்தன் வளைத்தது மேருவில்
    அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
    பொடியாட வேதப் புரவித்தேர்
சாந்தை முதல் அயன் சாரதி
    கதியருள் என்னும் இத் தையலை
ஆந்தண் திருவா வடுதுறையான்
    செய்கை யாரறி கிற்பாரே.
 
[6]
கிற்போம் எனத்தக்கன் வேள்விபுக்(கு)
    எழுந்தோ டிக்கெட்ட அத்தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள்என்
    சொல்லிச் சொல்லும் இத் தூமொழி
கற்போல் மனம்கனி வித்தஎங்
    கருணால யாவந்திடாய் என்றால்
பெற்போ பெருந்திரு வாவடு
    துறையாளி பேசா(து) ஒழிவதே.
[7]
ஒழிவொன்றி லாவுண்மை வண்ணமும்
    உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
மொழிவொன்றி லாப்பொன்னித் தீர்த்தமும்
    முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றி லாச்செல்வச் சாந்தையூர்
    அணிஆ வடுதுறை ஆடினாள்
இழிவொன்றி லாவகை எய்திநின்(று)
    இறுமாக்கும் என்னிள மானனே.
[8]
மானேர் கலைவளையும் கவர்ந்துளம்
    கொள்ளை கொள்ளவழக்(கு) உண்டே !
தேனே ! அமுதே !என் சித்தமே !
    சிவலோக நாயகச் செல்வமே !
ஆனேஅ லம்புபுனற் பொன்னி
    அணியா வடுதுறை அன்பர்தம்
கோனே !நின் மெய்யடி யார்மனக்
    கருத்தை முடித்திடுங் குன்றமே !
[9]
குன்றேந்தி கோகன கத்(து)அயன்
    அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கி அழைக்கின்றாள்
    இளவல்லி எல்லை கடந்தனள்
அன்றே அலம்பு புனற்பொன்னி
    அணியா வடுதுறை ஆடினாள்
நன்றே இவள் நம் பரமல்லள்
    நவலோக நாயகன் பாலளே.
[10]
பாலும் அமுதமும் தேனுமாய்
    ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
    புரகால காமபு ராந்தகன்
சேலும் கயலும் திளைக்குநீர்த்
    திருவா வடுதுறை வேந்தனோ(டு)
ஆலும் அதற்கே முதலுமாம்
    அறிந்தோம் அரிவைபொய் யாததே.
   
[11]

Back to Top
சேந்தனார்   திருவிசைப்பா  
9.007   சேந்தனார் - திருவிடைக்கழி  
பண் -   (திருத்தலம் திருவிடைக்கழி ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
Audio: https://www.youtube.com/watch?v=1vuwyId6-SU
Audio: https://www.youtube.com/watch?v=6tWeIEDg-M0
Audio: https://www.youtube.com/watch?v=6vC6iwpjUVg

மாலுலா மனம்தந்(து) என்கையில் சங்கம்
    வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளும்
    குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
    என்னும் என் மெல்லியல் இவளே.
[1]
இவளைவா ரிளமென் கொங்கைபீர் பொங்க
    எழில் கவர்ந் தான்இளங் காளை
கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க்
    கனகக்குன் றெனவரும் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையானைக்கும்
    குழகன்நல் அழகன்நங் கோவே.
[2]
கோவினைப் பவளக் குழமணக் கோலக்
    குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன்
காவல்நற் சேனையென் னக்காப் பவன்என்
    பொன்னை மேகலை கவர்வானே
தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயில் ஊரும்
    சுப்பிர மண்ணியன் தானே.
[3]
தானமர் பொருது தானவர் சேனை
    மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்
மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
    மறைநிறை சட்டறம் வளரத்
தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோனமர் கூத்தன் குலவிளங் களிறென்
    கொடிக்கிடர் பயப்பதுங் குணமே !
[4]
குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
    படுமிடர் குறிக்கொளாத(து) அழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
    உய்யமற்(று) அடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
    கணபதி பின்னிளங் கிளையே.
[5]
கிளையிளங் சேயக் கிரிதனை கீண்ட
    ஆண்டகை கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை
    கார்நிற மால்திரு மருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு)
    அருளுங்கொல் முருகவேள் பரிந்தே.
[6]
பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
    பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
    சுந்தரத்(து) அரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
    மையல்கொண்(டு) ஐயறும் வகையே.
[7]
வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை
    வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் பரம்பொடி படுத்த
    பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என்
    துடியிடை மடல்தொடங் கினளே.
[8]
தொடங்கினள் மடலென்(று) அணிமுடித் தொங்கல்
    புறஇதழ் ஆகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
    மறத்தொழில் வார்த்தையும் உடையன்
திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து)
    அறுமுகத்(து) அமுதினை மருண்டே.
[9]
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
    பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே
    விடலையே எவர்க்கும் மெய் அன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
    கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
[10]
கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
    தூய்மொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன்
    வாய்ந்தசொல் இவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
    திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
    இடர்கெடும் மாலுலா மனமே.
[11]

Read more at: https://shaivam.org/thirumurai/ninth-thirumurai/karuvurthevar-thirumukathalai-thiruvisaipa-puvanaayakanay/#gsc.tab=0

Read more at: https://shaivam.org/thirumurai/ninth-thirumurai/thirumaligaithevar-koyil-thiruvisaipa-volivalar-vilakkay/#gsc.tab=0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி