முதல் மூவரைப் போற்றும் இனியவை நாற்பது

சங்க இலக்கியத்தின் பகுதியான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று 'இனியவை நாற்பது'. இது இனியவற்றைப் பட்டியல் இடும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல். இது ஒரு தொகுப்பு நூல் இல்லை. ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல். நூலில் இருக்கும் நாற்பது பாடல்களின் அமைப்பினிலேயே இதன் கடவுள் வாழ்த்தும் இருக்கிறது. இவ்விரு காரணங்களால் இந்த நூலை இயற்றிய ஆசிரியரே கடவுள் வாழ்த்தையும் இயற்றினார் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். சேந்தன் என்பது இவரது இயற்பெயர் என்பதும், பூதன் என்பது இவரது தந்தையார் பெயர் என்பதும், இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்பதும், இவரது தந்தையார் தமிழ் ஆசிரியர் என்பதும் இந்த பெயரில் இருந்து தெரிகிறது. இவர் தந்தையார் தமிழ் ஆசிரியர்களில் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் 'மதுரைத் தமிழாசிரியர்' என்ற சிறப்புப் பெயர் அடைந்திருக்கிறார். பிற்காலத்தில் மகாமகோபாத்யாய, மகாவித்வான் என்று ஆசிரியர்களில் சிறந்தவர்களுக்குச் சிறப்புப் பெயர் தந்து பெருமைப்படுத்தியதை இங்கே ஒப்பு நோக்கலாம். 'மதுரைத் தமிழாசிரியர்' என்பது பெருமைக்குரியதாக இருந்ததால் தன் பெயருடன் அதனையும் இணைத்தே இந்த நூலின் ஆசிரியர் சொன்னார் என்று எண்ணுகிறேன். பாரதி என்று முன்னோர்களில் ஒருவருக்குத் தரப்பட்ட பட்டத்தை அந்த குடிவழியில் வந்த ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வதை இங்கே ஒப்பு நோக்கலாம்.
இந்த நூலின் கடவுள் வாழ்த்துப்பாடலில் சிவன், திருமால், பிரமன் என்ற முப்பெரும் தேவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். சிவனை முதலிலும், திருமாலை அடுத்தும், பிரமதேவனை பின்னரும் இந்தப் பாடலில் போற்றுகிறார்.
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய்மாலையானைத் தொழல் இனிதே
முந்துறப் பேணி முக நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.
இந்தப் பாடலின் முதல் அடியில் இனிதான ஒரு பொருளையும், இரண்டாம் அடியில் இனிதான இன்னொரு பொருளையும், அடுத்த இரு அடிகளில் இனிதான இன்னொரு பொருளையும் கூறுகிறார். இந்த நூலில் நான்கு பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்களில் எல்லாம் இப்படியே மூன்று இனியவைகளைக் கூறும் முறை தொடர்கிறது.
கண் மூன்றுடையான் சிவபெருமான். மூன்று கண்கள் கொற்றவை, நரசிம்மன், விநாயகன், முருகன் என்பாருக்கும் உண்டு. இங்கே அன் விகுதியுடன் சொன்னதால் கொற்றவை இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. திருமால் அடுத்த அடியில் கூறப்படுவதால் நரசிம்மனும் இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. மும்மூர்த்திகளில் விநாயகனும் முருகனும் வருவதில்லை ஆதலால் மும்மூர்த்திகளைச் சொல்லும் இந்தப் பாடலில் அவர்களும் குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. முக்கண் முதல்வன் என்று சிவபெருமானே போற்றப்படுவதால் அவனே இங்கே குறிக்கப்படுகிறான் என்பது தெளிவு.
தாள் சேர்தல் என்றால் தஞ்சமாக, சரணாக அடைதல் என்று பொருள். தாளினை இடையறாது சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்தலும் அவற்றைத் தஞ்சமாக அடைதலும் மிக இனிது என்று முதல் அடி கூறுகிறது. வைணவமே திருவடிகளின் பெருமைகளைப் பரக்கப் பேசும்; தஞ்சமடைதலை மீண்டும் மீண்டும் பேசும் என்பதே நாம் அறிந்தது. இங்கோ சைவத்திலும் திருவடிகளின் பெருமைகளைக் கூறுதல் உண்டு என்று காட்டுவது போல் இந்த வரி அமைந்திருக்கிறது.
மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்று பிற்காலத்தில் தேவாரப் பதிகத்தில் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இனிமையே விரித்துக் கூறப்பட்டது போலும்.
இனிமை என்று மட்டும் கூறாமல் மிகவும் இனிமை என்று அழுத்திக் கூறுவது போல் 'கடிது இனிதே' என்கிறார் ஆசிரியர்.
அடுத்த அடியில் துழாய் மாலை சூடும் திருமாலைப் போற்றுவதன் இனிமையைப் பேசுகிறார். தமிழ்க்கடவுள் முருகன் மட்டுமே என்றொரு வழக்கு இருக்க, முருகனும் திருமாலும் சிவனும் கொற்றவையும் தொன்மையான தமிழர் கடவுளரே என்று நானும் நண்பர்கள் சிலரும் தொடர்ந்து கூறி வருகிறோம். தொன்மையான தொல்காப்பியம் திருமாலைப் போற்றும் தரவுகள் நிறைய இருக்கின்றன. திருமாலின் அந்தத் தொன்மையை வலியுறுத்துவதைப் போல் 'தொன்மையும் மாட்சிமையும் கொண்ட துழாய்மாலையான்' என்று அடைமொழிகளுடன் கூறுகிறார் ஆசிரியர்.
தற்போது கிடைக்கும் பழந்தமிழ் நூல்களிலேயே முதல் நூலான தொல்காப்பியத்திலேயே குறிக்கப்படுபவன் திருமாலாகிய மாயோன் என்பதால் அவனது தொன்மை விளங்குகிறது. பெருமை மிக்கதை முதலில் சொல்வது என்ற தமிழ் மரபின் படி மாயோனை முதலில் சொன்னது தொல்காப்பியம் - அதனால் திருமாலின் மாட்சிமையும் விளங்குகிறது. இவ்விரண்டையும் இங்கே அடைமொழிகளாகச் சொல்கிறார் ஆசிரியர்.
துழாய் மாலையானைத் தொழுவது இனிது என்கிறார் ஆசிரியர். தொழுவது என்றால் என்ன? வணங்குவது மட்டுமா? தொண்டு செய்வதும் தானே தொழலில் அடங்கும். திருமாலுக்குத் தொண்டு என்னும் கைங்கரியம் செய்வதே வாழ்வின் பயன் என்றும் திருமாலுக்குத் தொண்டு செய்து அடியவனாய் இருப்பதே உயிரின் இயல்பு என்றும் வைணவ தத்துவம் கூறும். தொழல் என்னும் சொல்லைச் சொல்லி அந்தத் தத்துவங்களை அனைத்தையும் நினைவூட்டி விட்டார் ஆசிரியர்.
பிரமன், திருமால், சிவன் என்று வரிசைப்படுத்தி முதல் மூவரைச் சொல்வது மரபு. அந்த மரபிற்கு மாறாக சிவன், திருமால், பிரமன் என்று சொல்கிறாரே இங்கு என்று நினைத்துக் கொண்டிருந்தால் அந்த மரபினை நானும் அறிவேன் என்று சொல்வதைப் போல் அடுத்த அடியினை எழுதுகிறார் சேந்தனார்.
முந்துறப் பேணி என்று சொன்னதன் மூலம் சிவன், திருமால் இவர்களுக்கு முன்னரே மக்களால் போற்றப்படுபவன் பிரமன் என்று சொல்லாமல் சொல்கிறார். பிரமனை நான்முகன் என்று குறிப்பதும் மரபே. அதனை ஒட்டி இங்கேயும் முகனான்கு உடையான் என்று சொல்கிறார் ஆசிரியர்.
சிவபெருமானின் தாள் சேர்தல் இனிது; திருமாலைத் தொழல் இனிது; ஆனால் பிரமதேவனையோ சென்று அமர்ந்து மறைகளால் ஏத்துதல் இனிது. வேதன் என்றும் வேதமுதல்வன் என்றும் நான்முகனை அல்லவோ சொல்வார்கள். அந்த மரபின் படி வேதங்களை ஓரிடத்திற்குச் சென்று அமர்ந்து விரிவாக ஓதி நான்முகனை வணங்குவது இனிது என்று இங்கே சொல்கிறார் ஆசிரியர்.
இந்தப் பாடலைப் படிக்கும் போதும் விளக்கத்தைப் படிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Friday, July 23, 2010
உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே!

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!
நடைமுறை உலகத்தைப் பார்த்தால் மூன்று விதமான தாய்மார்களைப் பார்க்கலாம். குழந்தை பசியால் அழுதாலும் பால் கொடுக்காதவள் கடைநிலைத் தாய். குழந்தை அழுதவுடன் பால் கொடுப்பவள் இடைநிலைத் தாய். குழந்தை அழுவதற்கு முன்னர் பசி நேரம் என்று அறிந்து நேரா நேரத்திற்குப் பால் தருபவள் தலைநிலைத் தாய். அப்படி காலமறிந்து பால் ஊட்டும் தலைநிலைத் தாயையும் விடச் சிறந்தவன் இறைவன். தலைநிலைத் தாயைவிட மிகவும் பரிந்து வாத்ஸல்யமுடன் உலகத்து உயிர்களையெல்லாம் காப்பவன் தாயுமானவன்.
மானிடத்தாய் உடலை மட்டுமே வளர்க்கும் போது இறைவனோ உடலோடு உள்ளத்தையும் சேர்த்து வளர்ப்பவன். அதனால் ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்குகின்றான். உள்ளொளி பெருகியதால் உள்ளத்தின் உள்ளே என்று அழியாததாகவும் திகட்டாததாகவும் உள்ள இன்பத் தேன் பொழிந்தது.
உள்ளே பொழிந்த தேன் வெளியிலும் பொங்கிப் பரவியது. உள்ளே மட்டும் காக்காமல் வெளியிலும் எத்திசையிலும் இறைவன் இருந்து அடியவரைக் காக்கின்றான். அப்படி என்றும் நீங்காத செல்வமாக இருப்பவன் சிவபெருமான்.
அவன் நம்மைத் தொடர்ந்து எங்கும் நிறைந்திருக்க அவனை நாம் தொடர்ந்து சென்று சிக்கெனப் பிடித்தல் எளிது தானே. உண்மையில் அவன் நம்மைத் தொடர நாம் தான் அவனை உதறுகின்றோம். அதனால் அடிகளார் சிக்கெனப் பிடித்த போது அவனால் எங்கும் எழுந்தருள முடியாது. ஆனால் மறைத்தலும் அவன் தொழிலாதலால் நாம் அவனைப் பிடிக்கும் போது மறைந்துச் செல்வதைப் போல் ஒரு போக்கு காட்டுவான். அப்போது 'நீயும் எனைத் தொடர்ந்தாய். நானும் உனைத் தொடர்ந்தேன். இப்போது எங்கே சென்றீர்?' என்ற கேள்வி எழுந்து உருக்கும். அதுவே இப்பாடலில் வெளிப்பட்டது.
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!
நடைமுறை உலகத்தைப் பார்த்தால் மூன்று விதமான தாய்மார்களைப் பார்க்கலாம். குழந்தை பசியால் அழுதாலும் பால் கொடுக்காதவள் கடைநிலைத் தாய். குழந்தை அழுதவுடன் பால் கொடுப்பவள் இடைநிலைத் தாய். குழந்தை அழுவதற்கு முன்னர் பசி நேரம் என்று அறிந்து நேரா நேரத்திற்குப் பால் தருபவள் தலைநிலைத் தாய். அப்படி காலமறிந்து பால் ஊட்டும் தலைநிலைத் தாயையும் விடச் சிறந்தவன் இறைவன். தலைநிலைத் தாயைவிட மிகவும் பரிந்து வாத்ஸல்யமுடன் உலகத்து உயிர்களையெல்லாம் காப்பவன் தாயுமானவன்.
மானிடத்தாய் உடலை மட்டுமே வளர்க்கும் போது இறைவனோ உடலோடு உள்ளத்தையும் சேர்த்து வளர்ப்பவன். அதனால் ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்குகின்றான். உள்ளொளி பெருகியதால் உள்ளத்தின் உள்ளே என்று அழியாததாகவும் திகட்டாததாகவும் உள்ள இன்பத் தேன் பொழிந்தது.
உள்ளே பொழிந்த தேன் வெளியிலும் பொங்கிப் பரவியது. உள்ளே மட்டும் காக்காமல் வெளியிலும் எத்திசையிலும் இறைவன் இருந்து அடியவரைக் காக்கின்றான். அப்படி என்றும் நீங்காத செல்வமாக இருப்பவன் சிவபெருமான்.
அவன் நம்மைத் தொடர்ந்து எங்கும் நிறைந்திருக்க அவனை நாம் தொடர்ந்து சென்று சிக்கெனப் பிடித்தல் எளிது தானே. உண்மையில் அவன் நம்மைத் தொடர நாம் தான் அவனை உதறுகின்றோம். அதனால் அடிகளார் சிக்கெனப் பிடித்த போது அவனால் எங்கும் எழுந்தருள முடியாது. ஆனால் மறைத்தலும் அவன் தொழிலாதலால் நாம் அவனைப் பிடிக்கும் போது மறைந்துச் செல்வதைப் போல் ஒரு போக்கு காட்டுவான். அப்போது 'நீயும் எனைத் தொடர்ந்தாய். நானும் உனைத் தொடர்ந்தேன். இப்போது எங்கே சென்றீர்?' என்ற கேள்வி எழுந்து உருக்கும். அதுவே இப்பாடலில் வெளிப்பட்டது.
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து...

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!
பால் நினைந்து ஊட்டும் - குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!
பால் நினைந்து ஊட்டும் - குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற
தாயினும் சாலப் பரிந்து - தாயைவிட மிகவும் அன்பு கொண்டு
நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய
ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி
உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் அறிவொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து - அழியாத இன்பமாகியத் தேனினைச் சொரிந்து
புறம் புறம் திரிந்த செல்வமே - எல்லாப் புறங்களிலும் கூட வந்து என்னைக் காக்கும் செல்வமே!
சிவபெருமானே - சிவபிரானே!
யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து
சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன்
எங்கெழுந்தருளுவது இனியே - இனிமேல் நீ எங்கே எழுந்தருளிச் செல்வது?
பசியை காலத்தால் அறிந்து பால் ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி உள்ளத்திலே அறிவொளி பெருக்கி அழியாத ஆனந்தத்தைப் பொழிந்தாய். உள்ளே ஆனந்தத்தைத் தந்ததோடு வெளியே எப்புறத்திலும் நின்று காத்தாய். எனது செல்வமே சிவபெருமானே! நான் உன்னை உறுதியாகப் பற்றினேன்! இனி எங்கே எழுந்தருளுகிறீர்?!
பசியை காலத்தால் அறிந்து பால் ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி உள்ளத்திலே அறிவொளி பெருக்கி அழியாத ஆனந்தத்தைப் பொழிந்தாய். உள்ளே ஆனந்தத்தைத் தந்ததோடு வெளியே எப்புறத்திலும் நின்று காத்தாய். எனது செல்வமே சிவபெருமானே! நான் உன்னை உறுதியாகப் பற்றினேன்! இனி எங்கே எழுந்தருளுகிறீர்?!
Friday, July 09, 2010
ஆத்திசூடி சொல்லும் அரனை மறவேல்!
ஒளவையாரின் ஆத்திசூடியைப் பற்றி நம்மில் நிறைய பேர் கேள்விபட்டிருக்கிறோம். சிறு வயதில் அதில் வரும் சில சூத்திரங்களையும் படித்திருக்கிறோம். அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என்று உயிரெழுத்துகளைக் கொண்டு வரிசையாக வரும் பன்னிரண்டு சூத்திரங்களையும் படித்திருக்கிறோம். ஆத்திசூடி என்றாலே அவ்வளவு தான் என்றொரு எண்ணம் இது நாள் வரை எனக்கு இருந்தது.
ஆத்திசூடி என்று இந்த நூல் தொடங்குவதால் இந்த நூல் இப்பெயரைப் பெற்றது என்று ஓரிடத்தில் படித்தேன். அறம் செய விரும்பு என்று தானே இந்த நூல் தொடங்கும் என்ற ஐயம் எழுந்ததால் இணையத்தில் தேடிய போது, இந்த நூலின் கடவுள் வாழ்த்து ஆத்திசூடி என்று தொடங்குவதைக் கண்டேன். அதனைப் பற்றி இங்கே இப்போது எழுதவில்லை.
இந்நூலின் இணையப் பதிப்புகள் பலவற்றிலும் காணப்படும் ஒரு தவறினைச் சுட்டிக்காட்டுவதே இந்த இடுகையின் நோக்கம்.
உயிர் எழுத்துகள், ஆய்தம் இரண்டு வகைகளையும் எழுதிய பின்னர் மெய்யெழுத்துகளின் வரிசையில் சில சூத்திரங்கள் இந்த நூலில் இருக்கின்றன. (மெய், உயிர்மெய் அடிப்படைகளிலும் ஆத்திசுடி சூத்திரங்களைச் சொல்கின்றது என்பதும் இன்று தான் தெரியும்). மெய்யெழுத்துகளின் வரிசையைப் படித்துக் கொண்டு வரும் போது தான் 'அரனை மறவேல்' என்ற வரியைப் படித்தேன். ரகரத்திற்கு ஏற்கனவே 'அரவம் ஆட்டேல்' என்று ஒரு வரியைப் படித்தோமே; மீண்டும் எதற்கு இன்னொரு தடவை ரகரத்திற்கு ஒரு வரி வருகிறது என்று ஒரு ஐயம். மெய்யெழுத்துகளின் வரிசையைப் பார்த்தால் அந்த இடத்தில் றகரத்திற்கான வரி வரவேண்டும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் என்ற மெய்யெழுத்துகளின் வரிசையில் ளகரத்திற்குப் பின்னரும்,னகரத்திற்கு முன்னரும் வருவது றகரம். அதனால் இந்த வரி 'அறனை மறவேல்' என்று இருந்திருக்க வேண்டும். யாரோ அறியாமலோ அறிந்தோ இதனை 'அரனை மறவேல்' என்று எழுதிவிட்டார்கள். அந்தத் தவறு இணையத்தில் அப்படியே பரவுகிறது.
ஆத்திசூடி என்று இந்த நூல் தொடங்குவதால் இந்த நூல் இப்பெயரைப் பெற்றது என்று ஓரிடத்தில் படித்தேன். அறம் செய விரும்பு என்று தானே இந்த நூல் தொடங்கும் என்ற ஐயம் எழுந்ததால் இணையத்தில் தேடிய போது, இந்த நூலின் கடவுள் வாழ்த்து ஆத்திசூடி என்று தொடங்குவதைக் கண்டேன். அதனைப் பற்றி இங்கே இப்போது எழுதவில்லை.
இந்நூலின் இணையப் பதிப்புகள் பலவற்றிலும் காணப்படும் ஒரு தவறினைச் சுட்டிக்காட்டுவதே இந்த இடுகையின் நோக்கம்.
உயிர் எழுத்துகள், ஆய்தம் இரண்டு வகைகளையும் எழுதிய பின்னர் மெய்யெழுத்துகளின் வரிசையில் சில சூத்திரங்கள் இந்த நூலில் இருக்கின்றன. (மெய், உயிர்மெய் அடிப்படைகளிலும் ஆத்திசுடி சூத்திரங்களைச் சொல்கின்றது என்பதும் இன்று தான் தெரியும்). மெய்யெழுத்துகளின் வரிசையைப் படித்துக் கொண்டு வரும் போது தான் 'அரனை மறவேல்' என்ற வரியைப் படித்தேன். ரகரத்திற்கு ஏற்கனவே 'அரவம் ஆட்டேல்' என்று ஒரு வரியைப் படித்தோமே; மீண்டும் எதற்கு இன்னொரு தடவை ரகரத்திற்கு ஒரு வரி வருகிறது என்று ஒரு ஐயம். மெய்யெழுத்துகளின் வரிசையைப் பார்த்தால் அந்த இடத்தில் றகரத்திற்கான வரி வரவேண்டும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் என்ற மெய்யெழுத்துகளின் வரிசையில் ளகரத்திற்குப் பின்னரும்,னகரத்திற்கு முன்னரும் வருவது றகரம். அதனால் இந்த வரி 'அறனை மறவேல்' என்று இருந்திருக்க வேண்டும். யாரோ அறியாமலோ அறிந்தோ இதனை 'அரனை மறவேல்' என்று எழுதிவிட்டார்கள். அந்தத் தவறு இணையத்தில் அப்படியே பரவுகிறது.
Monday, February 22, 2010
புறநானூறு போற்றும் பொலிந்த அருந்தவத்தோன்!
அகத்திணைப் பாடல்களின் தொகுப்பான அகநானூறு என்ற சங்க கால தொகை நூலிற்கு கடவுள் வாழ்த்து பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற புலவர் பெருமான் புறத்திணைப் பாடல்களின் தொகுப்பான புறநானூறு என்ற தொகை நூலிற்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். அங்கு போலவே இங்கும் சிவபெருமானின் திருவுருவ சிந்தனை ஓங்கும் வண்ணம் இப்பாடலும் இயற்றப்பட்டிருக்கிறது.
கண்ணி கார் நறுங்கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியாக் கரகத்து
தாழ் சடை பொலிந்த அருந்தவத்தோற்கே.
மஞ்சள், வெள்ளை, கருப்பு என்று பல நிறங்களை சிவபெருமானின் திருவுருவத்தில் கண்டு அக்காட்சியை ஒரு வண்ணக்காட்சியாகத் தருகிறது இந்த கடவுள் வாழ்த்து.
மழைக்காலத்தில் மலர்வது மஞ்சள் நிறம் உடைய மணம் வீசும் கொன்றைப்பூ. அப்பூவினால் ஆன கண்ணியைத் தன் தலையில் சூடியவன் சிவபெருமான். அழகிய வண்ண மார்பின் மீது அணிந்த தாராகவும் அக்கொன்றைப்பூவே இருக்கின்றது. கண்ணி என்பதற்கு தார் என்பதற்கும் பொருளை, அகநானூற்றின் கடவுள் வாழ்த்தினைப் பார்க்கும் போது பார்த்தோம். மாதொருபாகனாக விளங்கும் திருவடிவைப் போற்றும் வகையில் அங்கே கார்விரிக் கொன்றை பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன் என்று மாலை அணிந்ததையும் பாடினார் புலவர். இங்கே பெண் உருவை மறைத்துத் தோன்றும் திருவடிவைப் போற்றுகிறார் போலும். அதனால் தான் மாலையைப் பாடாமல் கண்ணியையும் தாரையும் மட்டும் பாடினார். கண்ணி கார் நறுங்கொன்றை; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை!
சிவபெருமானது ஊர்தி (வாகனம்) ஒளிவீசும் வெண்ணிறம் கொண்ட விடை, இடபம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஆனேறு. அவனுடைய சிறப்பினை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் சீர் மிக்க கொடியும் அந்த ஏற்றை உடையதே. ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப!
இப்படி மஞ்சளும் வெண்மையும் அழகு செய்தது போதாதென்று நஞ்சையுண்டு உலகைக் காத்ததால் பெற்ற தொண்டையின் கருநிறம் சிவபெருமானின் திருவுருவத்திற்கு இன்னும் அழகு சேர்த்தது. கறை கொண்ட திருமிடறு (தொண்டை) அழகு செய்தலும் செய்தது; கறை மிடறு அணியலும் அணிந்தன்று!
அக்கறை மூவுலகத்தாரையும் காக்க ஏற்பட்டதால் மறைகளைச் சொல்லும் அந்தணர்களால் போற்றப்படும். அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே!
பெண் என்ற சொல்லுக்கே இலக்கணமான உமையன்னையை தன் உடலில் ஒரு பாகத்தில் வைத்திருப்பவன் சிவபெருமான். சில நேரங்களில் அந்தப் பெண் உருவைத் தன்னுள் அடக்கி மறைத்தாலும் மறைப்பான். பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் கரக்கினும் கரக்கும்!
பிறையைப் போல் வளைந்த நெற்றி அழகுடையதாக இருக்கிறது; பிறை நிலவு நெற்றியின் மேல் நின்று அழகு பெற்றது; பிறை நுதல் வண்ணம் ஆகின்று!
இறைவன் சூடியதால் அப்பிறை நிலவு பதினெட்டு வகைக் கூட்டத்தாரால் போற்றப்படும். அப்பதினெட்டு வகையினர் தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளர், தாராகணம் (விண்மீன் கூட்டம்), ஆகாசவாசிகள், பூலோகவாசிகள். (இப்படி ஒரு பட்டியலைத் தந்துவிட்டு 'பிறவாறும் உரைப்பர்' என்றும் சொல்கிறது உரை. பிறவாறு எப்படி பொருள் உரைக்கப்பட்டது என்பதைத் தேடிக் காணவேண்டும்). அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே!
எல்லா உயிர்களுக்கும் காவலாக விளங்கும், நீர் வற்றியறியாத கங்கையைத் தலையில் சூடிய, நீர் வற்றியறியாத சிறு குடத்தை (குண்டிகையை) உடைய, தாழ்ந்த திருச்சடையை உடைய, சிறந்த செய்தற்கு அரிய தவத்தை உடைய சிவபெருமானுக்கு இத்திருவுருவம் அமைந்திருக்கிறது. எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய நீர் அறவு அறியாக் கரகத்து தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோற்கே!
கண்ணி கார் நறுங்கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை;
ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியாக் கரகத்து
தாழ் சடை பொலிந்த அருந்தவத்தோற்கே.
மஞ்சள், வெள்ளை, கருப்பு என்று பல நிறங்களை சிவபெருமானின் திருவுருவத்தில் கண்டு அக்காட்சியை ஒரு வண்ணக்காட்சியாகத் தருகிறது இந்த கடவுள் வாழ்த்து.
மழைக்காலத்தில் மலர்வது மஞ்சள் நிறம் உடைய மணம் வீசும் கொன்றைப்பூ. அப்பூவினால் ஆன கண்ணியைத் தன் தலையில் சூடியவன் சிவபெருமான். அழகிய வண்ண மார்பின் மீது அணிந்த தாராகவும் அக்கொன்றைப்பூவே இருக்கின்றது. கண்ணி என்பதற்கு தார் என்பதற்கும் பொருளை, அகநானூற்றின் கடவுள் வாழ்த்தினைப் பார்க்கும் போது பார்த்தோம். மாதொருபாகனாக விளங்கும் திருவடிவைப் போற்றும் வகையில் அங்கே கார்விரிக் கொன்றை பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன் என்று மாலை அணிந்ததையும் பாடினார் புலவர். இங்கே பெண் உருவை மறைத்துத் தோன்றும் திருவடிவைப் போற்றுகிறார் போலும். அதனால் தான் மாலையைப் பாடாமல் கண்ணியையும் தாரையும் மட்டும் பாடினார். கண்ணி கார் நறுங்கொன்றை; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை!
சிவபெருமானது ஊர்தி (வாகனம்) ஒளிவீசும் வெண்ணிறம் கொண்ட விடை, இடபம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஆனேறு. அவனுடைய சிறப்பினை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் சீர் மிக்க கொடியும் அந்த ஏற்றை உடையதே. ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப!
இப்படி மஞ்சளும் வெண்மையும் அழகு செய்தது போதாதென்று நஞ்சையுண்டு உலகைக் காத்ததால் பெற்ற தொண்டையின் கருநிறம் சிவபெருமானின் திருவுருவத்திற்கு இன்னும் அழகு சேர்த்தது. கறை கொண்ட திருமிடறு (தொண்டை) அழகு செய்தலும் செய்தது; கறை மிடறு அணியலும் அணிந்தன்று!
அக்கறை மூவுலகத்தாரையும் காக்க ஏற்பட்டதால் மறைகளைச் சொல்லும் அந்தணர்களால் போற்றப்படும். அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே!
பெண் என்ற சொல்லுக்கே இலக்கணமான உமையன்னையை தன் உடலில் ஒரு பாகத்தில் வைத்திருப்பவன் சிவபெருமான். சில நேரங்களில் அந்தப் பெண் உருவைத் தன்னுள் அடக்கி மறைத்தாலும் மறைப்பான். பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் கரக்கினும் கரக்கும்!
பிறையைப் போல் வளைந்த நெற்றி அழகுடையதாக இருக்கிறது; பிறை நிலவு நெற்றியின் மேல் நின்று அழகு பெற்றது; பிறை நுதல் வண்ணம் ஆகின்று!
இறைவன் சூடியதால் அப்பிறை நிலவு பதினெட்டு வகைக் கூட்டத்தாரால் போற்றப்படும். அப்பதினெட்டு வகையினர் தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளர், தாராகணம் (விண்மீன் கூட்டம்), ஆகாசவாசிகள், பூலோகவாசிகள். (இப்படி ஒரு பட்டியலைத் தந்துவிட்டு 'பிறவாறும் உரைப்பர்' என்றும் சொல்கிறது உரை. பிறவாறு எப்படி பொருள் உரைக்கப்பட்டது என்பதைத் தேடிக் காணவேண்டும்). அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே!
எல்லா உயிர்களுக்கும் காவலாக விளங்கும், நீர் வற்றியறியாத கங்கையைத் தலையில் சூடிய, நீர் வற்றியறியாத சிறு குடத்தை (குண்டிகையை) உடைய, தாழ்ந்த திருச்சடையை உடைய, சிறந்த செய்தற்கு அரிய தவத்தை உடைய சிவபெருமானுக்கு இத்திருவுருவம் அமைந்திருக்கிறது. எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய நீர் அறவு அறியாக் கரகத்து தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோற்கே!
Saturday, December 26, 2009
அகநானூறு போற்றும் புரிசடை அந்தணன்

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் சங்க கால தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு போன்ற பல தொகுப்புகளுக்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த எட்டுத் தொகை நூல்கள். யார் இவற்றைத் தொகுத்தார்கள் என்ற குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏரணப்படி பார்த்தால் தொகுக்கும் காலத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கலாம்; கடவுள் வாழ்த்து பாடியவரே தொகுத்த புலவராகவும் இருக்கலாம் - என்று தோன்றுகிறது. உறுதிபடுத்த மேற்கொண்டு ஆராய்ச்சிகள் வேண்டும்; ஏற்கனவே ஆய்வுகள் நடந்திருந்தால் அந்த ஆய்வுகளை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும். இந்த ஏரணம் சரி என்றால் பாரதம் பாடிய பெருந்தேவனாரே அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களைத் தொகுத்தவராவார்.
எட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.
அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.
கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!
பொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்.

ஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
தார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.
இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?
இந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.
'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.
சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.
தேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே! இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.
சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.
அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.
தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.
திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.
வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.
யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.
தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே! இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!
எட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.
அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.
கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!
பொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்.

ஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
தார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.
இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?
இந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.
'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.
சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.
தேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே! இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.
சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.
அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.
தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.
திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.
வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.
யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.
தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே! இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!
Saturday, June 13, 2009
கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 2

கலித்தொகையின் கடவுள் வாழ்த்தாக கலித்தொகையைத் தொகுத்த 'மதுரையாசிரியன் நல்லந்துவனார்' இயற்றிய 'ஆறறி அந்தணர்' என்று தொடங்கும் கடவுள் வாழ்த்தினைச் சென்ற பகுதியிலிருந்து பார்த்து வருகிறோம். அந்தப் பாடலின் முதல் நான்கு அடிகளுக்கான விளக்கங்களைச் சென்ற இடுகையில் பார்த்தோம். இந்த இடுகையில் மற்ற அடிகளுக்கான விளக்கங்களைக் காண்போம்.
ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.
'வாழும் வழிமுறைகளை அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் பகர்ந்து, தெளிந்த நீரைச் சடையில் மறைத்து, திரிபுரங்களைத் தீ மடுத்து, மொழியாலும் நினைவாலும் எட்ட இயலாத கடுமையான கூளி எனும் தோல்வியில்லாத கடும்போரினை நடத்தும் கரியமணி போன்ற கழுத்தினை உடைய எட்டுகைகளைக் கொண்டவனே இனி நான் சொல்வதைக் கேட்பாய்' என்று இறைவனை முன்னிலை விளியில் விளித்துப் பாடலைப் பாடுகிறார் நல்லந்துவனார்.
பாடுகிறார் என்று சொன்னது வெறும் எழில் வார்த்தை இல்லை. இப்பாடல் இசையுடன் பாடப்பட்டதே என்று முன்னோர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். பாடல் வரிகளைப் பார்த்தாலும் இது இசைப்பா என்பது புரியும்.
எண் தோள் ஈசன் ஊழிக்கூத்து ஆடும் போது ஒலி மிக்க பல பறைகள் ஒலி செய்கின்றன. அவன் திருக்கையினில் இருக்கும் உடுக்கையும் இங்கே சொல்லப்பட்ட பறைகளில் ஒன்று - அதுவும் ஓங்கி ஒலிக்கின்றது. படுபறைகள் பல இயம்ப இறைவன் ஆடும் போது மாறி மாறிப் பல்வேறு வடிவங்களும் காட்டுகின்றான். அவன் காட்டும் அவ்வடிவங்கள் எல்லாம் அண்டங்களின் வடிவங்கள். அவை ஒவ்வொன்றையும் மீண்டும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்கின்றான். அப்படி ஒடுக்கத்திற்காக அவன் ஆடும் ஆட்டம் கொடியதாக 'கொட்டி' என்னும் ஆட்டம். இதனைப் புலவர் 'படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டி ஆடும்' என்று குறிக்கிறார்.
எல்லா அண்டங்களும் இறைவனிடமிருந்தே தோன்றி அவனுள்ளே ஒடுங்குவதால் 'பல்லுருவம் பெயர்த்து' என்றார் புலவர். 'நீல மேனி வால் இழைப் பாகத்து ஒருவன் இரு தாள் நிழல் கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே' என்று ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து அண்டங்களெல்லாம் சிவபெருமானிடத்திலிருந்து தோன்றுவதைக் காட்டும். 'மணி மிடற்று அந்தணன் தாவில் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே' என்று அகநானூற்றின் கடவுள் வாழ்த்து உலகங்களெல்லாம் நிலைபெற்றிருப்பது சிவபெருமானின் திருவடி நிழலில் என்று சொல்லும்.
'போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்' என்றும், 'போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்' என்றும் திருவாசகத்தின் பகுதியான திருவெம்பாவை பாடும்.
அப்படி யாவையும் ஒழிக்கும் காலத்தில் இறைவன் கொட்டி என்னும் ஆட்டத்தை ஆடும் போது அவன் அருகில் உமையன்னை இருந்து தாளத்தின் நிறைவினைக் குறிக்கும் சீரைத் தருவாளோ என்று புலவர் கேட்பது அன்னை அருளுருவாக இருக்க உலகனைத்தையும் நீ அழிக்கும் போது அதற்கு துணை போவாளோ என்று கேட்பது போல் இருக்கிறது. ஆனால் உலகெல்லாம் அழிந்து போனபடியால் அவளைத் தவிர தாளத்தின் காலங்களை உணர்த்த வேறு யாரும் இல்லை என்றும் சொல்வது போலவும் இருக்கிறது.
பக்கங்களில் உயர்ந்து அகன்ற அல்குலையும் கொடி போன்ற நுண்மையான இடுப்பினையும் கொண்டவள் உமையம்மை என்று அன்னையின் எழிலுருவை இந்த இடத்தில் புகழ்கிறார் புலவர்.
முடிவில்லாத பல போர்களையும் வென்று அந்த வலிமையால் பகைவரின் வெந்த உடலின் நீற்றினை அணிந்து நீ பாண்டரங்கம் என்னும் கொடிய ஆட்டத்தை ஆடும் போது மூங்கிலைப் போன்ற வடிவினை உடைய தோள்களையும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய உமையம்மை தாளத்தின் இடைக்காலத்தை உணர்த்தும் தூக்கினைத் தருவாளோ? அங்கு தான் வேறு யாரும் இல்லையே. அவள் தான் தரவேண்டும்.
கொல்லும் தொழிலையுடைய புலியை நீ கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டு கொன்றைப்பூவால் செய்த மாலை தோளிலே அசைய, அயனுடைய (பிரம்மனுடைய) தலையைக் கையிலே ஏந்திக் கொண்டு நீ 'காபாலம்' என்னும் கூத்தினை ஆடும் போது முல்லையை ஒத்த புன்முறுவலை உடையவளோ தாளத்தின் தொடக்கத்தினைக் குறிக்கும் பாணியைத் தருவாள்? அவள் தான் தரவேண்டும். அப்போது தான் வேறு யாரும் இல்லையே.
கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் இந்த மூவகை ஆட்டங்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் பேசுகின்றது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்போது கொட்டியென்பது உலகை அழிக்கும் தொழிலின் போது ஆடும் கூத்து என்றும், பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை அழித்த போது ஆடிய கூத்து என்றும், காபாலம் என்பது அயன் தலையைக் கொய்த போது ஆடிய கூத்து என்றும் சொல்கிறதாம்.
அயன் உலகைப் படைக்கும் தொழிலை உடையவன் என்பதால் அவன் தலையைக் கொய்த பின் ஆடும் ஆட்டமான காபாலத்திற்கு 'பாணி' என்னும் தாளத் தொடக்கத்தை உமையம்மை தருகிறாள் போலும்.
தீமையை அழித்து நன்மையைக் காத்த நிகழ்வாகத் திரிபுரம் எரித்தது அமைவதால் அப்போது ஆடும் பாண்டரங்கத்திற்கு 'தூக்கு' என்னும் தாளத்தின் இடைநிலையைத் தருகிறாள் போலும் உமையன்னை.
உலகெல்லாம் அழிந்து நீறாகப் போகும் நிலையில் ஆடும் ஆட்டம் 'கொட்டி' என்பதால் அந்த நேரத்தில் தாளத்தின் முடிவான 'சீரினை'த் தருகிறாள் போலும் அம்மை.
ஆணவம் மிகுந்த போது அதனை அழித்த கூத்து முதலாவதான காபாலம். பிறருக்குத் தீங்கு விளைத்தாரை அழித்த கூத்து இரண்டாவதான பாண்டரங்கம். அனைத்தையும் அழித்த கூத்து மூன்றாவதான கொட்டி.
இப்படியாக அழிக்கும் தொழிலை நிகழ்த்தும் ஆட்டங்களை நீ ஆடும் போது அவைகளுக்கு உரிய 'பாணி', 'தூக்கு', 'சீர்' என்னும் தாள காலங்களை சிறப்பான அணிகலன்களை அணிந்த அம்மை காத்து நிற்க, நீ ஆடுகின்றாயோ? அன்னை அப்போது அருகிருக்கும் அருட்செயலினால் தான் போலும் நீ வெம்மையை நீக்கி அன்பற்ற பொருளான எமக்கும் அருள் தர ஒரு உருவோடு வந்து எதிர் நின்றாய்.
சிவபெருமானை வடமொழி வேதம் புகழவில்லை; உருத்திரனைத் தான் போற்றுகிறது. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியங்களோ உருத்திரனைப் போற்றவில்லை; சிவபெருமானையே போற்றுகின்றது என்று சில அன்பர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த சங்கப் பாடல் மிகவும் விரிவாக சிவபெருமானின் உருத்திரத் திருக்கோலத்தைப் பாடிப் போற்றுகிறது. நுணிகிப் பார்த்தால் உருத்திரக் கோலத்தைப் போற்றும் சங்கப் பாடல்களும் மிகுதியாக இருப்பது புலப்படுகிறது.
ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.
'வாழும் வழிமுறைகளை அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் பகர்ந்து, தெளிந்த நீரைச் சடையில் மறைத்து, திரிபுரங்களைத் தீ மடுத்து, மொழியாலும் நினைவாலும் எட்ட இயலாத கடுமையான கூளி எனும் தோல்வியில்லாத கடும்போரினை நடத்தும் கரியமணி போன்ற கழுத்தினை உடைய எட்டுகைகளைக் கொண்டவனே இனி நான் சொல்வதைக் கேட்பாய்' என்று இறைவனை முன்னிலை விளியில் விளித்துப் பாடலைப் பாடுகிறார் நல்லந்துவனார்.
பாடுகிறார் என்று சொன்னது வெறும் எழில் வார்த்தை இல்லை. இப்பாடல் இசையுடன் பாடப்பட்டதே என்று முன்னோர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். பாடல் வரிகளைப் பார்த்தாலும் இது இசைப்பா என்பது புரியும்.
எண் தோள் ஈசன் ஊழிக்கூத்து ஆடும் போது ஒலி மிக்க பல பறைகள் ஒலி செய்கின்றன. அவன் திருக்கையினில் இருக்கும் உடுக்கையும் இங்கே சொல்லப்பட்ட பறைகளில் ஒன்று - அதுவும் ஓங்கி ஒலிக்கின்றது. படுபறைகள் பல இயம்ப இறைவன் ஆடும் போது மாறி மாறிப் பல்வேறு வடிவங்களும் காட்டுகின்றான். அவன் காட்டும் அவ்வடிவங்கள் எல்லாம் அண்டங்களின் வடிவங்கள். அவை ஒவ்வொன்றையும் மீண்டும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்கின்றான். அப்படி ஒடுக்கத்திற்காக அவன் ஆடும் ஆட்டம் கொடியதாக 'கொட்டி' என்னும் ஆட்டம். இதனைப் புலவர் 'படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டி ஆடும்' என்று குறிக்கிறார்.
எல்லா அண்டங்களும் இறைவனிடமிருந்தே தோன்றி அவனுள்ளே ஒடுங்குவதால் 'பல்லுருவம் பெயர்த்து' என்றார் புலவர். 'நீல மேனி வால் இழைப் பாகத்து ஒருவன் இரு தாள் நிழல் கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே' என்று ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து அண்டங்களெல்லாம் சிவபெருமானிடத்திலிருந்து தோன்றுவதைக் காட்டும். 'மணி மிடற்று அந்தணன் தாவில் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே' என்று அகநானூற்றின் கடவுள் வாழ்த்து உலகங்களெல்லாம் நிலைபெற்றிருப்பது சிவபெருமானின் திருவடி நிழலில் என்று சொல்லும்.
'போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்' என்றும், 'போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்' என்றும் திருவாசகத்தின் பகுதியான திருவெம்பாவை பாடும்.
அப்படி யாவையும் ஒழிக்கும் காலத்தில் இறைவன் கொட்டி என்னும் ஆட்டத்தை ஆடும் போது அவன் அருகில் உமையன்னை இருந்து தாளத்தின் நிறைவினைக் குறிக்கும் சீரைத் தருவாளோ என்று புலவர் கேட்பது அன்னை அருளுருவாக இருக்க உலகனைத்தையும் நீ அழிக்கும் போது அதற்கு துணை போவாளோ என்று கேட்பது போல் இருக்கிறது. ஆனால் உலகெல்லாம் அழிந்து போனபடியால் அவளைத் தவிர தாளத்தின் காலங்களை உணர்த்த வேறு யாரும் இல்லை என்றும் சொல்வது போலவும் இருக்கிறது.
பக்கங்களில் உயர்ந்து அகன்ற அல்குலையும் கொடி போன்ற நுண்மையான இடுப்பினையும் கொண்டவள் உமையம்மை என்று அன்னையின் எழிலுருவை இந்த இடத்தில் புகழ்கிறார் புலவர்.
முடிவில்லாத பல போர்களையும் வென்று அந்த வலிமையால் பகைவரின் வெந்த உடலின் நீற்றினை அணிந்து நீ பாண்டரங்கம் என்னும் கொடிய ஆட்டத்தை ஆடும் போது மூங்கிலைப் போன்ற வடிவினை உடைய தோள்களையும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய உமையம்மை தாளத்தின் இடைக்காலத்தை உணர்த்தும் தூக்கினைத் தருவாளோ? அங்கு தான் வேறு யாரும் இல்லையே. அவள் தான் தரவேண்டும்.
கொல்லும் தொழிலையுடைய புலியை நீ கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டு கொன்றைப்பூவால் செய்த மாலை தோளிலே அசைய, அயனுடைய (பிரம்மனுடைய) தலையைக் கையிலே ஏந்திக் கொண்டு நீ 'காபாலம்' என்னும் கூத்தினை ஆடும் போது முல்லையை ஒத்த புன்முறுவலை உடையவளோ தாளத்தின் தொடக்கத்தினைக் குறிக்கும் பாணியைத் தருவாள்? அவள் தான் தரவேண்டும். அப்போது தான் வேறு யாரும் இல்லையே.
கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் இந்த மூவகை ஆட்டங்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் பேசுகின்றது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்போது கொட்டியென்பது உலகை அழிக்கும் தொழிலின் போது ஆடும் கூத்து என்றும், பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை அழித்த போது ஆடிய கூத்து என்றும், காபாலம் என்பது அயன் தலையைக் கொய்த போது ஆடிய கூத்து என்றும் சொல்கிறதாம்.
அயன் உலகைப் படைக்கும் தொழிலை உடையவன் என்பதால் அவன் தலையைக் கொய்த பின் ஆடும் ஆட்டமான காபாலத்திற்கு 'பாணி' என்னும் தாளத் தொடக்கத்தை உமையம்மை தருகிறாள் போலும்.
தீமையை அழித்து நன்மையைக் காத்த நிகழ்வாகத் திரிபுரம் எரித்தது அமைவதால் அப்போது ஆடும் பாண்டரங்கத்திற்கு 'தூக்கு' என்னும் தாளத்தின் இடைநிலையைத் தருகிறாள் போலும் உமையன்னை.
உலகெல்லாம் அழிந்து நீறாகப் போகும் நிலையில் ஆடும் ஆட்டம் 'கொட்டி' என்பதால் அந்த நேரத்தில் தாளத்தின் முடிவான 'சீரினை'த் தருகிறாள் போலும் அம்மை.
ஆணவம் மிகுந்த போது அதனை அழித்த கூத்து முதலாவதான காபாலம். பிறருக்குத் தீங்கு விளைத்தாரை அழித்த கூத்து இரண்டாவதான பாண்டரங்கம். அனைத்தையும் அழித்த கூத்து மூன்றாவதான கொட்டி.
இப்படியாக அழிக்கும் தொழிலை நிகழ்த்தும் ஆட்டங்களை நீ ஆடும் போது அவைகளுக்கு உரிய 'பாணி', 'தூக்கு', 'சீர்' என்னும் தாள காலங்களை சிறப்பான அணிகலன்களை அணிந்த அம்மை காத்து நிற்க, நீ ஆடுகின்றாயோ? அன்னை அப்போது அருகிருக்கும் அருட்செயலினால் தான் போலும் நீ வெம்மையை நீக்கி அன்பற்ற பொருளான எமக்கும் அருள் தர ஒரு உருவோடு வந்து எதிர் நின்றாய்.
சிவபெருமானை வடமொழி வேதம் புகழவில்லை; உருத்திரனைத் தான் போற்றுகிறது. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியங்களோ உருத்திரனைப் போற்றவில்லை; சிவபெருமானையே போற்றுகின்றது என்று சில அன்பர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த சங்கப் பாடல் மிகவும் விரிவாக சிவபெருமானின் உருத்திரத் திருக்கோலத்தைப் பாடிப் போற்றுகிறது. நுணிகிப் பார்த்தால் உருத்திரக் கோலத்தைப் போற்றும் சங்கப் பாடல்களும் மிகுதியாக இருப்பது புலப்படுகிறது.
Friday, June 12, 2009
கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 1

எல்லா உலகங்களுக்கும் முதல் காரணமாகவும் அதே நேரத்தில் தனக்கு வேறெதுவும் காரணம் இன்றித் தான் அநாதியாகவும் விளங்குபவன் சிவபெருமான். அநாதி மட்டுமின்றி அனந்தனும் ஆனவன்; அவனுக்கு அழிவும் கிடையாது. அவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் ஆற்றும் முதல்வன். ஊழிக் காலத்திலே அனைத்தையும் தனக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் தோற்றுவிப்பவன் அவனே. ஊழிப்பெருங்கூத்தினை அவன் ஆடி உலகனைத்தையும் அழித்து வரும் வேளையிலே அன்னை பராசக்தியின் அருள் நிறைந்த பார்வையினைக் கண்டுப் படிப்படியாக வேகம் குறைந்து அமைதி அடைந்து ஆதிசக்தியின் துணையோடு அனைத்துலகையும் மீண்டும் படைப்பான். ஊழிப் பெருங்கூத்தை சிவபெருமான் ஆடுவதையும் அப்போது உமையன்னை அருகிருந்து அவனை அமைதிப்படுத்துவதையும் மிக அழகான ஓவியமாக கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் காட்டுகிறார் 'மதுரை ஆசிரியன்'
என்ற சிறப்புப் பெயர் பெற்ற நல்லந்துவனார் என்னும் புலவர். இவரே இக்கலித்தொகை என்ற நூலில் நெய்தல் திணைக்கு உரிய பாடல்களைப் பாடி இக்கலித்தொகை என்னும் நூலினைத் தொகுத்தவர்.
ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.
அந்தணர் என்போர் அறவோர் என்றது அருந்தமிழ். ஒழுக்க நெறியை நன்கு அறிந்தவரே அந்தணர். ஆறு என்றால் வழி என்று ஒரு பொருள் உண்டு. ஒழுக்க வழிமுறைகளையும் வாழ்க்கை வழிமுறைகளையும் நன்கு அறிந்தவர்களே அந்தணர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள். பிறப்பால் அந்தணர் என்று பெயர் பெற்றவர்கள் அல்லர். அப்படி 'ஆறு (வழி) அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் சொன்னவன் இறைவன்' என்கிறது இந்தப் பாடலின் முதல் அடி. கல்லால மரத்தின் கீழ் தென்முகக் கடவுளாக சிவபெருமான் அமர்ந்து அந்தணர்களுக்கு அருமறைகள் உரைத்ததாக பழங்கதைகள் கூறும். அச்செய்தியினை இந்தப் பாடலின் அடி கூறுகின்றது. மறைகள் பற்பல என்றும் எண்ணில்லாதவை என்றும் முன்னோர் சொல்லுவார்கள். அம்மறைகளை நான்காகத் தொகுத்து நான்மறைகள் என்று உரைக்கும் மரபு தோன்றுவதற்கு முன்னர் இருந்த நிலையை 'நான்மறைகள் பகர்ந்து' என்று சொல்லாமல் 'அருமறைகள் பல பகர்ந்து' என்பதால் இந்தப் பாடல் கூறுவதாகத் தோன்றுகிறது.
அருமறைகளுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அந்த ஆறங்கங்களை அறிந்த அந்தணர்கள் என்பதையே 'ஆறு அறி அந்தணர்' என்று இந்தப் பாடலடி கூறுவதாகச் சொல்பவரும் உண்டு. 'ஆறு அறி' என்ற இடத்தில் அது வினைத்தொகையாக அமைகின்ற காரணத்தால் 'ஆறு அறியும், ஆறு அறிந்த, ஆறு அறியப் போகும்' என்று முக்காலத்திற்கும் பொருள் தரும்படி அமைந்திருக்கிறது. அருமறை பல இறைவன் அந்தணர்க்குப் பகர்ந்த பின்னர் அவர்கள் ஆறு அறிந்தார்கள் என்று சொன்னாலும் பொருந்தும். அந்த வகையில் அருமறைகளின் அங்கங்ளான ஆறங்களையும் அருமறையை இறைவனிடம் இருந்து அறிந்த பின்னர் அறிந்தனர் அந்தணர் என்றாலும் பொருத்தம் ஆகும்.
அருமறையைக் கொண்டவர்களைப் பார்ப்பார் என்று அழைக்க வேண்டும்; அந்தணர் என்று அழைக்கக் கூடாது என்று சில அன்பர்கள் இக்காலத்தில் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களைக் கண்டால் இவ்விரு சொற்களும் ஒரு பொருட் பன்மொழியாக, ஒத்த பொருள் கொண்ட இரு சொற்களாகத் தான் விளங்குகின்றன என்பதற்கு இந்தப் பாடலின் முதல்
அடியும் ஒரு சான்று.
என்ற சிறப்புப் பெயர் பெற்ற நல்லந்துவனார் என்னும் புலவர். இவரே இக்கலித்தொகை என்ற நூலில் நெய்தல் திணைக்கு உரிய பாடல்களைப் பாடி இக்கலித்தொகை என்னும் நூலினைத் தொகுத்தவர்.
ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.
அந்தணர் என்போர் அறவோர் என்றது அருந்தமிழ். ஒழுக்க நெறியை நன்கு அறிந்தவரே அந்தணர். ஆறு என்றால் வழி என்று ஒரு பொருள் உண்டு. ஒழுக்க வழிமுறைகளையும் வாழ்க்கை வழிமுறைகளையும் நன்கு அறிந்தவர்களே அந்தணர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள். பிறப்பால் அந்தணர் என்று பெயர் பெற்றவர்கள் அல்லர். அப்படி 'ஆறு (வழி) அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் சொன்னவன் இறைவன்' என்கிறது இந்தப் பாடலின் முதல் அடி. கல்லால மரத்தின் கீழ் தென்முகக் கடவுளாக சிவபெருமான் அமர்ந்து அந்தணர்களுக்கு அருமறைகள் உரைத்ததாக பழங்கதைகள் கூறும். அச்செய்தியினை இந்தப் பாடலின் அடி கூறுகின்றது. மறைகள் பற்பல என்றும் எண்ணில்லாதவை என்றும் முன்னோர் சொல்லுவார்கள். அம்மறைகளை நான்காகத் தொகுத்து நான்மறைகள் என்று உரைக்கும் மரபு தோன்றுவதற்கு முன்னர் இருந்த நிலையை 'நான்மறைகள் பகர்ந்து' என்று சொல்லாமல் 'அருமறைகள் பல பகர்ந்து' என்பதால் இந்தப் பாடல் கூறுவதாகத் தோன்றுகிறது.
அருமறைகளுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அந்த ஆறங்கங்களை அறிந்த அந்தணர்கள் என்பதையே 'ஆறு அறி அந்தணர்' என்று இந்தப் பாடலடி கூறுவதாகச் சொல்பவரும் உண்டு. 'ஆறு அறி' என்ற இடத்தில் அது வினைத்தொகையாக அமைகின்ற காரணத்தால் 'ஆறு அறியும், ஆறு அறிந்த, ஆறு அறியப் போகும்' என்று முக்காலத்திற்கும் பொருள் தரும்படி அமைந்திருக்கிறது. அருமறை பல இறைவன் அந்தணர்க்குப் பகர்ந்த பின்னர் அவர்கள் ஆறு அறிந்தார்கள் என்று சொன்னாலும் பொருந்தும். அந்த வகையில் அருமறைகளின் அங்கங்ளான ஆறங்களையும் அருமறையை இறைவனிடம் இருந்து அறிந்த பின்னர் அறிந்தனர் அந்தணர் என்றாலும் பொருத்தம் ஆகும்.
அருமறையைக் கொண்டவர்களைப் பார்ப்பார் என்று அழைக்க வேண்டும்; அந்தணர் என்று அழைக்கக் கூடாது என்று சில அன்பர்கள் இக்காலத்தில் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களைக் கண்டால் இவ்விரு சொற்களும் ஒரு பொருட் பன்மொழியாக, ஒத்த பொருள் கொண்ட இரு சொற்களாகத் தான் விளங்குகின்றன என்பதற்கு இந்தப் பாடலின் முதல்
அடியும் ஒரு சான்று.

கங்கை என்ற பெயருக்குத் தெளிவுடையவள் என்ற பொருள் உண்டு. கங்கை நீர் வெண்ணிறமாகவும் யமுனை நீர் கருநிறமாகவும் இருக்கும் என்றும் கங்கையும் யமுனையும் சரசுவதியும் கலக்கும் முக்கூடலுக்குச் சென்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அப்படி தெளிந்த நீர் கொண்ட கங்கை என்பதனைத் தேறு நீர் என்கிறார் புலவர். அப்படி தெளிந்த நீரான கங்கையைத் தன் சடையின் ஒரு பகுதியில் முடிந்து வைத்துக் கொண்டவன் சிவபெருமான். பகீரதனுக்காக உலகிற்கு வந்த கங்கையைத் தன் சடையில் முடிந்து அவள் விரைவினைச் சிவபெருமான் தடுத்த நிகழ்வினை இந்த அடி கூறுகின்றது.
கொடுஞ்செயல்கள் பல புரிந்து எங்கும் திரிந்து கொண்டிருந்த திரிபுரங்களையும் அதில் வாழ்ந்தவர்களையும் தன் சிரிப்பினாலேயே கொளுத்தியவன் சிவபெருமான். அந்த நிகழ்வினை 'திரிபுரம் தீ மடுத்து' என்ற பகுதியால் சொல்கிறது இந்தப் பாடல் அடி.
கூளி என்பது ஒரு கடுமையான போர் வகை. அதனை மிகத் திறமையாக ஆற்றும் ஆற்றல் கொண்டவன் சிவபெருமான். அப்போரில் சிவபெருமான் தோற்றதே இல்லை. அந்தப் போரினைப் பற்றி விவரித்துச் சொல்வது இயலாது. அப்படியே சொன்னாலும் அவை முழுவதும் அப்போரினைப் பற்றியும் அப்போரினில் சிவபெருமானின் திறமையைப் பற்றியும் சொல்லி முடியாது. அது வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத நிலையை உடையது. அதனை 'கூறாமல் குறித்து, அதன் மேல் செல்லும், கடும் கூளி மாறாப் போர்' என்கிறது இந்தப் பாடல் அடிகள்.
சிவபெருமானது போர்த்திறமை மட்டுமின்றி அவனது எச்செயலும் சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாதவை. இறைவனுக்கு உருவமில்லை என்றும் இறைவனுக்கு உருவத்தை மனிதர்கள் உருவகித்துக் கொண்டார்கள் என்றும் சில அன்பர்கள் இப்போது சொல்லிக் கொள்கிறார்கள். சிவபெருமானுக்கு உருவமும் உண்டு; அவன் அருவுருவினனும் கூட. அவனுடைய உருவத்தைக் குறிக்கும் படி 'மணி மிடற்றன்' என்றும் 'எண் கையாய்' என்றும் இந்தப் பாடல் கூறுகின்றது.
பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் கருமணி போன்ற மிடற்றினைப் பெற்றான் சிவபெருமான். அவனுக்கு எட்டு குணங்களும் உண்டு; எட்டு கைகளும் உண்டு. எண்குணத்தான் ஆகிய சிவபெருமானுக்கு எட்டு கைகளும் உண்டு என்பதை 'எண் கையாய்' என்ற சொல் உணர்த்துகிறது.
சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாத இறைவன் இப்போது மணிமிடற்றையும் எண் கைகளையும் தாங்கி உருவத்துடன் எதிரே நிற்கிறான். அவனை முன்னிலையாக வைத்து இந்தப் பாடல் பாடப்படுகின்றது என்பது 'கேள் இனி' என்னும் முன்னிலைச் சொற்களால் புரிகிறது.
வடமொழி புராணங்கள் கூறும் பல செய்திகளை இப்பாடலின் முதல் அடிகள் கூறுகின்றன. சங்க இலக்கிய தொகை நூல்கள் முதலில் ஆக்கப்பட்டன; பின்னர் கடவுள் வாழ்த்துப் பகுதிகள் இணைக்கப்பட்டன என்று ஒரு கருத்து உள்ளது. கடவுள் வாழ்த்துப் பகுதிகள் பிற்காலத்தவை ஆதலால் அவை வடமொழி நூல்களின் கருத்தினைச் சொல்வது இயல்பு என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அந்த கருத்து மற்ற நூல்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் இந்த கலித்தொகை நூலினைத் தொகுத்த பரங்குன்றத்து வாழ்ந்த மதுரையாசிரியர் நல்லந்துவனாரே இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடியுள்ளதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் ஒரே காலத்தவை என்று அறியலாம்.
(தொடரும்)
Friday, January 16, 2009
சிவபெருமானைப் போற்றும் பதிற்றுப்பத்து
சேர மன்னர்களைப் பற்றிய பத்து * பத்து = நூறு பாடல்களைக் கொண்டது பதிற்றுப்பத்து. பல மன்னர்களைப் பல புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்ததால் இது தொகை நூலாகும். சங்க இலக்கியத்தின் ஒரு வகையான எட்டுத்தொகை நூற்களில் ஒன்று.
இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து உண்டா இல்லையா என்று உறுதியாகத் தெரியவில்லை. 'மதுரைத் திட்டம்' கடவுள் வாழ்த்துப் பகுதி இல்லாமலேயே பதிற்றுப்பத்தினைக் காட்டுகிறது. இணையப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலில் ஆசிரியர் பெயர் சொல்லாமல் ஒரு பாடல் கடவுள் வாழ்த்தாக இருக்கிறது. ஆனால் அங்கேயே இருக்கும் உரை நூலில் அந்தப் பாடலைக் காணவில்லை. பாடலைப் படித்துப் பார்த்தால் சங்க காலப் பாடலைப் போன்று தான் இருக்கிறது. உரையின் துணையின்றி எனக்குப் புரிந்த வரையில் இந்தப் பாடலின் பொருளை எழுதுகிறேன். இந்தப் பாடலைப் பற்றிய மேற்தகவல்கள் தெரிந்திருந்தாலோ பாடலின் பொருளைத் தவறாக எழுதியிருந்தாலோ சொல்லுங்கள்.
எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்க்
கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்க மா வலனே

வடமொழியில் இருக்கும் புராணங்கள் எல்லாம் தமிழரிடமிருந்து சென்றவை என்ற கருத்திற்கு அணி செய்யும் இன்னொரு பாடல் இது. சிவபெருமானின் 'உருவ அழகை'யும் (இலிங்கத் திருமேனியை இல்லை) புராணங்கள் கூறும் சிவபெருமானின் பெருமைகளையும் அழகாகக் கூறும் பாடல் இது.
எரி எள்ளு அன்ன நிறத்தன் - எரிகின்ற எள்ளினைப் போன்ற நிறத்தை உடையவன்.
சிவபெருமான் சிவந்தவன் என்பது தமிழர் மரபு. அதனாலேயே சேயோன் (சிவந்தவன்) என்னும் பெயர் தந்தைக்கும் மகனுக்கும் ஆகும் என்று சொல்வதுண்டு. எள்ளு எரியும் போது அது மிக அடர்த்தியான சிவப்பு நிறத்தில் எரியும். அப்படி எரியும் எள்ளினைப் போன்ற அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்டவன் சிவபெருமான்.
விரி இணர்க் கொன்றை அம் பைந்தார் அகலத்தன் - விரிந்த கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலை சூடிய மார்பன்.
நெஞ்சு அகன்று விரிந்து இருப்பது ஆண்மகனுக்கு அழகு. அப்படி அகன்று விரிந்த மார்பை அகலம் என்று சொல்வது மரபு. அப்போதே பறித்த விரிந்த பூங்கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலையை அணிந்தவன் சிவபெருமான்.
பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் - அடங்காத முப்புரத்தை உடையவர்களின் மதில்களை/கோட்டைகளை எரித்த வில்லை உடையவன்.
திரிபுராசுரர்கள் என்று சொல்லப்படும் முப்புரம் உடைய அசுரர்களின் முக்கோட்டைகளையும் சிவபெருமான் தன்னுடைய சினம் மேவிய சிரிப்பாலேயே எரித்து அழித்தார் என்று சொல்லும் புராணம். அப்படி முப்புரம் எரித்த போது மேரு மலையையே தன் கைவில்லாக ஏந்தி இருந்தானாம். அந்த செய்தியைச் சொல்கிறது 'வில்லன்' என்ற பெயர்.
பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் - இருள் நிறைந்த (சுடு)காட்டில் நிலையாக இருந்து ஆடும் ஆடல்வல்லவன்.
சிவபெருமான் சுடலையில் ஆடுபவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சுடலையை இங்கே 'இருள் பயில் காடு' என்ற தொடரால் சொல்லியிருக்கிறார்கள். அங்கேயே நிலையாக இருந்து ஆடுபவன் என்பதால் 'அமர்ந்து ஆடிய' என்றார்கள். அவன் ஆடல் வல்லான் என்பதால் 'ஆடலன்' என்றார்கள்.
நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன் - நீண்டு இரு புறங்களும் மறையும் படி தாழ்ந்து இருக்கும் சடைமுடியை உடையவன்.
சிவபெருமானுக்கு தாழ்சடை உண்டு என்பது தேவார திருவாசகங்களின் கூற்று. அந்த தாழ்சடை நீண்டு இரு புறங்களிலும் மறையும் படி நிற்கின்றதாம். சிவபெருமானின் உருவம் இப்பாடலின் வழி தியானிக்கக் கிடைக்கிறதா?
குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன் - தொடையில் அறைந்து நுண்ணிய ஒலி கொண்ட மணியை ஒலிக்கும் விழாவை உடையவன்.
ஆட்டத்தின் போது தன் திருத்தொடைகளை அறைந்து கொண்டு தன் திருக்கையில் இருக்கும் கண்டா மணியை ஒலிக்கும் செயல்களை சிவபெருமான் செய்வதாக இப்பாடல் வரி சொல்கிறது. நுண்ணிய ஒலியை எழுப்பும் மணி என்பதால் வெண்மணி என்றார் பாடலாசிரியர்.
நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் - நுட்பமான வேலைப்பாடுகள் உடைய உடுக்கையை அடிக்கும் விரலை உடையவன்.
சிவபெருமானின் திருக்கையில் துடி என்ற உடுக்கை இருக்கின்றது. உடுக்கைக்கு இன்னொரு பெயர் சிரந்தை. அது மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பதால் நுண்ணூல் சிரந்தை எனப்பட்டது. இரட்டுதல் என்றால் உடுக்கையின் இடுப்புப்பகுதியில் விரல்களை வைத்து இப்புறமும் அப்புறமும் அசைத்து ஒலி செய்தல். அப்படி உடுக்கையை ஒலிக்கும் விரல்களை உடையவன் சிவபெருமான்.
இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் - ஆணாகிப் பெண்ணாகி இருவுருவமும் ஆகி மாதொரு பாகனாய் நுண்ணிய அணிகலன்கள் அணிந்திருக்கும் பெரும் அழகுடையவன்.
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தில் சொன்னது போல் இங்கும் சிவபெருமானின் மாதொருபாகன் திருவுருவம் போற்றப்படுகின்றது. இரண்டு உருவாகி நுண்ணிய அணிகலன்களை அணிந்து அழகுடன் திகழ்கிறான் சிவபெருமான்.
ஏரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் - எழுகின்ற இளம்பிறை சேர்ந்த நெற்றியை உடையவன்.
சிவபெருமான் பிறைசூடி என்பதை அனைவரும் அறிவோம். அப்போதே எழுந்து வரும் இளம்பிறையை அணிந்த திருமுடியை உடையவன் என்று இங்கே சொல்லப்படுகிறான் மதிவாணன்.

களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன் - களங்கனியின் கருமைக்குப் போட்டியாக அமைந்திருக்கும் மறு கொண்ட தொண்டையை உடையவன்.
சிவபெருமான் நீலகண்டன். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் அவனுடைய மிடறு/தொண்டை மணிமிடறு/மறுமிடறு ஆகியது என்று கூறும் புராணம். அப்படி சிவபெருமானின் தொண்டையில் காணப்படும் மறு களங்கனியைப் போல் விளங்குவதால் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் சிவபெருமான் என்கிறார் புலவர்.
தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட்கு - திரிசூலமென்னும் ஒளிவீசும் படைக்கலத்தை உடைய கால உருவான கடவுள்.
சிவபெருமானே அழித்தல் தொழிலுக்குரிய கடவுள் என்னும் புராணம். அதனால் அவனைக் காலக் கடவுள் என்கிறார் புலவர். அவன் தன் திருக்கையில் திரிசூலம் ஏந்தியிருப்பதையும் பாடுகிறார்.
உயர்க மா வலனே - அவனுடைய புகழும் பெருமையும் வலிமையும் மிகுதியாக உயரட்டும்!
இப்படிப் புராணங்கள் சொல்லும் சிவபெருமானின் உருவத்தையும் பெருமைகளையும் போற்றிப் பாடி இதுவும் ஒரு தியானச் சுலோகம் என்னலாம் படி இருக்கிறது இப்பாடல்.
இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து உண்டா இல்லையா என்று உறுதியாகத் தெரியவில்லை. 'மதுரைத் திட்டம்' கடவுள் வாழ்த்துப் பகுதி இல்லாமலேயே பதிற்றுப்பத்தினைக் காட்டுகிறது. இணையப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலில் ஆசிரியர் பெயர் சொல்லாமல் ஒரு பாடல் கடவுள் வாழ்த்தாக இருக்கிறது. ஆனால் அங்கேயே இருக்கும் உரை நூலில் அந்தப் பாடலைக் காணவில்லை. பாடலைப் படித்துப் பார்த்தால் சங்க காலப் பாடலைப் போன்று தான் இருக்கிறது. உரையின் துணையின்றி எனக்குப் புரிந்த வரையில் இந்தப் பாடலின் பொருளை எழுதுகிறேன். இந்தப் பாடலைப் பற்றிய மேற்தகவல்கள் தெரிந்திருந்தாலோ பாடலின் பொருளைத் தவறாக எழுதியிருந்தாலோ சொல்லுங்கள்.
எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்க்
கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்க மா வலனே

வடமொழியில் இருக்கும் புராணங்கள் எல்லாம் தமிழரிடமிருந்து சென்றவை என்ற கருத்திற்கு அணி செய்யும் இன்னொரு பாடல் இது. சிவபெருமானின் 'உருவ அழகை'யும் (இலிங்கத் திருமேனியை இல்லை) புராணங்கள் கூறும் சிவபெருமானின் பெருமைகளையும் அழகாகக் கூறும் பாடல் இது.
எரி எள்ளு அன்ன நிறத்தன் - எரிகின்ற எள்ளினைப் போன்ற நிறத்தை உடையவன்.
சிவபெருமான் சிவந்தவன் என்பது தமிழர் மரபு. அதனாலேயே சேயோன் (சிவந்தவன்) என்னும் பெயர் தந்தைக்கும் மகனுக்கும் ஆகும் என்று சொல்வதுண்டு. எள்ளு எரியும் போது அது மிக அடர்த்தியான சிவப்பு நிறத்தில் எரியும். அப்படி எரியும் எள்ளினைப் போன்ற அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்டவன் சிவபெருமான்.
விரி இணர்க் கொன்றை அம் பைந்தார் அகலத்தன் - விரிந்த கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலை சூடிய மார்பன்.
நெஞ்சு அகன்று விரிந்து இருப்பது ஆண்மகனுக்கு அழகு. அப்படி அகன்று விரிந்த மார்பை அகலம் என்று சொல்வது மரபு. அப்போதே பறித்த விரிந்த பூங்கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலையை அணிந்தவன் சிவபெருமான்.
பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் - அடங்காத முப்புரத்தை உடையவர்களின் மதில்களை/கோட்டைகளை எரித்த வில்லை உடையவன்.
திரிபுராசுரர்கள் என்று சொல்லப்படும் முப்புரம் உடைய அசுரர்களின் முக்கோட்டைகளையும் சிவபெருமான் தன்னுடைய சினம் மேவிய சிரிப்பாலேயே எரித்து அழித்தார் என்று சொல்லும் புராணம். அப்படி முப்புரம் எரித்த போது மேரு மலையையே தன் கைவில்லாக ஏந்தி இருந்தானாம். அந்த செய்தியைச் சொல்கிறது 'வில்லன்' என்ற பெயர்.
பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் - இருள் நிறைந்த (சுடு)காட்டில் நிலையாக இருந்து ஆடும் ஆடல்வல்லவன்.
சிவபெருமான் சுடலையில் ஆடுபவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சுடலையை இங்கே 'இருள் பயில் காடு' என்ற தொடரால் சொல்லியிருக்கிறார்கள். அங்கேயே நிலையாக இருந்து ஆடுபவன் என்பதால் 'அமர்ந்து ஆடிய' என்றார்கள். அவன் ஆடல் வல்லான் என்பதால் 'ஆடலன்' என்றார்கள்.
நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன் - நீண்டு இரு புறங்களும் மறையும் படி தாழ்ந்து இருக்கும் சடைமுடியை உடையவன்.
சிவபெருமானுக்கு தாழ்சடை உண்டு என்பது தேவார திருவாசகங்களின் கூற்று. அந்த தாழ்சடை நீண்டு இரு புறங்களிலும் மறையும் படி நிற்கின்றதாம். சிவபெருமானின் உருவம் இப்பாடலின் வழி தியானிக்கக் கிடைக்கிறதா?
குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன் - தொடையில் அறைந்து நுண்ணிய ஒலி கொண்ட மணியை ஒலிக்கும் விழாவை உடையவன்.
ஆட்டத்தின் போது தன் திருத்தொடைகளை அறைந்து கொண்டு தன் திருக்கையில் இருக்கும் கண்டா மணியை ஒலிக்கும் செயல்களை சிவபெருமான் செய்வதாக இப்பாடல் வரி சொல்கிறது. நுண்ணிய ஒலியை எழுப்பும் மணி என்பதால் வெண்மணி என்றார் பாடலாசிரியர்.
நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் - நுட்பமான வேலைப்பாடுகள் உடைய உடுக்கையை அடிக்கும் விரலை உடையவன்.
சிவபெருமானின் திருக்கையில் துடி என்ற உடுக்கை இருக்கின்றது. உடுக்கைக்கு இன்னொரு பெயர் சிரந்தை. அது மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பதால் நுண்ணூல் சிரந்தை எனப்பட்டது. இரட்டுதல் என்றால் உடுக்கையின் இடுப்புப்பகுதியில் விரல்களை வைத்து இப்புறமும் அப்புறமும் அசைத்து ஒலி செய்தல். அப்படி உடுக்கையை ஒலிக்கும் விரல்களை உடையவன் சிவபெருமான்.
இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் - ஆணாகிப் பெண்ணாகி இருவுருவமும் ஆகி மாதொரு பாகனாய் நுண்ணிய அணிகலன்கள் அணிந்திருக்கும் பெரும் அழகுடையவன்.
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தில் சொன்னது போல் இங்கும் சிவபெருமானின் மாதொருபாகன் திருவுருவம் போற்றப்படுகின்றது. இரண்டு உருவாகி நுண்ணிய அணிகலன்களை அணிந்து அழகுடன் திகழ்கிறான் சிவபெருமான்.
ஏரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் - எழுகின்ற இளம்பிறை சேர்ந்த நெற்றியை உடையவன்.
சிவபெருமான் பிறைசூடி என்பதை அனைவரும் அறிவோம். அப்போதே எழுந்து வரும் இளம்பிறையை அணிந்த திருமுடியை உடையவன் என்று இங்கே சொல்லப்படுகிறான் மதிவாணன்.

களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன் - களங்கனியின் கருமைக்குப் போட்டியாக அமைந்திருக்கும் மறு கொண்ட தொண்டையை உடையவன்.
சிவபெருமான் நீலகண்டன். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் அவனுடைய மிடறு/தொண்டை மணிமிடறு/மறுமிடறு ஆகியது என்று கூறும் புராணம். அப்படி சிவபெருமானின் தொண்டையில் காணப்படும் மறு களங்கனியைப் போல் விளங்குவதால் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் சிவபெருமான் என்கிறார் புலவர்.
தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட்கு - திரிசூலமென்னும் ஒளிவீசும் படைக்கலத்தை உடைய கால உருவான கடவுள்.
சிவபெருமானே அழித்தல் தொழிலுக்குரிய கடவுள் என்னும் புராணம். அதனால் அவனைக் காலக் கடவுள் என்கிறார் புலவர். அவன் தன் திருக்கையில் திரிசூலம் ஏந்தியிருப்பதையும் பாடுகிறார்.
உயர்க மா வலனே - அவனுடைய புகழும் பெருமையும் வலிமையும் மிகுதியாக உயரட்டும்!
இப்படிப் புராணங்கள் சொல்லும் சிவபெருமானின் உருவத்தையும் பெருமைகளையும் போற்றிப் பாடி இதுவும் ஒரு தியானச் சுலோகம் என்னலாம் படி இருக்கிறது இப்பாடல்.
Wednesday, January 07, 2009
ஐங்குறுநூறு காட்டும் மாதொருபாகன்
மூவகை உலகங்கள் இருக்கின்றனவாம். மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நடு உலகங்கள். மக்களும் மாக்களும் மரம் செடி கொடிகளும் வாழும் உலகங்கள் நடு உலகங்கள். மக்களில் சிறந்தோர் முனிவரும் தேவரும் எனப்பட்டோர் வாழும் உலகங்கள் மேல் உலகங்கள். மக்களில் கீழானோர் கீழ்மதி படைத்தோர் வாழும் உலகங்கள் கீழ் உலகங்கள். இவை யாவுமே மனத்தளவிலான ஆன்மிக உலகங்கள். இம்மூவகை உலகங்களும் இந்த பூமி என்ற ஒற்றைத் தளத்திலேயே இருக்கின்றன - இவை யாவும் ஆன்றோர் வாக்கு. இம்மூவகை உலகங்களைப் பற்றி வடமொழிப் பனுவல்களும் பழந்தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. அவ்வாறு கூறும் ஒரு பழந்தமிழ்ப் பாடலைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.
இம்மூவகை உலகங்களும் யாருடைய திருவடியின் கீழ் தோன்றின என்றும் இப்பாடல் சொல்கிறது. அவன் 'ஒருவன்' என்று நின்றவன். இதனையே வேதமும் 'ஏகம் அத்விதீயம்' என்று சொல்கிறது. இந்தப் பாடல் இப்படி 'ஒருவன்' என்று சொன்னதையே பிற்காலப் பாடல் ஒன்று 'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்' என்கிறது.

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே
நீல மேனி கொண்டவன் ஒருவன் - அவன் மாயோன். நீல மேனி கொண்டவள்? அவள் மாயோள். அவளை தன் மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் 'ஒருவன்'. அவன் யார்? அவன் தான் சேயோனின் தந்தையான சிவபெருமான். அவனுடைய திருவடி நிழலில் தான் மூவகை உலகங்களும் ஒவ்வொன்றாக முகிழ்த்தனவாம்.
நீல மேனியும் தூய்மையான ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த உமாதேவியை தன் மேனியின் ஒரு பாகத்துக் கொண்ட ஒருவன் சிவபெருமான். அவனது திருவடிகளின் நிழலின் கீழ் மூவகை உலகங்களும் முறையே முகிழ்த்தன என்கிறார் இந்தப் பாடலைக் கடவுள் வாழ்த்தாக 'ஐங்குறுநூறு' என்ற சங்க கால தொகை நூலில் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்'. ஆமாம் இவர் தான் திருமுருகனை 'சேவலங்கொடியோன்' என்று குறுந்தொகையில் பாடியவர். இங்கே அவனது தாய் தந்தையைப் பாடுகிறார்.

பழந்தமிழ் இலக்கியங்களில் எங்குமே இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்புகளை இது வரை நான் காணவில்லை. வடமொழி வேதத்தில் இலிங்க வழிபாடு இகழப்படுவதாகவும் அப்படி இகழப்படுவது திராவிடர் வழிபாடே என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் கருத்தை நிலை நாட்ட அவர்கள் காட்டும் ஒரே தரவு 'சிசுன தேவர்கள்' என்று யாரையோ இகழ்ந்து பேசும் வேத வரியை. இலிங்க வழிபாடு திராவிடர்/தமிழர் வழிபாடு என்றால் அந்த வழிபாட்டைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்பு இருக்குமே என்று தேடி வருகிறேன். இது வரை பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் காணவில்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட குறிப்புகள் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.
அருவுருவான இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்பைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும் போது சிவபெருமானின் உருவ உருவை மிகவும் வருணித்து வரும் பாடல் குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது பழந்தமிழர்கள் அருவுருவத் திருமேனியான இலிங்கத்தை விட உருவத்துடன் கூடிய சிவபெருமானையே பெரிதும் போற்றியிருப்பார்களோ என்று தோன்றுகிறது.
இப்பாடலில் மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டதாக சிலர் எண்ணிக் கொள்ளும் அருத்தநாரி/மாதொருபாகன் உருவத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. சைவ சமயம் ஆணாதிக்கம் கொண்ட சமயமாகத் தொடக்கத்தில் இருந்ததாகவும் கால மாற்றத்தில் வேண்டா வெறுப்பாக பெண்ணுக்கு சம உரிமை தருவதைப் போல் மாதொருபாகன் என்ற உருவத்தை ஆக்கி வழிபட்டதாகவும் சில மூடர்கள் சொல்லித் திரிகின்றனர். அப்படி சொல்வதெல்லாம் அவர்களின் தடம் புரண்ட கற்பனையே என்பதை இந்தப் பாடல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. பழந்தமிழ் இலக்கிய காலத்திலேயே மாதொருபாகன் என்ற திருவுருவம் தமிழர் நடுவே மிகவும் பெரிதாக வழிபடப்பட்டிருக்கிறது என்பது இப்பாடலில் சிவபெருமானின் திருப்பெயரைக் கூட குறிப்பிடாமல் 'வாலிழை பாகத்து ஒருவன்' என்று குறிப்பதிலேயே தெரிகிறது.
சிவபெருமானின் திருவடி நிழலைப் பற்றி இந்தப் பாடல் பாடுவதைப் படிக்கும் போது 'மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இள வேனிலும் மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே' என்று பக்தி இலக்கியக் காலத் திருமுறைப் பாடல் நினைவிற்கு வருகிறது.
இம்மூவகை உலகங்களும் யாருடைய திருவடியின் கீழ் தோன்றின என்றும் இப்பாடல் சொல்கிறது. அவன் 'ஒருவன்' என்று நின்றவன். இதனையே வேதமும் 'ஏகம் அத்விதீயம்' என்று சொல்கிறது. இந்தப் பாடல் இப்படி 'ஒருவன்' என்று சொன்னதையே பிற்காலப் பாடல் ஒன்று 'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்' என்கிறது.
நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே
நீல மேனி கொண்டவன் ஒருவன் - அவன் மாயோன். நீல மேனி கொண்டவள்? அவள் மாயோள். அவளை தன் மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் 'ஒருவன்'. அவன் யார்? அவன் தான் சேயோனின் தந்தையான சிவபெருமான். அவனுடைய திருவடி நிழலில் தான் மூவகை உலகங்களும் ஒவ்வொன்றாக முகிழ்த்தனவாம்.
நீல மேனியும் தூய்மையான ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த உமாதேவியை தன் மேனியின் ஒரு பாகத்துக் கொண்ட ஒருவன் சிவபெருமான். அவனது திருவடிகளின் நிழலின் கீழ் மூவகை உலகங்களும் முறையே முகிழ்த்தன என்கிறார் இந்தப் பாடலைக் கடவுள் வாழ்த்தாக 'ஐங்குறுநூறு' என்ற சங்க கால தொகை நூலில் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்'. ஆமாம் இவர் தான் திருமுருகனை 'சேவலங்கொடியோன்' என்று குறுந்தொகையில் பாடியவர். இங்கே அவனது தாய் தந்தையைப் பாடுகிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களில் எங்குமே இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்புகளை இது வரை நான் காணவில்லை. வடமொழி வேதத்தில் இலிங்க வழிபாடு இகழப்படுவதாகவும் அப்படி இகழப்படுவது திராவிடர் வழிபாடே என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் கருத்தை நிலை நாட்ட அவர்கள் காட்டும் ஒரே தரவு 'சிசுன தேவர்கள்' என்று யாரையோ இகழ்ந்து பேசும் வேத வரியை. இலிங்க வழிபாடு திராவிடர்/தமிழர் வழிபாடு என்றால் அந்த வழிபாட்டைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்பு இருக்குமே என்று தேடி வருகிறேன். இது வரை பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் காணவில்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட குறிப்புகள் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.
அருவுருவான இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்பைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும் போது சிவபெருமானின் உருவ உருவை மிகவும் வருணித்து வரும் பாடல் குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது பழந்தமிழர்கள் அருவுருவத் திருமேனியான இலிங்கத்தை விட உருவத்துடன் கூடிய சிவபெருமானையே பெரிதும் போற்றியிருப்பார்களோ என்று தோன்றுகிறது.
இப்பாடலில் மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டதாக சிலர் எண்ணிக் கொள்ளும் அருத்தநாரி/மாதொருபாகன் உருவத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. சைவ சமயம் ஆணாதிக்கம் கொண்ட சமயமாகத் தொடக்கத்தில் இருந்ததாகவும் கால மாற்றத்தில் வேண்டா வெறுப்பாக பெண்ணுக்கு சம உரிமை தருவதைப் போல் மாதொருபாகன் என்ற உருவத்தை ஆக்கி வழிபட்டதாகவும் சில மூடர்கள் சொல்லித் திரிகின்றனர். அப்படி சொல்வதெல்லாம் அவர்களின் தடம் புரண்ட கற்பனையே என்பதை இந்தப் பாடல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. பழந்தமிழ் இலக்கிய காலத்திலேயே மாதொருபாகன் என்ற திருவுருவம் தமிழர் நடுவே மிகவும் பெரிதாக வழிபடப்பட்டிருக்கிறது என்பது இப்பாடலில் சிவபெருமானின் திருப்பெயரைக் கூட குறிப்பிடாமல் 'வாலிழை பாகத்து ஒருவன்' என்று குறிப்பதிலேயே தெரிகிறது.
சிவபெருமானின் திருவடி நிழலைப் பற்றி இந்தப் பாடல் பாடுவதைப் படிக்கும் போது 'மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இள வேனிலும் மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே' என்று பக்தி இலக்கியக் காலத் திருமுறைப் பாடல் நினைவிற்கு வருகிறது.
Wednesday, December 17, 2008
சிவன் கோவில் தீர்த்த சடாரியும் பெருமாள் கோவில் திருநீறும்....
பெருமாள் கோவிலில் தீர்த்தம் தருவார்கள். சிவன் கோவிலில் திருநீறு தானே தருவார்கள்? தீர்த்தப் பிரசாதம் தருவதும் உண்டா? உண்டு என்று தான் கூகிளார் சொல்கிறார். இராமேஸ்வரம் இராமநாதப் பெருமான் சன்னிதியில் தீர்த்தப் பிரசாதம் தருவார்கள் என்ற குறிப்பைப் படித்தேன். சரி தானா என்று தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.
***
கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒரு சிவத்தலம் திருநல்லூர். அப்பர், சம்பந்தர் இருவருடைய பதிகங்களையும் பெற்ற திருத்தலம். அப்பர் பெருமான் இறைவனுடைய திருவடிகளில் சரணடைந்தது இந்தத் திருத்தலத்தில் என்பதால் இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடிநிலைகளை இங்கு வணங்க வரும் பக்தர்களின் தலைகளில் வைத்து ஆசி வழங்கும் வழக்கம் இருக்கிறது.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினதிருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனதுருவி மணிமகுடத் தேறத்துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே.
நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர் களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி, அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார். இஃது அவர் பேரருளின் தன்மையாம்.
பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை, கங்கை, பிறை என்பன சூடி, காதில் குழை அணிந்து, மார்பில் பூணூல் தரித்து, இடையில் புலித்தோலை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு, அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத் தாங்கி, மேம்பட்ட சிறப்புடைய திரு வடிகளை, என் தலைமேல் வைத்த, பேரருளின் தன்மை உடையவர்.
தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
இதழ்கள் மிக்க கொன்றை மலரைத் தலையில் சூடி, எருக்கம் பூ மாலை பூண்டு, தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து, மலைமகளைப் பாகமாகக் கொண்டு, அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக்கொண்டு, கையில் வில் ஏந்தி, யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார், வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, விரிந்த சடையில் கங்கையைச் சூடி, மலையை வில்லாகக்கொண்டு, கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு, கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு, வேதங்களை அருளி, முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து, தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி, தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து, மிக்க அருளினாலே, தம் திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி, அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி, நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து, தீயினை யும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு, அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து, மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர். குறைந்த சந்திரனை வளரவைத்தவர். பகை, ஆர்வம், காமம், உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்த பாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்ல தவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர். அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர். அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர். நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர். தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர். மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர். இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர். திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்த விடத்தை உண்டு, அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர். எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர். நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர். அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர். இவ்வுலகில் எண்திசைகள், கீழ்ப்புறம், மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர். தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர். நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர். கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன் புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர். காளையை வாகனமாகக் கொண்டவர். வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார், பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க, கங்கை அலை வீச, அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர். தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர். சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்ட வர். நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர். உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்ட வர். விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர்.
குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார், கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளை யும் அமைத்தவர். கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர். இராவணன் ` தலைவனே ` என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர். தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து, நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர்.
பதிகத்தின் பொழிப்புரைக்கு நன்றி: http://www.thevaaram.org/
பெருமாள் கோவில்களில் பெருமாள் திருவடிநிலைகளை சடகோபன் நம்மாழ்வாரின் திருவுருவமாகக் கருதுவதால் சடாரி என்று அழைப்பார்கள். இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடி நிலைகளை எந்தப் பெயருடன் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை - அப்பர் என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.
***
பெருமாள் விபூதி அணிந்து கொள்வதும் விபூதி பிரசாதம் அந்த நேரத்தில் எல்லோருக்கும் தரப்படுவதும் பற்றி மிக அருமையாக மிகத் தெளிவாக கதை வசனத்துடன் அந்த நிகழ்வை இரவிசங்கர் எழுதியிருந்தார். அதனைப் படித்த பின்னர் தான் திருக்கண்ணங்குடி என்று கூகிளில் தேடினேன். இரவிசங்கர் சொன்ன நிகழ்வைப் பற்றி சொல்லும் குறிப்புகளையும் படித்தேன். பெருமாள் திருநீறு அணிவதற்கு இன்னொரு நிகழ்வையும் காட்டும் குறிப்பு ஒன்றைப் படித்தேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
உபரிசிரவஸு என்னும் மன்னன் சிவபக்தன். (இந்த உபரிசிரவஸு என்ற பெயர் ஏதோ ஒரு சோழ மன்னனின் தமிழ்ப்பெயரின் வடமொழி வடிவம் என்று நினைக்கிறேன்). தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது அவன் வழக்கம். ஒரு முறை திருக்கண்ணங்குடி வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது இந்தக் கோவில் சிவன் கோவில் என்று எண்ணி தரிசிக்க உள்ளே சென்றான். அவன் ஏமாறாமல் இருக்க மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) பெருமாள் திருநீறு அணிந்து சிவனாகக் காட்சியளித்தார்.
***
கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் ஒரு சிவத்தலம் திருநல்லூர். அப்பர், சம்பந்தர் இருவருடைய பதிகங்களையும் பெற்ற திருத்தலம். அப்பர் பெருமான் இறைவனுடைய திருவடிகளில் சரணடைந்தது இந்தத் திருத்தலத்தில் என்பதால் இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடிநிலைகளை இங்கு வணங்க வரும் பக்தர்களின் தலைகளில் வைத்து ஆசி வழங்கும் வழக்கம் இருக்கிறது.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினதிருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனதுருவி மணிமகுடத் தேறத்துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே.
நல்லூரிலுள்ள எம் பெருமானார் நினைந்து உள்ளம் உருகும் அடியவர்களை மேலும் மனம் உருகுமாறு அவர் களுடைய தீவினைகளை எல்லாம் போக்கியவர். சினந்து எதிர்த்த யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவர். பிறை சூடியவர். தேவர் கூட்டத்தினர் சிறப்பாகத்தேடி, அரிதின் கிட்டி, அவர்கள், தம்மை மணி மகுடத்தோடு வணங்குதலால் அம்முடிகளில் செறிந்த மலர்களிலிருந்து பாயும் தேனினால் நனைந்தன போலக் காணப்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்தார். இஃது அவர் பேரருளின் தன்மையாம்.
பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் சடையின் மீது பொன்னிற நறுங்கொன்றை, கங்கை, பிறை என்பன சூடி, காதில் குழை அணிந்து, மார்பில் பூணூல் தரித்து, இடையில் புலித்தோலை உடுத்து, யானைத் தோலைப் போர்த்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டு, அழகிய திரண்ட தோள்மேல் மழுப்படையைத் தாங்கி, மேம்பட்ட சிறப்புடைய திரு வடிகளை, என் தலைமேல் வைத்த, பேரருளின் தன்மை உடையவர்.
தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
இதழ்கள் மிக்க கொன்றை மலரைத் தலையில் சூடி, எருக்கம் பூ மாலை பூண்டு, தலையில் கங்கை அலைகள் மோதுமாறு ஊமத்தம்பூவையும் பாம்பையும் அணிந்து, மலைமகளைப் பாகமாகக் கொண்டு, அழகு மிகுந்த நெற்றியில் கண் ஒன்று படைத்துக்கொண்டு, கையில் வில் ஏந்தி, யாவரும் விரும்பும் திருவடிகளை என் தலைமேல் வைத்த நல்லூர் எம்பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார், வில்போன்ற புருவத்தை உடைய பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, விரிந்த சடையில் கங்கையைச் சூடி, மலையை வில்லாகக்கொண்டு, கயிலாயத்தைத் தமக்குரிய சிறப்பான மலையாகக் கொண்டு, கடவூரைத்தாம் உகந்தருளும் திருத்தலமாகக் கொண்டு, வேதங்களை அருளி, முனிவர் நால்வருக்கு அறப்பொருளை அறியவைத்து, தாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி, தகுதி எய்திய உயிர்களுக்குத் துறவற நெறியை அறிவித்து, மிக்க அருளினாலே, தம் திருவடிகளை எம் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உலவிய முப்புரங்களையும் எரித்துத் தம்மை வழிபட்டவர் வினைகளைப் போக்கி, அவர்களுக்குப் பற்றற்ற உள்ளத்தை வழங்கி, நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனைப் பொடிப்படுத்து, தீயினை யும் நீரினையும் தம்முடல் ஒன்றிலேயே கொண்டு, அடியவர் உள்ளத் தாமரையையும் கயிலை மலையையும் தம் இருப்பிடமாக அமைத்து, மேலுலகில் உள்ள தேவர்கள் எண் திசைகளிலிருந்தும் தொழுது வணங்கி வாழ்த்தியும் கூடக் கிட்ட இயலாத தம் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் பிணிகள் உலவும் இவ்வுலகிலே எழுவகைப்பட்ட பிறவிகளையும் அவற்றை ஏற்கும் உயிர்களையும் அவ்வுயிர்கள் செல்லும் சுவர்க்கம் நரகம் ஆகிய கதிகளையும் வைத்தவர். குறைந்த சந்திரனை வளரவைத்தவர். பகை, ஆர்வம், காமம், உலோபம் முதலியவை தலை தூக்காத சிறந்த வழியையும் காமம் நீத்த பாலாகிய துறவு வழியையும் அமைத்த அப்பெருமான் நல்ல தவத்தை உடைய அடியவர்கள் சரண்புகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
பகைவராகப் போரிட்ட அசுரர்களின் அரிய மதில்களை எரியச் செய்தவர். அழகிய சடைமுடி மீது பாம்பினையும் அலைகள் மோதும் கங்கையையும் சூடியவர். அழகிய திருமேனியில் திருநீறு பூசித் தீயினில் தம் கூத்து நிகழவைத்தவர். நெற்றிக்கண்ணர் பல திருக்கோயில்களை உடையவர். தேவர்கள் விருப்போடு தம் திருவடிகளை முன் நின்று துதிக்கச் செய்தவர். மலர்களைச் சூடிய திருவடிகளை என் தலைமேல் வைத்த அந்த நல்லூர்ப் பெருமானார் பேரருளின் தன்மை உடையவர்.
குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
இவ்வுலகில் நல்லூர் எம்பெருமானார் பல மலைகளையும் கடல்களையும் அமைத்தவர். இரத்தினங்கள் பொருந்திய பாம்பை அணிந்து பலபலவேடம் பூண்டவர். திரண்ட கல்போல் உயர்கின்ற பாம்பின் படத்திலிருந்து வெளிப்பட்டுப் பரந்த விடத்தை உண்டு, அதனைக் கண்டத்துத் தங்கவைத்தவர். எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவர். நிலம் முதலிய ஐம்பூதங்களையும் அமைத்தவர். அவர் அடியேனை விருப்புற்று நினைத்து இப்பொழுது யான் விரும்பியவாறு நன்மைபெருகும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார் வானத்தில் உருண்டு உலவும் சூரிய சந்திரர்களை அமைத்தவர். இவ்வுலகில் எண்திசைகள், கீழ்ப்புறம், மேற்புறம் என்ற பத்துப்பாகுபாட்டையும் வகுத்தவர். தேவர்கள் தம் திருவடிகளை வணங்குமாறு அவர்கள் உள்ளத்தில் நிலைபெற்று அருள் செய்தவர். நிறைந்த தவமும் ஆசிரியர்பால் கேட்டறிய வேண்டிய இரகசிய உபதேசங்களும் நிகழுமாறு செய்தவர். கொடிய கூற்றுவன் நடுங்கி ஓடுமாறு அவன் புகழைக் கெடுத்து அவனைக் கழலணிந்த தம் திருவடியால் உதைத்தவர். காளையை வாகனமாகக் கொண்டவர். வீடுபேற்றை நல்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் தன்மை உடையவர்.
பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார், பகைமை நீங்கிப் பாம்பு பிறையை உராய்ந்து கிடக்க, கங்கை அலை வீச, அமைந்த சடையில் கொன்றைப்பூச் சூடியவர். தமக்குத் தொண்டு செய்யும் தேவர்கள் சிறக்குமாறு அவர்களுக்கு ஏற்றவகையில் அருள்கள் செய்தவர். சுடுகாட்டுச் சாம்பலைப் பூசி ஒப்பனை செய்து கொண்ட வர். நீக்குதற்கு அரிய வலிய முன் வினையினால் ஏற்படும் நலிவுகளை நீங்கச் செய்பவர். உமாதேவியைத் தம் உடம்பின் ஒருபாகமாகக் கொண்ட வர். விரும்பி வானோர்களும் நில உலகத்தவரும் முன்நின்று துதிக்கும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவராவர்.
குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
நல்லூர் எம்பெருமானார், கூட்டமாக அலைகள் மோதும் ஏழு கடல்களையும் சிறந்த மணிகளை உடைய மலைகளை யும் அமைத்தவர். கயிலை மலையைக் கைகளால் பெயர்த்த இராவணனுடைய கல்போன்ற தோள்களும் முடிகளும் வருந்துமாறு ஒற்றை விரலால் அழுத்தியவர். இராவணன் ` தலைவனே ` என்று புலம்பிய அளவில் அவன்பால் அருள்செய்து வாளும் ஈந்தவர். தம் புகழ்ச் செயல்களை விரும்பி மக்கள் தமக்கு ஆளாகுமாறு செய்து, நன்மைகள் மேம்படும் திருவடிகளை என் தலைமேல் வைத்த பேரருளின் திறமுடையவர்.
பதிகத்தின் பொழிப்புரைக்கு நன்றி: http://www.thevaaram.org/
பெருமாள் கோவில்களில் பெருமாள் திருவடிநிலைகளை சடகோபன் நம்மாழ்வாரின் திருவுருவமாகக் கருதுவதால் சடாரி என்று அழைப்பார்கள். இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானின் திருவடி நிலைகளை எந்தப் பெயருடன் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை - அப்பர் என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.
***
பெருமாள் விபூதி அணிந்து கொள்வதும் விபூதி பிரசாதம் அந்த நேரத்தில் எல்லோருக்கும் தரப்படுவதும் பற்றி மிக அருமையாக மிகத் தெளிவாக கதை வசனத்துடன் அந்த நிகழ்வை இரவிசங்கர் எழுதியிருந்தார். அதனைப் படித்த பின்னர் தான் திருக்கண்ணங்குடி என்று கூகிளில் தேடினேன். இரவிசங்கர் சொன்ன நிகழ்வைப் பற்றி சொல்லும் குறிப்புகளையும் படித்தேன். பெருமாள் திருநீறு அணிவதற்கு இன்னொரு நிகழ்வையும் காட்டும் குறிப்பு ஒன்றைப் படித்தேன். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
உபரிசிரவஸு என்னும் மன்னன் சிவபக்தன். (இந்த உபரிசிரவஸு என்ற பெயர் ஏதோ ஒரு சோழ மன்னனின் தமிழ்ப்பெயரின் வடமொழி வடிவம் என்று நினைக்கிறேன்). தினமும் சிவன் கோவிலுக்குச் சென்று சிவதரிசனம் செய்வது அவன் வழக்கம். ஒரு முறை திருக்கண்ணங்குடி வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது இந்தக் கோவில் சிவன் கோவில் என்று எண்ணி தரிசிக்க உள்ளே சென்றான். அவன் ஏமாறாமல் இருக்க மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) பெருமாள் திருநீறு அணிந்து சிவனாகக் காட்சியளித்தார்.
Monday, December 01, 2008
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி!
எத்தனை எத்தனை நாடகங்கள்! இறைவனிடமே! அத்தனை நாடகங்களையும் தொடர்ந்து நாம் நடத்த அவனும் நடித்துக் கொண்டிருக்கிறான். அருளாளர்கள் இருவர் சொல்வதைப் பாருங்கள்.

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே
- திருநாவுக்கரசர்.
நான் ஒரு பொய்யன். பொய்த் தொண்டு செய்வதாய் காலத்தைக் வீணே கழித்தேன். அது தீர்ந்து தெளிவுற்றவனாகி ஒரு நிலையுடன் தேடினேன்; நாடினேன்; கண்டேன். நினைப்பவர்களின் உள்ளிருந்து / உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன்

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே
- தொண்டரடிப்பொடியாழ்வார்.
உள்ளத்தே உறையும் திருமாலை நினைக்கும் நினைப்பு சிறிதும் இல்லாத பொய்யனான நான் தொண்டு செய்கிறேன் என்று பொய்க்கோலம் பூண்டேன். நினைப்பவர் நினைப்பவை எல்லாம் உடன் இருந்து நீ அறிவாய் என்று வெட்கட்ப்பட்டு என்னுள்ளே நான் விலா அறும் படி சிரித்திட்டேனே.
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே
- திருநாவுக்கரசர்.
நான் ஒரு பொய்யன். பொய்த் தொண்டு செய்வதாய் காலத்தைக் வீணே கழித்தேன். அது தீர்ந்து தெளிவுற்றவனாகி ஒரு நிலையுடன் தேடினேன்; நாடினேன்; கண்டேன். நினைப்பவர்களின் உள்ளிருந்து / உடன் இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் நீ அறிவாய் என்று வெட்கம் கொண்டேன்; வெட்கத்தோடு என் பொய் நடிப்புகளை எண்ணி விலா புடைக்கச் சிரித்தேன்

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்றில்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே
- தொண்டரடிப்பொடியாழ்வார்.
உள்ளத்தே உறையும் திருமாலை நினைக்கும் நினைப்பு சிறிதும் இல்லாத பொய்யனான நான் தொண்டு செய்கிறேன் என்று பொய்க்கோலம் பூண்டேன். நினைப்பவர் நினைப்பவை எல்லாம் உடன் இருந்து நீ அறிவாய் என்று வெட்கட்ப்பட்டு என்னுள்ளே நான் விலா அறும் படி சிரித்திட்டேனே.
Wednesday, August 06, 2008
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி! செல்வமே! சிவபெருமானே!

பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமாறு அடியனேற்கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி!
செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!
இந்தப்பாடல் விளக்கத்தின் முதற்பகுதியை அக்டோபரில் பார்த்தோம். அடுத்தப் பகுதியை எழுத இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. மன்னிக்கவும்.
பந்த பாசங்கள் இல்லாதவர் யாருமே இல்லை. வேண்டுதல் வேண்டாமை இலாதான் என்றாலும் அவனும் அடியார்களிடம் அன்பு கொண்டவன் தான்; சரியாகப் புரிந்து கொள்ளாவிடில் அந்த அன்பும் பாசம் போல் தோன்றும். அன்பிற்கும் பாசத்திற்கும் வேறுபாடு என்ன? அன்பு நல்லதையே நாடும். நமக்குக் கேடென்றாலும் ஒருவர் மேல் வைத்த அன்பு அவருக்கு நல்லதையே நாடும்; சொல்லும்; செய்யும். அவருக்கு விருப்பமில்லாதது என்றாலும் அவர் மேல் வைத்த அன்பு அவருக்கு நல்லதையே நாடும் - தாய் கொடுக்கும் கசப்பு மருந்தினைப் போல். பாசம் நல்லதோ கெட்டதோ பார்க்காது; கண்ணை மறைக்கும்; மருத்துவர் மருந்தூசியை போடும் போது குழந்தை அழுவதைப் பார்க்க முடியாமல் தலை திருப்பும் அன்னை தந்தையரைப் போல். மற்றவர் மேல் வைத்த அந்தப் பாசம் நம்மையும் பல நேரங்களில் தவறான பாதையில் திருப்பிவிட்டுவிடும் - திருதராஷ்ட்ரனைப் போல்.
அன்பை எல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டும் என்பார்கள் சான்றோர். ஆனால் அவர்களே பாசம் அறுக்க வேண்டும் என்பார்கள். பாசம் என்ற இதே சொல் மற்ற பொருள்களிலும் வழங்கப்படுகிறது - பாசியையும் பாசம் என்பார்கள் - இரண்டுமே வழுக்கிவிடும்; கயிற்றையும் பாசம் என்பார்கள் - இரண்டுமே ஒருவரைக் கட்டும். அப்படிப்பட்ட பாசத்தை வேருடன் அறுக்க வேண்டும். அது நம் சுய முயற்சியால் முடியுமா என்றால் அறிந்தவர் தெரிந்தவர் எல்லோரும் சொல்லும் விடை இல்லை என்பதே. அவன் அருளாலே தான் அது முடியும் என்கிறார்கள் அவர்கள். அதனைத் தான் அடிகளும் இங்கே பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னை என்கிறார். அறுக்கும் என்று நிகழ்காலத்தில் கூறியது அவர் அதனை மூன்று காலங்களிலும் செய்பவர் என்ற பொருளில்.
முக்காலங்களிலும் எக்காலங்களிலும் செய்பவர் பழம்பொருளாகத் தானே இருக்க வேண்டும். பழமைக்கும் பழமையானவன்; புதுமைக்கும் புதுமையானவர். அந்தப் பழம்பொருளைப் பற்றினால் பாச வேர் அறுபடும். அந்தப் பழம்பொருளைப் பற்றுவதும் எளிதோ? அது நம் முயற்சியால் மட்டுமே கூடுமோ? இல்லை. அதற்கும் அவன் அருள் வேண்டும். அடிமையான எனக்கு அருள் செய்து என்கிறார் இங்கே. அடியவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் ஆயிரம் பொருள்.
நாம் எத்தனையோ விதமாகப் பூசிக்கலாம் அவனை. அவன் அருளும் நம் அடக்கமும் இன்றி என்ன தான் பூசித்தாலும் அவன் அதனை ஏற்றுக் கொள்ளவேண்டுமே? நாம் அவனுடைய அடியவர்கள் என்று ஆயிரம் முறை கூறினாலும் என்ன அவன் நம்மை தன் அடியவர் என்று ஏற்றுக்கொள்ளாதவரை? அவன் ஏற்றுக் கொண்டால் அல்லவோ அதில் பொருள் உண்டு?
பழம்பொருளான தன்னைப் பற்றுமாறு அடியவனான எனக்கு அருளி நான் செய்த சிறு பூசைகளையும் பெருமையாக எண்ணி உவப்புடன், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான் என்கிறார். நிர்ஹேதுக கிருபை என்பார்கள் வடமொழியில் - காரணமற்ற அன்பு. அப்படிப்பட்ட அன்பு நாம் செய்யும் சிறு பூசையையும் அன்புடன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளச் செய்கிறது.
செய்த சிறு பூசையையும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் என் சிந்தையுள் புகுந்து நின்றான். ஒளி புகுந்தவுடன் இருள் அகன்று காணாமல் போவது போல் சிந்தையுள் அவன் புகுந்தவுடன் மற்ற எண்ணங்கள் எல்லாம் காணாமல் போனது. ஒளி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைவது போல் அவன் சிந்தை புகுந்து சிந்தை முழுவதும் நீக்கமற நிறைந்தான்.
கருணையுடன் இவ்வளவும் செய்தவன் அந்தக் கருணைக்கு அடையாளமாக தன் திருவடித் தாமரைகளையும் நான் பற்றுமாறு அருளினான். திருவடிகளின் பெருமை சொல்லி முடியாது. அதனால் அதனை இன்னொரு நாள் பார்ப்போம். கட்டாயம் அதற்கு வாய்ப்பு கிட்டும்.
ஒளியுடைய விளக்கே என்கிறார். வேறு பொருள்கள் எல்லாம் இருப்பதைக் காட்ட ஒரு விளக்கு வேண்டும். ஆனால் விளக்கு இருப்பதைக்காட்ட அந்த விளக்கே போதுமன்றோ? அப்படிப்பட்டவன் இறைவன்.
செழுஞ்சுடர் மூர்த்தி - சரி. அவன் இருப்பைக் காட்ட அவனே போதும்; அவன் திருவுருவம் எப்படிப்பட்டது என்றால் விளக்கின் திருவுருவம் எப்படி இருக்கும்? சுடர் வடிவாக இருக்கும் தானே?! இறைவன் திருவுருவும் அப்படியே செழுமையான் சுடர் வடிவாக இருக்கிறது.
அடியார்க்கு நிலைத்த செல்வம் தெய்வம் தானே? அதனால் செல்வமே என்கிறார். சிவபெருமானே. தலைவனே. ஈசனே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். இவ்வளவு தூரம் அருள் செய்த பின் என்னை விட்டு எங்கே எழுந்தருளுகிறீர்கள்? உம்மை விடமாட்டேன் என்கிறார்.
பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து பூங்கழல் காட்டியப் பொருளே!

பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமாறு அடியனேற்கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி!
செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!
பாச வேர் அறுக்கும் - பந்த பாசங்கள் எனும் பற்றுதல்களின் வேரினை அறுக்கும்
பழம்பொருள் தன்னைப் - எல்லாவற்றிற்கும் மூத்ததான பழம்பொருளாகிய இறைவனைப்
பற்றுமாறு அடியனேற்கருளிப் - பற்றுமாறு அடியவனுக்கு அருளி
பூசனை உகந்து - என் சிறிய வழிபாட்டினை மகிழ்ந்து விரும்பி ஏற்றுக் கொண்டு
என் சிந்தையுள் புகுந்து - என் உள்ளத்துள் புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே! - தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய நிலையான பொருளே!
தேசுடை விளக்கே! - ஒளியுடன் கூடிய விளக்கே
செழுஞ்சுடர் மூர்த்தி! - விளக்கினில் தோன்றும் சுடர் வடிவானவனே!
செல்வமே! - என் ஒரே செல்வமே!
சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே! - என் தலைவனான சிவபெருமானே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். என்னை விட்டு நீ எங்கும் செல்ல முடியாது.
பந்த பாசங்கள் எனும் பற்றுதல்களின் வேரினை அறுக்கும் எல்லாவற்றிற்கும் மூத்ததான பழம்பொருளாகிய இறைவனைப் பற்றுமாறு அடியவனுக்கு அருளி என் சிறிய வழிபாட்டினை மகிழ்ந்து விரும்பி ஏற்றுக் கொண்டு என் உள்ளத்துள் புகுந்து தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய நிலையான பொருளே! ஒளியுடன் கூடிய விளக்கே! விளக்கினில் தோன்றும் சுடர் வடிவானவனே! என் ஒரே செல்வமே! என் தலைவனான சிவபெருமானே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். என்னை விட்டு நீ எங்கும் செல்ல முடியாது.
Tuesday, August 05, 2008
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!

அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே!
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இந்தப் பாடலின் முதல் பகுதியை ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னால் பார்த்தோம். அடுத்தப் பகுதியை எழுதுவதற்கு இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
போன பதிவின் பின்னூட்டங்களிலேயே அன்பர்கள் பலர் 'புகழ்ச்சியைக் கடந்த போகமே' என்பதற்கு நல்ல விளக்கங்கள் கொடுத்திருக்கின்றனர். அவற்றை இங்கே சுருக்கமாகக் கொடுத்துவிட்டு மற்ற வரிகளையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.
இந்தப் பிரபஞ்சத்தின் அளவு நம் கற்பனைக்கு எல்லாம் தாண்டிய அளவில் இருப்பதாக வானவியலார் கூறுகின்றனர். இந்த உலகத்திலேயே நம் கற்பனைக்கு எட்டாத அளவில் பல அதிசயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது 'நீ இப்படி இருக்கிறாய். அப்படி இருக்கிறாய்' என்று எத்தனை விதமாக இந்த உலகத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் மூலாதாரமான இறைவனை நாம் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சி எல்லாம் ஆயிரம் கோடி சூரியர்களின் பேரொளிக்கு முன்னால் சிறு மின்மினிப்பூச்சியின் மினுக்கு ஒளி போன்றது என்பது நமக்குத் தெரிந்தே உள்ளது.
உலகத்தில் சிறிதளவு பெருமை உடையவரும் அருகில் சென்று அணுகி இருக்க முடியாத படி பெருமிதத்துடன் இருப்பதைப் பார்க்கிறோம். அப்படி அவர்கள் தற்பெருமையுடன் இல்லா விட்டாலும் சுற்றிலும் இருப்பவர்கள் அவர்களைப் பற்றி நமக்குள் அப்படி ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்தி நம்மை அவர்கள் அருகில் சென்று இயல்பாகப் பழக முடியாத படி செய்து விடுகிறார்கள். நாமும் அப்படி எல்லாம் இல்லை; அந்தப் புகழ்பெற்றோர்கள் என்னெதிரில் வந்தால் நான் இயல்பாகத் தான் பேசுவேன் என்று சொன்னாலும், தற்செயலாக அவர்கள் நம் முன்னால் வந்தால் நம்மால் இயல்பாகப் பேச இயலுவதில்லை. அப்படியிருக்கும் போது எல்லாவுலகத்திற்கும் தலைவனான நம் இறைவனோ, எல்லாப் புகழுக்கும் உரிய அவனோ, எல்லாப் புகழ்ச்சியையும் தாண்டி நிற்கும் அவனோ, எளிமையாக நாமும் அவனுடன் கலந்து அனுபவிக்கலாம்படி இருக்கிறான். உலகத்தில் கிடைக்கும் எல்லா போகங்களுக்கும் சிறந்த போகமாக இருக்கிறான்.
இப்படி இறைவனின் அளவற்றப் புகழைப் பாடி அவன் பெருமையைக் கூறும் அதே நேரத்தில் அவனது எளிவந்த தன்மையையும் பாடியுள்ளார்கள் நம் அருளாளர்கள். நம் அருள் இலக்கியங்களில் இதனை எப்போதும் பார்க்கலாம். 'புகழ்ச்சியைக் கடந்த' என்று அவனுடைய பெரும் புகழைப் பாடும் அதே மூச்சில் 'போகமே' என்று அவனது எளிவந்தத் தன்மையையும் பாடுகிறார் மாணிக்கவாசகர். சும்மாவா சொன்னார்கள் ஒருவாசகமானாலும் திருவாசகம் என்று.
உலக இன்பங்களில் மனம் செல்லும் போது மனம் பலவாறாகப் பிரிந்து போகிறது. பிளவுபட்டுப் போகிறது; அதனால் அந்த இன்பங்களைப் புலன்கள் அனுபவித்தாலும் முழுமையான அனுபவமோ இன்பமோ நிறைவோ கிடைப்பதில்லை. அதனால் தான் அது எரிகிற நெருப்பில் வார்க்கும் எண்ணையாக மாறி மேன்மேலும் வேண்டும் என்று நம்மை அந்தப் புலனின்பங்களில் ஆழ்த்தி விடுகிறது. பெரியோர்களெல்லாம் அந்தப் புலனின்பங்களில் இருந்து மனதைத் திருப்பி ஞானவினையாற்றி யோகத்தில் மனதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது தொடக்கத்தில் புரிவதே இல்லை. அப்படியே புரிந்தாலும் யோகத்தில் சுவை ஏற்படுவது இல்லை. வயதுக் காலத்தில் புலனின்பங்களை அனுபவித்து வயது போன பின் யோகத்தில் மனதை இருத்தலாம் என்று தோன்றுகிறது. இது இப்படி இருக்க யோகத்தில் மனதைச் செலுத்தியவர்களும் அவ்வப்போது மனம் தடுமாறி கீழே விழுகிறார்கள் என்றும் படிக்கிறோம்.
ஏன் அப்படி நடக்கிறது? புலனின்பத்தில் மூழ்கியவர்கள் கீழ்நிலைக்குப் போனால் அது இயற்கை எனலாம். ஆனால் யோகத்தில் நிலை நின்றவர்கள் கீழே ஏன் விழுகிறார்கள்? இந்தக் கேள்வி வரும் போது கீதையில் கண்ணன் சொன்னது நினைவிற்கு வருகிறது. யோகத்தின் நிறைவில் யோகி என்னைக் காண்பான். அப்படி என்னை நேருக்கு நேர் காணும் வரை புலன்களின் ஆதிக்கம் அவனிடம் இருக்கும் என்கிறார். அப்படி யோகத்தின் நிறைவாகத் தோன்றும் பொலிவே என்கிறார் மாணிக்கவாசகரும் இங்கு.
அப்படி யோகத்தில் ஈடுபட்டார் அவனை நேருக்கு நேர் காணும் வரை புலன்களின் ஆதிக்கம் இருக்கும் என்றால் யோகம் மிகக் கடினமானதொன்றாக அன்றோ இருக்கும்? புலன்களின் ஆதிக்கம் எவ்வளவு வலிமையுடையது என்பது நாம் ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் காண்பது தானே? அப்படி இருக்க யோகிகள் தம் சொந்த முயற்சியால் அந்தப் புலன்களின் ஆதிக்கத்தை வெல்வதென்பது இயலக் கூடியக் காரியமா? இந்தக் கேள்விகள் எல்லாம் வருமென்று வாதவூராருக்குத் தெரியும் போல் இருக்கிறது. அதனால் அடுத்த வரியிலேயே அதற்குப் பதிலும் சொல்கிறார்.
தெருள் என்னும் தெளிவு வேண்டி அவனருளாலே அவன் தாள் வணங்கி அன்பெனும் மஞ்சன நீரால் அவனை நீராட்டி அவனுக்கு அடிமை செய்வாராய்த் தம்மை இருத்திக் கொண்டு இருக்கும் யோகிகளின் சிந்தனையுள் புகுந்து அவர்கள் செய்யும் ஞானவினையை நல் வழிக்குத் திருப்பி அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளை அறுத்து என்றும் அவர்களுக்கு ஞான குருவாக நிற்கும் செல்வமே என்கிறார் - தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே.
அந்தத் தெளிவு எனக்கு இல்லை. இன்னும் உலக இன்பங்களில் மனம் செல்கிறது. மயக்க நிலையில் தான் நான் இருப்பதாகத் தெரிகிறது. அப்படியே இருந்தாலும் உன் அடிகளைப் பிடித்தால் நற்கதி கிட்டும் என்று எனக்குத் தெரியும். அதனால் உன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்தேன் என்று கூறி இந்தப் பாடலை நிறைவு செய்கிறார் அடிகளார்.
Friday, August 01, 2008
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!

அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே!
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
உலகில் மூவகையான சுடர்கள் இருக்கின்றன - கதிரவன், மதியவன், தீ. விண்மீன்களும் சுடர்வன தான் என்றாலும் இந்த உலகில் இருந்து பார்க்கும் போது அவை ஒளியில் மிகக் குன்றித் தோன்றுவதால் அவற்றைக் கணக்கில் சேர்ப்பதில்லை. அந்த மூவகை சுடர்களிலும் ஒளியில் ஈடு இணையற்று இருக்கும் சுடர் பகலவன். இறைவனைப் பற்றிக் கூறும் போது ஆயிரம் பல்லாயிரம் சூரியர்கள் சேர்ந்து வந்தது போல் இருக்கிறது அவன் ஒளி என்று கூறுவர். ஒரு சூரியனே எப்படி எரிக்கிறான்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்கிறான்; பல்லாயிரம் கதிரவனின் ஒளி என்றால் அது எவ்வளவு வெப்பமானதாய் இருக்கும்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்யும் என்று தோன்றும். இறைவனுடைய ஒளியோ கருணையுடன் கூடியது. கதிரவனைப் போல் சுட்டெரிக்காது. நிலவைப் போல் குளிர்ந்து இருக்கும். அதனால் தான் இங்கே அருளுடைச் சுடரே என்கிறார் ஐயன்.
ஒரு பழ மரத்தில் காய்களும் கனிகளும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நாம் எதனைப் பறித்துத் தின்போம்? கனிகளைத் தானே. அதிலும் பழுத்து மிக்கச் சாறுடன் இருக்கும் கனியென்றால் பறித்தவுடன் உண்ணலாம். ஆனால் அந்த மரத்தில் காய்கள் மட்டும் தான் இருக்கின்றன என்றால் என்ன செய்ய? அவை கனிகளாகும் வரைக் காத்திருக்க வேண்டியது தான்.
இந்த உலகத்தில் பெரும்பாலான விஷயங்கள் காய்கள் மட்டும் இருக்கும் மரம் போன்றவைதான். நாம் ஒரு முயற்சியைச் செய்துவிட்டு அதன் பலனை உடனேயா பார்க்கிறோம்? இல்லையே! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதே! பூவிழி நோகப் பார்த்துக் கொண்டே இருந்தாலும் அந்த காய்கள் கனிவது போல் தெரியவில்லை. இந்த விஷயங்கள் இப்படி என்றால் சில விஷயங்கள் சீக்கிரம் கனிந்து விடுகிறது. ஆனால் அவை உண்ணச் சுவையாக சாறுடன் கூடி இல்லை. உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் இப்படி என்றுமே பழுக்காத காய்கள், பழுக்கும் ஆனால் சுவைக்காத கனிகள் என்று வகைப்படுத்தி விடலாம்.
உலக விஷயங்கள் போலின்றி இறைவன் பறித்தவுடன் உண்ணலாம் படி கனிந்து சுவையுடன் இருக்கிறான். அவன் அருளாலே அவன் தாள் வணங்கினால் அவன் கருணையாலே தன்னை உடனே தருகிறான். என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே நின் செயலே என்று எண்ணி அவனை நோக்கி நின்றால் அவனே தன்னைக் கொடுக்கிறான். அப்படி அவனே கொடுக்கும் போது உடனே சுவைக்கலாம் படி பழுத்தப் பழமாய் இருக்கிறான். அதனால் தான் வெறும் கனியே என்று சொல்லாமல் அளிந்ததோர் கனியே என்கிறார் ஒருவாசகமானாலும் திருவாசகமாய்ச் சொன்ன மாணிக்கவாசகர்.
பக்தி உடையார்க்கு எளியவன் ஆக இருக்கும் அந்த இறைவனே மற்றவர்களுக்கு மிக அரியவனாய் இருக்கிறான். பக்தி உடையார்க்கு அளிந்த கனியாய் இருக்கும் அவனே தங்கள் சொந்த முயற்சியால் அவனைக் காண விரும்புபவர்களுக்கு பெருமுயற்சிக்குப் பின் தன்னைக் கொடுக்கிறான். அந்த பெரு முயற்சியைச் செய்ய எல்லாராலும் முடியாது. அதற்கு பெருந்திறமை வேண்டும். அப்படி பெருந்திறலுடன் அருமையான தவம் செய்வார்களுக்கு அவன் அரசனைப் போல் அவர்களைக் காத்து அருளுகிறான்.
உலகில் எத்தனையோ இருக்கின்றன படிப்பதற்கு. சில சுவையாக இருக்கின்றன. சில சுவையின்றி இருக்கின்றன. விவகாரமான விஷயங்கள் என்றால் படிப்பதற்குச் சுவையாகத் தோன்றி அதில் நம் நேரத்தை வீணாக்குகிறோம். நல்ல விஷயங்கள் சுவையின்றி இருந்தால் அதனை பின்னர் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிவிடுகிறோம். அறிவு தரும் கலைகளில் மெய்யறிவு தரும் கலைகளாய் சிலவே உண்டு. அவை நம் தற்போதைய சூழ்நிலையில் சுவையின்றித் தோன்றலாம். ஆனால் அவை மட்டுமே உண்மைப் பொருளை உடையன. மற்றவை நம் நேரத்தை வீணாக்குகின்றன. இறைவன் எல்லா அறிவிற்கும் இருப்பிடம். அதனால் அவனே உண்மைப் பொருளைக் காட்டும் கலையாகவும் இருக்கிறான்.
அடுத்த பகுதியில் மேலும் பார்ப்போம்.
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
உலகில் மூவகையான சுடர்கள் இருக்கின்றன - கதிரவன், மதியவன், தீ. விண்மீன்களும் சுடர்வன தான் என்றாலும் இந்த உலகில் இருந்து பார்க்கும் போது அவை ஒளியில் மிகக் குன்றித் தோன்றுவதால் அவற்றைக் கணக்கில் சேர்ப்பதில்லை. அந்த மூவகை சுடர்களிலும் ஒளியில் ஈடு இணையற்று இருக்கும் சுடர் பகலவன். இறைவனைப் பற்றிக் கூறும் போது ஆயிரம் பல்லாயிரம் சூரியர்கள் சேர்ந்து வந்தது போல் இருக்கிறது அவன் ஒளி என்று கூறுவர். ஒரு சூரியனே எப்படி எரிக்கிறான்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்கிறான்; பல்லாயிரம் கதிரவனின் ஒளி என்றால் அது எவ்வளவு வெப்பமானதாய் இருக்கும்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்யும் என்று தோன்றும். இறைவனுடைய ஒளியோ கருணையுடன் கூடியது. கதிரவனைப் போல் சுட்டெரிக்காது. நிலவைப் போல் குளிர்ந்து இருக்கும். அதனால் தான் இங்கே அருளுடைச் சுடரே என்கிறார் ஐயன்.
ஒரு பழ மரத்தில் காய்களும் கனிகளும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நாம் எதனைப் பறித்துத் தின்போம்? கனிகளைத் தானே. அதிலும் பழுத்து மிக்கச் சாறுடன் இருக்கும் கனியென்றால் பறித்தவுடன் உண்ணலாம். ஆனால் அந்த மரத்தில் காய்கள் மட்டும் தான் இருக்கின்றன என்றால் என்ன செய்ய? அவை கனிகளாகும் வரைக் காத்திருக்க வேண்டியது தான்.
இந்த உலகத்தில் பெரும்பாலான விஷயங்கள் காய்கள் மட்டும் இருக்கும் மரம் போன்றவைதான். நாம் ஒரு முயற்சியைச் செய்துவிட்டு அதன் பலனை உடனேயா பார்க்கிறோம்? இல்லையே! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதே! பூவிழி நோகப் பார்த்துக் கொண்டே இருந்தாலும் அந்த காய்கள் கனிவது போல் தெரியவில்லை. இந்த விஷயங்கள் இப்படி என்றால் சில விஷயங்கள் சீக்கிரம் கனிந்து விடுகிறது. ஆனால் அவை உண்ணச் சுவையாக சாறுடன் கூடி இல்லை. உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் இப்படி என்றுமே பழுக்காத காய்கள், பழுக்கும் ஆனால் சுவைக்காத கனிகள் என்று வகைப்படுத்தி விடலாம்.
உலக விஷயங்கள் போலின்றி இறைவன் பறித்தவுடன் உண்ணலாம் படி கனிந்து சுவையுடன் இருக்கிறான். அவன் அருளாலே அவன் தாள் வணங்கினால் அவன் கருணையாலே தன்னை உடனே தருகிறான். என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே நின் செயலே என்று எண்ணி அவனை நோக்கி நின்றால் அவனே தன்னைக் கொடுக்கிறான். அப்படி அவனே கொடுக்கும் போது உடனே சுவைக்கலாம் படி பழுத்தப் பழமாய் இருக்கிறான். அதனால் தான் வெறும் கனியே என்று சொல்லாமல் அளிந்ததோர் கனியே என்கிறார் ஒருவாசகமானாலும் திருவாசகமாய்ச் சொன்ன மாணிக்கவாசகர்.
பக்தி உடையார்க்கு எளியவன் ஆக இருக்கும் அந்த இறைவனே மற்றவர்களுக்கு மிக அரியவனாய் இருக்கிறான். பக்தி உடையார்க்கு அளிந்த கனியாய் இருக்கும் அவனே தங்கள் சொந்த முயற்சியால் அவனைக் காண விரும்புபவர்களுக்கு பெருமுயற்சிக்குப் பின் தன்னைக் கொடுக்கிறான். அந்த பெரு முயற்சியைச் செய்ய எல்லாராலும் முடியாது. அதற்கு பெருந்திறமை வேண்டும். அப்படி பெருந்திறலுடன் அருமையான தவம் செய்வார்களுக்கு அவன் அரசனைப் போல் அவர்களைக் காத்து அருளுகிறான்.
உலகில் எத்தனையோ இருக்கின்றன படிப்பதற்கு. சில சுவையாக இருக்கின்றன. சில சுவையின்றி இருக்கின்றன. விவகாரமான விஷயங்கள் என்றால் படிப்பதற்குச் சுவையாகத் தோன்றி அதில் நம் நேரத்தை வீணாக்குகிறோம். நல்ல விஷயங்கள் சுவையின்றி இருந்தால் அதனை பின்னர் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிவிடுகிறோம். அறிவு தரும் கலைகளில் மெய்யறிவு தரும் கலைகளாய் சிலவே உண்டு. அவை நம் தற்போதைய சூழ்நிலையில் சுவையின்றித் தோன்றலாம். ஆனால் அவை மட்டுமே உண்மைப் பொருளை உடையன. மற்றவை நம் நேரத்தை வீணாக்குகின்றன. இறைவன் எல்லா அறிவிற்கும் இருப்பிடம். அதனால் அவனே உண்மைப் பொருளைக் காட்டும் கலையாகவும் இருக்கிறான்.
அடுத்த பகுதியில் மேலும் பார்ப்போம்.
அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே! பெருந்திறல் அருந்தவர்க்கரசே!

அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே!
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
அருளுடைச் சுடரே - கருணையுடன் கூடிய சுடரே
அளிந்ததோர் கனியே - கனிந்துப் பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே
பெருந்திறல் அருந்தவர்க்கு அரசே - பெருமையும் ஆற்றலும் கொண்ட அருமையான தவம் உடையவர்களுக்கு அரசனே
பொருளுடைக் கலையே - உண்மைப்பொருளை தன் உட்பொருளாகக் கொண்ட கலையே
புகழ்ச்சியைக் கடந்த போகமே - எவ்வளவுதான் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளை எல்லாம் கடந்து நிற்கும் இன்பவடிவானவனே
யோகத்தின் பொலிவே - யோகமே உருவானவனே; யோகம் செய்வார்களுக்குக் காட்சியளிப்பவனே
தெருளிடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே - மயக்கமே இல்லாத நிலையை அடைந்த அடியவர்கள் சிந்தையுள் புகுந்து நிற்கும் செல்வமே
சிவபெருமானே - என் தலைவனான சிவனே
இருளிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - மயக்கம் அளிக்கும் நிலையான இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்து அருளுவது இனியே - நீர் இனிமேல் எங்கு எழுந்தருளிச் செல்வது?
கருணையுடன் கூடிய சுடரே. அடியார்களுக்குக் கனிந்துப் பக்குவப்பட்ட ஒப்பற்ற கனி போன்றவனே. பெருமையும் ஆற்றலும் கொண்ட அருமையான தவம் உடையவர்களுக்கு அரசனே. உண்மைப்பொருளை தன் உட்பொருளாகக் கொண்ட கலையே. மெய்நூலானவனே. அந்தக் கலைகளும் நூல்களும் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளை எல்லாம் கடந்து நிற்கும் இன்பவடிவானவனே. யோகமே உருவானவனே. யோகம் செய்வார்களுக்குக் காட்சியளிப்பவனே. மயக்கமே இல்லாத நிலையை அடைந்த அடியவர்கள் சிந்தையுள் புகுந்து நிற்கும் செல்வமே. சிவபெருமானே. மயக்கம் கொடுக்கும் நிலையான இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். எங்கு எழுந்து அருளுவது இனியே?
Wednesday, July 30, 2008
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களுக்கும் தலைவனாய் இருந்த போதிலும் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆனவன். இந்த உலகில் பிறக்கும் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவித அழுக்குகளால் மூடப்பெற்று இறைவனை மறந்து புலன்களின் வழியே சென்று பாவக்குழியில் விழுந்து சொல்லொணா துயரம் அடையும் போது, செய்த குற்றங்களை எல்லாம் மறந்து அந்த உயிர்களை நல்வழிக்குக் கூட்டிவந்து அருள்செய்வது இறைவனின் தனிப்பெரும்கருணை. தம் குழந்தைகள் எத்தனைத் தான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்து அந்த குழந்தைகளைக் காப்பது பெற்றோர் இயல்பு. இறைவன் அப்படி நம் குற்றங்களை எல்லாம் பெற்ற அன்னையும் தந்தையும் போல பொறுத்துக்கொண்டு நம்மை எப்போதும் காப்பதால் 'அம்மையே! அப்பா!' என்றார் மாணிக்கவாசகர். 'பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்; பெற்றவள் குறமகள் பெற்றவளாமே' என்றார் பாலன் தேவராய சுவாமிகளும்.
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு என்றார் பொய்யாமொழிப்புலவர். இந்த உலகில் நாமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, நம் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்து, உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி இரு
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களுக்கும் தலைவனாய் இருந்த போதிலும் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆனவன். இந்த உலகில் பிறக்கும் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவித அழுக்குகளால் மூடப்பெற்று இறைவனை மறந்து புலன்களின் வழியே சென்று பாவக்குழியில் விழுந்து சொல்லொணா துயரம் அடையும் போது, செய்த குற்றங்களை எல்லாம் மறந்து அந்த உயிர்களை நல்வழிக்குக் கூட்டிவந்து அருள்செய்வது இறைவனின் தனிப்பெரும்கருணை. தம் குழந்தைகள் எத்தனைத் தான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்து அந்த குழந்தைகளைக் காப்பது பெற்றோர் இயல்பு. இறைவன் அப்படி நம் குற்றங்களை எல்லாம் பெற்ற அன்னையும் தந்தையும் போல பொறுத்துக்கொண்டு நம்மை எப்போதும் காப்பதால் 'அம்மையே! அப்பா!' என்றார் மாணிக்கவாசகர். 'பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்; பெற்றவள் குறமகள் பெற்றவளாமே' என்றார் பாலன் தேவராய சுவாமிகளும்.
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு என்றார் பொய்யாமொழிப்புலவர். இந்த உலகில் நாமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, நம் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்து, உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி இரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக