உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே!

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!
நடைமுறை உலகத்தைப் பார்த்தால் மூன்று விதமான தாய்மார்களைப் பார்க்கலாம். குழந்தை பசியால் அழுதாலும் பால் கொடுக்காதவள் கடைநிலைத் தாய். குழந்தை அழுதவுடன் பால் கொடுப்பவள் இடைநிலைத் தாய். குழந்தை அழுவதற்கு முன்னர் பசி நேரம் என்று அறிந்து நேரா நேரத்திற்குப் பால் தருபவள் தலைநிலைத் தாய். அப்படி காலமறிந்து பால் ஊட்டும் தலைநிலைத் தாயையும் விடச் சிறந்தவன் இறைவன். தலைநிலைத் தாயைவிட மிகவும் பரிந்து வாத்ஸல்யமுடன் உலகத்து உயிர்களையெல்லாம் காப்பவன் தாயுமானவன்.
மானிடத்தாய் உடலை மட்டுமே வளர்க்கும் போது இறைவனோ உடலோடு உள்ளத்தையும் சேர்த்து வளர்ப்பவன். அதனால் ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்குகின்றான். உள்ளொளி பெருகியதால் உள்ளத்தின் உள்ளே என்று அழியாததாகவும் திகட்டாததாகவும் உள்ள இன்பத் தேன் பொழிந்தது.
உள்ளே பொழிந்த தேன் வெளியிலும் பொங்கிப் பரவியது. உள்ளே மட்டும் காக்காமல் வெளியிலும் எத்திசையிலும் இறைவன் இருந்து அடியவரைக் காக்கின்றான். அப்படி என்றும் நீங்காத செல்வமாக இருப்பவன் சிவபெருமான்.
அவன் நம்மைத் தொடர்ந்து எங்கும் நிறைந்திருக்க அவனை நாம் தொடர்ந்து சென்று சிக்கெனப் பிடித்தல் எளிது தானே. உண்மையில் அவன் நம்மைத் தொடர நாம் தான் அவனை உதறுகின்றோம். அதனால் அடிகளார் சிக்கெனப் பிடித்த போது அவனால் எங்கும் எழுந்தருள முடியாது. ஆனால் மறைத்தலும் அவன் தொழிலாதலால் நாம் அவனைப் பிடிக்கும் போது மறைந்துச் செல்வதைப் போல் ஒரு போக்கு காட்டுவான். அப்போது 'நீயும் எனைத் தொடர்ந்தாய். நானும் உனைத் தொடர்ந்தேன். இப்போது எங்கே சென்றீர்?' என்ற கேள்வி எழுந்து உருக்கும். அதுவே இப்பாடலில் வெளிப்பட்டது.
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!
நடைமுறை உலகத்தைப் பார்த்தால் மூன்று விதமான தாய்மார்களைப் பார்க்கலாம். குழந்தை பசியால் அழுதாலும் பால் கொடுக்காதவள் கடைநிலைத் தாய். குழந்தை அழுதவுடன் பால் கொடுப்பவள் இடைநிலைத் தாய். குழந்தை அழுவதற்கு முன்னர் பசி நேரம் என்று அறிந்து நேரா நேரத்திற்குப் பால் தருபவள் தலைநிலைத் தாய். அப்படி காலமறிந்து பால் ஊட்டும் தலைநிலைத் தாயையும் விடச் சிறந்தவன் இறைவன். தலைநிலைத் தாயைவிட மிகவும் பரிந்து வாத்ஸல்யமுடன் உலகத்து உயிர்களையெல்லாம் காப்பவன் தாயுமானவன்.
மானிடத்தாய் உடலை மட்டுமே வளர்க்கும் போது இறைவனோ உடலோடு உள்ளத்தையும் சேர்த்து வளர்ப்பவன். அதனால் ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்குகின்றான். உள்ளொளி பெருகியதால் உள்ளத்தின் உள்ளே என்று அழியாததாகவும் திகட்டாததாகவும் உள்ள இன்பத் தேன் பொழிந்தது.
உள்ளே பொழிந்த தேன் வெளியிலும் பொங்கிப் பரவியது. உள்ளே மட்டும் காக்காமல் வெளியிலும் எத்திசையிலும் இறைவன் இருந்து அடியவரைக் காக்கின்றான். அப்படி என்றும் நீங்காத செல்வமாக இருப்பவன் சிவபெருமான்.
அவன் நம்மைத் தொடர்ந்து எங்கும் நிறைந்திருக்க அவனை நாம் தொடர்ந்து சென்று சிக்கெனப் பிடித்தல் எளிது தானே. உண்மையில் அவன் நம்மைத் தொடர நாம் தான் அவனை உதறுகின்றோம். அதனால் அடிகளார் சிக்கெனப் பிடித்த போது அவனால் எங்கும் எழுந்தருள முடியாது. ஆனால் மறைத்தலும் அவன் தொழிலாதலால் நாம் அவனைப் பிடிக்கும் போது மறைந்துச் செல்வதைப் போல் ஒரு போக்கு காட்டுவான். அப்போது 'நீயும் எனைத் தொடர்ந்தாய். நானும் உனைத் தொடர்ந்தேன். இப்போது எங்கே சென்றீர்?' என்ற கேள்வி எழுந்து உருக்கும். அதுவே இப்பாடலில் வெளிப்பட்டது.
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து...

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!
பால் நினைந்து ஊட்டும் - குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!
பால் நினைந்து ஊட்டும் - குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற
தாயினும் சாலப் பரிந்து - தாயைவிட மிகவும் அன்பு கொண்டு
நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய
ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி
உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் அறிவொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து - அழியாத இன்பமாகியத் தேனினைச் சொரிந்து
புறம் புறம் திரிந்த செல்வமே - எல்லாப் புறங்களிலும் கூட வந்து என்னைக் காக்கும் செல்வமே!
சிவபெருமானே - சிவபிரானே!
யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து
சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன்
எங்கெழுந்தருளுவது இனியே - இனிமேல் நீ எங்கே எழுந்தருளிச் செல்வது?
பசியை காலத்தால் அறிந்து பால் ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி உள்ளத்திலே அறிவொளி பெருக்கி அழியாத ஆனந்தத்தைப் பொழிந்தாய். உள்ளே ஆனந்தத்தைத் தந்ததோடு வெளியே எப்புறத்திலும் நின்று காத்தாய். எனது செல்வமே சிவபெருமானே! நான் உன்னை உறுதியாகப் பற்றினேன்! இனி எங்கே எழுந்தருளுகிறீர்?!
பசியை காலத்தால் அறிந்து பால் ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி உள்ளத்திலே அறிவொளி பெருக்கி அழியாத ஆனந்தத்தைப் பொழிந்தாய். உள்ளே ஆனந்தத்தைத் தந்ததோடு வெளியே எப்புறத்திலும் நின்று காத்தாய். எனது செல்வமே சிவபெருமானே! நான் உன்னை உறுதியாகப் பற்றினேன்! இனி எங்கே எழுந்தருளுகிறீர்?!
Wednesday, August 06, 2008
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி! செல்வமே! சிவபெருமானே!

பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமாறு அடியனேற்கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி!
செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!
இந்தப்பாடல் விளக்கத்தின் முதற்பகுதியை அக்டோபரில் பார்த்தோம். அடுத்தப் பகுதியை எழுத இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. மன்னிக்கவும்.
பந்த பாசங்கள் இல்லாதவர் யாருமே இல்லை. வேண்டுதல் வேண்டாமை இலாதான் என்றாலும் அவனும் அடியார்களிடம் அன்பு கொண்டவன் தான்; சரியாகப் புரிந்து கொள்ளாவிடில் அந்த அன்பும் பாசம் போல் தோன்றும். அன்பிற்கும் பாசத்திற்கும் வேறுபாடு என்ன? அன்பு நல்லதையே நாடும். நமக்குக் கேடென்றாலும் ஒருவர் மேல் வைத்த அன்பு அவருக்கு நல்லதையே நாடும்; சொல்லும்; செய்யும். அவருக்கு விருப்பமில்லாதது என்றாலும் அவர் மேல் வைத்த அன்பு அவருக்கு நல்லதையே நாடும் - தாய் கொடுக்கும் கசப்பு மருந்தினைப் போல். பாசம் நல்லதோ கெட்டதோ பார்க்காது; கண்ணை மறைக்கும்; மருத்துவர் மருந்தூசியை போடும் போது குழந்தை அழுவதைப் பார்க்க முடியாமல் தலை திருப்பும் அன்னை தந்தையரைப் போல். மற்றவர் மேல் வைத்த அந்தப் பாசம் நம்மையும் பல நேரங்களில் தவறான பாதையில் திருப்பிவிட்டுவிடும் - திருதராஷ்ட்ரனைப் போல்.
அன்பை எல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டும் என்பார்கள் சான்றோர். ஆனால் அவர்களே பாசம் அறுக்க வேண்டும் என்பார்கள். பாசம் என்ற இதே சொல் மற்ற பொருள்களிலும் வழங்கப்படுகிறது - பாசியையும் பாசம் என்பார்கள் - இரண்டுமே வழுக்கிவிடும்; கயிற்றையும் பாசம் என்பார்கள் - இரண்டுமே ஒருவரைக் கட்டும். அப்படிப்பட்ட பாசத்தை வேருடன் அறுக்க வேண்டும். அது நம் சுய முயற்சியால் முடியுமா என்றால் அறிந்தவர் தெரிந்தவர் எல்லோரும் சொல்லும் விடை இல்லை என்பதே. அவன் அருளாலே தான் அது முடியும் என்கிறார்கள் அவர்கள். அதனைத் தான் அடிகளும் இங்கே பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னை என்கிறார். அறுக்கும் என்று நிகழ்காலத்தில் கூறியது அவர் அதனை மூன்று காலங்களிலும் செய்பவர் என்ற பொருளில்.
முக்காலங்களிலும் எக்காலங்களிலும் செய்பவர் பழம்பொருளாகத் தானே இருக்க வேண்டும். பழமைக்கும் பழமையானவன்; புதுமைக்கும் புதுமையானவர். அந்தப் பழம்பொருளைப் பற்றினால் பாச வேர் அறுபடும். அந்தப் பழம்பொருளைப் பற்றுவதும் எளிதோ? அது நம் முயற்சியால் மட்டுமே கூடுமோ? இல்லை. அதற்கும் அவன் அருள் வேண்டும். அடிமையான எனக்கு அருள் செய்து என்கிறார் இங்கே. அடியவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் ஆயிரம் பொருள்.
நாம் எத்தனையோ விதமாகப் பூசிக்கலாம் அவனை. அவன் அருளும் நம் அடக்கமும் இன்றி என்ன தான் பூசித்தாலும் அவன் அதனை ஏற்றுக் கொள்ளவேண்டுமே? நாம் அவனுடைய அடியவர்கள் என்று ஆயிரம் முறை கூறினாலும் என்ன அவன் நம்மை தன் அடியவர் என்று ஏற்றுக்கொள்ளாதவரை? அவன் ஏற்றுக் கொண்டால் அல்லவோ அதில் பொருள் உண்டு?
பழம்பொருளான தன்னைப் பற்றுமாறு அடியவனான எனக்கு அருளி நான் செய்த சிறு பூசைகளையும் பெருமையாக எண்ணி உவப்புடன், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான் என்கிறார். நிர்ஹேதுக கிருபை என்பார்கள் வடமொழியில் - காரணமற்ற அன்பு. அப்படிப்பட்ட அன்பு நாம் செய்யும் சிறு பூசையையும் அன்புடன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளச் செய்கிறது.
செய்த சிறு பூசையையும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் என் சிந்தையுள் புகுந்து நின்றான். ஒளி புகுந்தவுடன் இருள் அகன்று காணாமல் போவது போல் சிந்தையுள் அவன் புகுந்தவுடன் மற்ற எண்ணங்கள் எல்லாம் காணாமல் போனது. ஒளி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைவது போல் அவன் சிந்தை புகுந்து சிந்தை முழுவதும் நீக்கமற நிறைந்தான்.
கருணையுடன் இவ்வளவும் செய்தவன் அந்தக் கருணைக்கு அடையாளமாக தன் திருவடித் தாமரைகளையும் நான் பற்றுமாறு அருளினான். திருவடிகளின் பெருமை சொல்லி முடியாது. அதனால் அதனை இன்னொரு நாள் பார்ப்போம். கட்டாயம் அதற்கு வாய்ப்பு கிட்டும்.
ஒளியுடைய விளக்கே என்கிறார். வேறு பொருள்கள் எல்லாம் இருப்பதைக் காட்ட ஒரு விளக்கு வேண்டும். ஆனால் விளக்கு இருப்பதைக்காட்ட அந்த விளக்கே போதுமன்றோ? அப்படிப்பட்டவன் இறைவன்.
செழுஞ்சுடர் மூர்த்தி - சரி. அவன் இருப்பைக் காட்ட அவனே போதும்; அவன் திருவுருவம் எப்படிப்பட்டது என்றால் விளக்கின் திருவுருவம் எப்படி இருக்கும்? சுடர் வடிவாக இருக்கும் தானே?! இறைவன் திருவுருவும் அப்படியே செழுமையான் சுடர் வடிவாக இருக்கிறது.
அடியார்க்கு நிலைத்த செல்வம் தெய்வம் தானே? அதனால் செல்வமே என்கிறார். சிவபெருமானே. தலைவனே. ஈசனே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். இவ்வளவு தூரம் அருள் செய்த பின் என்னை விட்டு எங்கே எழுந்தருளுகிறீர்கள்? உம்மை விடமாட்டேன் என்கிறார்.
பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து பூங்கழல் காட்டியப் பொருளே!

பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமாறு அடியனேற்கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி!
செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!
பாச வேர் அறுக்கும் - பந்த பாசங்கள் எனும் பற்றுதல்களின் வேரினை அறுக்கும்
பழம்பொருள் தன்னைப் - எல்லாவற்றிற்கும் மூத்ததான பழம்பொருளாகிய இறைவனைப்
பற்றுமாறு அடியனேற்கருளிப் - பற்றுமாறு அடியவனுக்கு அருளி
பூசனை உகந்து - என் சிறிய வழிபாட்டினை மகிழ்ந்து விரும்பி ஏற்றுக் கொண்டு
என் சிந்தையுள் புகுந்து - என் உள்ளத்துள் புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே! - தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய நிலையான பொருளே!
தேசுடை விளக்கே! - ஒளியுடன் கூடிய விளக்கே
செழுஞ்சுடர் மூர்த்தி! - விளக்கினில் தோன்றும் சுடர் வடிவானவனே!
செல்வமே! - என் ஒரே செல்வமே!
சிவபெருமானே! ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே! - என் தலைவனான சிவபெருமானே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். என்னை விட்டு நீ எங்கும் செல்ல முடியாது.
பந்த பாசங்கள் எனும் பற்றுதல்களின் வேரினை அறுக்கும் எல்லாவற்றிற்கும் மூத்ததான பழம்பொருளாகிய இறைவனைப் பற்றுமாறு அடியவனுக்கு அருளி என் சிறிய வழிபாட்டினை மகிழ்ந்து விரும்பி ஏற்றுக் கொண்டு என் உள்ளத்துள் புகுந்து தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய நிலையான பொருளே! ஒளியுடன் கூடிய விளக்கே! விளக்கினில் தோன்றும் சுடர் வடிவானவனே! என் ஒரே செல்வமே! என் தலைவனான சிவபெருமானே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். என்னை விட்டு நீ எங்கும் செல்ல முடியாது.
Tuesday, August 05, 2008
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே! சிவபெருமானே!

அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே!
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இந்தப் பாடலின் முதல் பகுதியை ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னால் பார்த்தோம். அடுத்தப் பகுதியை எழுதுவதற்கு இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
போன பதிவின் பின்னூட்டங்களிலேயே அன்பர்கள் பலர் 'புகழ்ச்சியைக் கடந்த போகமே' என்பதற்கு நல்ல விளக்கங்கள் கொடுத்திருக்கின்றனர். அவற்றை இங்கே சுருக்கமாகக் கொடுத்துவிட்டு மற்ற வரிகளையும் பார்க்கலாம் என்று எண்ணுகிறேன்.
இந்தப் பிரபஞ்சத்தின் அளவு நம் கற்பனைக்கு எல்லாம் தாண்டிய அளவில் இருப்பதாக வானவியலார் கூறுகின்றனர். இந்த உலகத்திலேயே நம் கற்பனைக்கு எட்டாத அளவில் பல அதிசயங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது 'நீ இப்படி இருக்கிறாய். அப்படி இருக்கிறாய்' என்று எத்தனை விதமாக இந்த உலகத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் மூலாதாரமான இறைவனை நாம் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சி எல்லாம் ஆயிரம் கோடி சூரியர்களின் பேரொளிக்கு முன்னால் சிறு மின்மினிப்பூச்சியின் மினுக்கு ஒளி போன்றது என்பது நமக்குத் தெரிந்தே உள்ளது.
உலகத்தில் சிறிதளவு பெருமை உடையவரும் அருகில் சென்று அணுகி இருக்க முடியாத படி பெருமிதத்துடன் இருப்பதைப் பார்க்கிறோம். அப்படி அவர்கள் தற்பெருமையுடன் இல்லா விட்டாலும் சுற்றிலும் இருப்பவர்கள் அவர்களைப் பற்றி நமக்குள் அப்படி ஒரு அபிப்பிராயம் ஏற்படுத்தி நம்மை அவர்கள் அருகில் சென்று இயல்பாகப் பழக முடியாத படி செய்து விடுகிறார்கள். நாமும் அப்படி எல்லாம் இல்லை; அந்தப் புகழ்பெற்றோர்கள் என்னெதிரில் வந்தால் நான் இயல்பாகத் தான் பேசுவேன் என்று சொன்னாலும், தற்செயலாக அவர்கள் நம் முன்னால் வந்தால் நம்மால் இயல்பாகப் பேச இயலுவதில்லை. அப்படியிருக்கும் போது எல்லாவுலகத்திற்கும் தலைவனான நம் இறைவனோ, எல்லாப் புகழுக்கும் உரிய அவனோ, எல்லாப் புகழ்ச்சியையும் தாண்டி நிற்கும் அவனோ, எளிமையாக நாமும் அவனுடன் கலந்து அனுபவிக்கலாம்படி இருக்கிறான். உலகத்தில் கிடைக்கும் எல்லா போகங்களுக்கும் சிறந்த போகமாக இருக்கிறான்.
இப்படி இறைவனின் அளவற்றப் புகழைப் பாடி அவன் பெருமையைக் கூறும் அதே நேரத்தில் அவனது எளிவந்த தன்மையையும் பாடியுள்ளார்கள் நம் அருளாளர்கள். நம் அருள் இலக்கியங்களில் இதனை எப்போதும் பார்க்கலாம். 'புகழ்ச்சியைக் கடந்த' என்று அவனுடைய பெரும் புகழைப் பாடும் அதே மூச்சில் 'போகமே' என்று அவனது எளிவந்தத் தன்மையையும் பாடுகிறார் மாணிக்கவாசகர். சும்மாவா சொன்னார்கள் ஒருவாசகமானாலும் திருவாசகம் என்று.
உலக இன்பங்களில் மனம் செல்லும் போது மனம் பலவாறாகப் பிரிந்து போகிறது. பிளவுபட்டுப் போகிறது; அதனால் அந்த இன்பங்களைப் புலன்கள் அனுபவித்தாலும் முழுமையான அனுபவமோ இன்பமோ நிறைவோ கிடைப்பதில்லை. அதனால் தான் அது எரிகிற நெருப்பில் வார்க்கும் எண்ணையாக மாறி மேன்மேலும் வேண்டும் என்று நம்மை அந்தப் புலனின்பங்களில் ஆழ்த்தி விடுகிறது. பெரியோர்களெல்லாம் அந்தப் புலனின்பங்களில் இருந்து மனதைத் திருப்பி ஞானவினையாற்றி யோகத்தில் மனதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது தொடக்கத்தில் புரிவதே இல்லை. அப்படியே புரிந்தாலும் யோகத்தில் சுவை ஏற்படுவது இல்லை. வயதுக் காலத்தில் புலனின்பங்களை அனுபவித்து வயது போன பின் யோகத்தில் மனதை இருத்தலாம் என்று தோன்றுகிறது. இது இப்படி இருக்க யோகத்தில் மனதைச் செலுத்தியவர்களும் அவ்வப்போது மனம் தடுமாறி கீழே விழுகிறார்கள் என்றும் படிக்கிறோம்.
ஏன் அப்படி நடக்கிறது? புலனின்பத்தில் மூழ்கியவர்கள் கீழ்நிலைக்குப் போனால் அது இயற்கை எனலாம். ஆனால் யோகத்தில் நிலை நின்றவர்கள் கீழே ஏன் விழுகிறார்கள்? இந்தக் கேள்வி வரும் போது கீதையில் கண்ணன் சொன்னது நினைவிற்கு வருகிறது. யோகத்தின் நிறைவில் யோகி என்னைக் காண்பான். அப்படி என்னை நேருக்கு நேர் காணும் வரை புலன்களின் ஆதிக்கம் அவனிடம் இருக்கும் என்கிறார். அப்படி யோகத்தின் நிறைவாகத் தோன்றும் பொலிவே என்கிறார் மாணிக்கவாசகரும் இங்கு.
அப்படி யோகத்தில் ஈடுபட்டார் அவனை நேருக்கு நேர் காணும் வரை புலன்களின் ஆதிக்கம் இருக்கும் என்றால் யோகம் மிகக் கடினமானதொன்றாக அன்றோ இருக்கும்? புலன்களின் ஆதிக்கம் எவ்வளவு வலிமையுடையது என்பது நாம் ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் காண்பது தானே? அப்படி இருக்க யோகிகள் தம் சொந்த முயற்சியால் அந்தப் புலன்களின் ஆதிக்கத்தை வெல்வதென்பது இயலக் கூடியக் காரியமா? இந்தக் கேள்விகள் எல்லாம் வருமென்று வாதவூராருக்குத் தெரியும் போல் இருக்கிறது. அதனால் அடுத்த வரியிலேயே அதற்குப் பதிலும் சொல்கிறார்.
தெருள் என்னும் தெளிவு வேண்டி அவனருளாலே அவன் தாள் வணங்கி அன்பெனும் மஞ்சன நீரால் அவனை நீராட்டி அவனுக்கு அடிமை செய்வாராய்த் தம்மை இருத்திக் கொண்டு இருக்கும் யோகிகளின் சிந்தனையுள் புகுந்து அவர்கள் செய்யும் ஞானவினையை நல் வழிக்குத் திருப்பி அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகளை அறுத்து என்றும் அவர்களுக்கு ஞான குருவாக நிற்கும் செல்வமே என்கிறார் - தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே.
அந்தத் தெளிவு எனக்கு இல்லை. இன்னும் உலக இன்பங்களில் மனம் செல்கிறது. மயக்க நிலையில் தான் நான் இருப்பதாகத் தெரிகிறது. அப்படியே இருந்தாலும் உன் அடிகளைப் பிடித்தால் நற்கதி கிட்டும் என்று எனக்குத் தெரியும். அதனால் உன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்தேன் என்று கூறி இந்தப் பாடலை நிறைவு செய்கிறார் அடிகளார்.
Friday, August 01, 2008
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த போகமே! யோகத்தின் பொலிவே!

அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே!
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
உலகில் மூவகையான சுடர்கள் இருக்கின்றன - கதிரவன், மதியவன், தீ. விண்மீன்களும் சுடர்வன தான் என்றாலும் இந்த உலகில் இருந்து பார்க்கும் போது அவை ஒளியில் மிகக் குன்றித் தோன்றுவதால் அவற்றைக் கணக்கில் சேர்ப்பதில்லை. அந்த மூவகை சுடர்களிலும் ஒளியில் ஈடு இணையற்று இருக்கும் சுடர் பகலவன். இறைவனைப் பற்றிக் கூறும் போது ஆயிரம் பல்லாயிரம் சூரியர்கள் சேர்ந்து வந்தது போல் இருக்கிறது அவன் ஒளி என்று கூறுவர். ஒரு சூரியனே எப்படி எரிக்கிறான்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்கிறான்; பல்லாயிரம் கதிரவனின் ஒளி என்றால் அது எவ்வளவு வெப்பமானதாய் இருக்கும்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்யும் என்று தோன்றும். இறைவனுடைய ஒளியோ கருணையுடன் கூடியது. கதிரவனைப் போல் சுட்டெரிக்காது. நிலவைப் போல் குளிர்ந்து இருக்கும். அதனால் தான் இங்கே அருளுடைச் சுடரே என்கிறார் ஐயன்.
ஒரு பழ மரத்தில் காய்களும் கனிகளும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நாம் எதனைப் பறித்துத் தின்போம்? கனிகளைத் தானே. அதிலும் பழுத்து மிக்கச் சாறுடன் இருக்கும் கனியென்றால் பறித்தவுடன் உண்ணலாம். ஆனால் அந்த மரத்தில் காய்கள் மட்டும் தான் இருக்கின்றன என்றால் என்ன செய்ய? அவை கனிகளாகும் வரைக் காத்திருக்க வேண்டியது தான்.
இந்த உலகத்தில் பெரும்பாலான விஷயங்கள் காய்கள் மட்டும் இருக்கும் மரம் போன்றவைதான். நாம் ஒரு முயற்சியைச் செய்துவிட்டு அதன் பலனை உடனேயா பார்க்கிறோம்? இல்லையே! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதே! பூவிழி நோகப் பார்த்துக் கொண்டே இருந்தாலும் அந்த காய்கள் கனிவது போல் தெரியவில்லை. இந்த விஷயங்கள் இப்படி என்றால் சில விஷயங்கள் சீக்கிரம் கனிந்து விடுகிறது. ஆனால் அவை உண்ணச் சுவையாக சாறுடன் கூடி இல்லை. உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் இப்படி என்றுமே பழுக்காத காய்கள், பழுக்கும் ஆனால் சுவைக்காத கனிகள் என்று வகைப்படுத்தி விடலாம்.
உலக விஷயங்கள் போலின்றி இறைவன் பறித்தவுடன் உண்ணலாம் படி கனிந்து சுவையுடன் இருக்கிறான். அவன் அருளாலே அவன் தாள் வணங்கினால் அவன் கருணையாலே தன்னை உடனே தருகிறான். என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே நின் செயலே என்று எண்ணி அவனை நோக்கி நின்றால் அவனே தன்னைக் கொடுக்கிறான். அப்படி அவனே கொடுக்கும் போது உடனே சுவைக்கலாம் படி பழுத்தப் பழமாய் இருக்கிறான். அதனால் தான் வெறும் கனியே என்று சொல்லாமல் அளிந்ததோர் கனியே என்கிறார் ஒருவாசகமானாலும் திருவாசகமாய்ச் சொன்ன மாணிக்கவாசகர்.
பக்தி உடையார்க்கு எளியவன் ஆக இருக்கும் அந்த இறைவனே மற்றவர்களுக்கு மிக அரியவனாய் இருக்கிறான். பக்தி உடையார்க்கு அளிந்த கனியாய் இருக்கும் அவனே தங்கள் சொந்த முயற்சியால் அவனைக் காண விரும்புபவர்களுக்கு பெருமுயற்சிக்குப் பின் தன்னைக் கொடுக்கிறான். அந்த பெரு முயற்சியைச் செய்ய எல்லாராலும் முடியாது. அதற்கு பெருந்திறமை வேண்டும். அப்படி பெருந்திறலுடன் அருமையான தவம் செய்வார்களுக்கு அவன் அரசனைப் போல் அவர்களைக் காத்து அருளுகிறான்.
உலகில் எத்தனையோ இருக்கின்றன படிப்பதற்கு. சில சுவையாக இருக்கின்றன. சில சுவையின்றி இருக்கின்றன. விவகாரமான விஷயங்கள் என்றால் படிப்பதற்குச் சுவையாகத் தோன்றி அதில் நம் நேரத்தை வீணாக்குகிறோம். நல்ல விஷயங்கள் சுவையின்றி இருந்தால் அதனை பின்னர் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிவிடுகிறோம். அறிவு தரும் கலைகளில் மெய்யறிவு தரும் கலைகளாய் சிலவே உண்டு. அவை நம் தற்போதைய சூழ்நிலையில் சுவையின்றித் தோன்றலாம். ஆனால் அவை மட்டுமே உண்மைப் பொருளை உடையன. மற்றவை நம் நேரத்தை வீணாக்குகின்றன. இறைவன் எல்லா அறிவிற்கும் இருப்பிடம். அதனால் அவனே உண்மைப் பொருளைக் காட்டும் கலையாகவும் இருக்கிறான்.
அடுத்த பகுதியில் மேலும் பார்ப்போம்.
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
உலகில் மூவகையான சுடர்கள் இருக்கின்றன - கதிரவன், மதியவன், தீ. விண்மீன்களும் சுடர்வன தான் என்றாலும் இந்த உலகில் இருந்து பார்க்கும் போது அவை ஒளியில் மிகக் குன்றித் தோன்றுவதால் அவற்றைக் கணக்கில் சேர்ப்பதில்லை. அந்த மூவகை சுடர்களிலும் ஒளியில் ஈடு இணையற்று இருக்கும் சுடர் பகலவன். இறைவனைப் பற்றிக் கூறும் போது ஆயிரம் பல்லாயிரம் சூரியர்கள் சேர்ந்து வந்தது போல் இருக்கிறது அவன் ஒளி என்று கூறுவர். ஒரு சூரியனே எப்படி எரிக்கிறான்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்கிறான்; பல்லாயிரம் கதிரவனின் ஒளி என்றால் அது எவ்வளவு வெப்பமானதாய் இருக்கும்; எப்படிக் கண்ணைக் கூசச்செய்யும் என்று தோன்றும். இறைவனுடைய ஒளியோ கருணையுடன் கூடியது. கதிரவனைப் போல் சுட்டெரிக்காது. நிலவைப் போல் குளிர்ந்து இருக்கும். அதனால் தான் இங்கே அருளுடைச் சுடரே என்கிறார் ஐயன்.
ஒரு பழ மரத்தில் காய்களும் கனிகளும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நாம் எதனைப் பறித்துத் தின்போம்? கனிகளைத் தானே. அதிலும் பழுத்து மிக்கச் சாறுடன் இருக்கும் கனியென்றால் பறித்தவுடன் உண்ணலாம். ஆனால் அந்த மரத்தில் காய்கள் மட்டும் தான் இருக்கின்றன என்றால் என்ன செய்ய? அவை கனிகளாகும் வரைக் காத்திருக்க வேண்டியது தான்.
இந்த உலகத்தில் பெரும்பாலான விஷயங்கள் காய்கள் மட்டும் இருக்கும் மரம் போன்றவைதான். நாம் ஒரு முயற்சியைச் செய்துவிட்டு அதன் பலனை உடனேயா பார்க்கிறோம்? இல்லையே! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதே! பூவிழி நோகப் பார்த்துக் கொண்டே இருந்தாலும் அந்த காய்கள் கனிவது போல் தெரியவில்லை. இந்த விஷயங்கள் இப்படி என்றால் சில விஷயங்கள் சீக்கிரம் கனிந்து விடுகிறது. ஆனால் அவை உண்ணச் சுவையாக சாறுடன் கூடி இல்லை. உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும் இப்படி என்றுமே பழுக்காத காய்கள், பழுக்கும் ஆனால் சுவைக்காத கனிகள் என்று வகைப்படுத்தி விடலாம்.
உலக விஷயங்கள் போலின்றி இறைவன் பறித்தவுடன் உண்ணலாம் படி கனிந்து சுவையுடன் இருக்கிறான். அவன் அருளாலே அவன் தாள் வணங்கினால் அவன் கருணையாலே தன்னை உடனே தருகிறான். என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே நின் செயலே என்று எண்ணி அவனை நோக்கி நின்றால் அவனே தன்னைக் கொடுக்கிறான். அப்படி அவனே கொடுக்கும் போது உடனே சுவைக்கலாம் படி பழுத்தப் பழமாய் இருக்கிறான். அதனால் தான் வெறும் கனியே என்று சொல்லாமல் அளிந்ததோர் கனியே என்கிறார் ஒருவாசகமானாலும் திருவாசகமாய்ச் சொன்ன மாணிக்கவாசகர்.
பக்தி உடையார்க்கு எளியவன் ஆக இருக்கும் அந்த இறைவனே மற்றவர்களுக்கு மிக அரியவனாய் இருக்கிறான். பக்தி உடையார்க்கு அளிந்த கனியாய் இருக்கும் அவனே தங்கள் சொந்த முயற்சியால் அவனைக் காண விரும்புபவர்களுக்கு பெருமுயற்சிக்குப் பின் தன்னைக் கொடுக்கிறான். அந்த பெரு முயற்சியைச் செய்ய எல்லாராலும் முடியாது. அதற்கு பெருந்திறமை வேண்டும். அப்படி பெருந்திறலுடன் அருமையான தவம் செய்வார்களுக்கு அவன் அரசனைப் போல் அவர்களைக் காத்து அருளுகிறான்.
உலகில் எத்தனையோ இருக்கின்றன படிப்பதற்கு. சில சுவையாக இருக்கின்றன. சில சுவையின்றி இருக்கின்றன. விவகாரமான விஷயங்கள் என்றால் படிப்பதற்குச் சுவையாகத் தோன்றி அதில் நம் நேரத்தை வீணாக்குகிறோம். நல்ல விஷயங்கள் சுவையின்றி இருந்தால் அதனை பின்னர் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிவிடுகிறோம். அறிவு தரும் கலைகளில் மெய்யறிவு தரும் கலைகளாய் சிலவே உண்டு. அவை நம் தற்போதைய சூழ்நிலையில் சுவையின்றித் தோன்றலாம். ஆனால் அவை மட்டுமே உண்மைப் பொருளை உடையன. மற்றவை நம் நேரத்தை வீணாக்குகின்றன. இறைவன் எல்லா அறிவிற்கும் இருப்பிடம். அதனால் அவனே உண்மைப் பொருளைக் காட்டும் கலையாகவும் இருக்கிறான்.
அடுத்த பகுதியில் மேலும் பார்ப்போம்.
அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே! பெருந்திறல் அருந்தவர்க்கரசே!

அருளுடைச் சுடரே! அளிந்ததோர் கனியே!
பெருந்திறல் அருந்தவர்க்கரசே!
பொருளுடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருளிடத்தடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
அருளுடைச் சுடரே - கருணையுடன் கூடிய சுடரே
அளிந்ததோர் கனியே - கனிந்துப் பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே
பெருந்திறல் அருந்தவர்க்கு அரசே - பெருமையும் ஆற்றலும் கொண்ட அருமையான தவம் உடையவர்களுக்கு அரசனே
பொருளுடைக் கலையே - உண்மைப்பொருளை தன் உட்பொருளாகக் கொண்ட கலையே
புகழ்ச்சியைக் கடந்த போகமே - எவ்வளவுதான் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளை எல்லாம் கடந்து நிற்கும் இன்பவடிவானவனே
யோகத்தின் பொலிவே - யோகமே உருவானவனே; யோகம் செய்வார்களுக்குக் காட்சியளிப்பவனே
தெருளிடத்து அடியார் சிந்தையுள் புகுந்த செல்வமே - மயக்கமே இல்லாத நிலையை அடைந்த அடியவர்கள் சிந்தையுள் புகுந்து நிற்கும் செல்வமே
சிவபெருமானே - என் தலைவனான சிவனே
இருளிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - மயக்கம் அளிக்கும் நிலையான இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்து அருளுவது இனியே - நீர் இனிமேல் எங்கு எழுந்தருளிச் செல்வது?
கருணையுடன் கூடிய சுடரே. அடியார்களுக்குக் கனிந்துப் பக்குவப்பட்ட ஒப்பற்ற கனி போன்றவனே. பெருமையும் ஆற்றலும் கொண்ட அருமையான தவம் உடையவர்களுக்கு அரசனே. உண்மைப்பொருளை தன் உட்பொருளாகக் கொண்ட கலையே. மெய்நூலானவனே. அந்தக் கலைகளும் நூல்களும் எவ்வளவுதான் புகழ்ந்தாலும் அந்தப் புகழ்ச்சிகளை எல்லாம் கடந்து நிற்கும் இன்பவடிவானவனே. யோகமே உருவானவனே. யோகம் செய்வார்களுக்குக் காட்சியளிப்பவனே. மயக்கமே இல்லாத நிலையை அடைந்த அடியவர்கள் சிந்தையுள் புகுந்து நிற்கும் செல்வமே. சிவபெருமானே. மயக்கம் கொடுக்கும் நிலையான இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். எங்கு எழுந்து அருளுவது இனியே?
Wednesday, July 30, 2008
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களுக்கும் தலைவனாய் இருந்த போதிலும் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆனவன். இந்த உலகில் பிறக்கும் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவித அழுக்குகளால் மூடப்பெற்று இறைவனை மறந்து புலன்களின் வழியே சென்று பாவக்குழியில் விழுந்து சொல்லொணா துயரம் அடையும் போது, செய்த குற்றங்களை எல்லாம் மறந்து அந்த உயிர்களை நல்வழிக்குக் கூட்டிவந்து அருள்செய்வது இறைவனின் தனிப்பெரும்கருணை. தம் குழந்தைகள் எத்தனைத் தான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்து அந்த குழந்தைகளைக் காப்பது பெற்றோர் இயல்பு. இறைவன் அப்படி நம் குற்றங்களை எல்லாம் பெற்ற அன்னையும் தந்தையும் போல பொறுத்துக்கொண்டு நம்மை எப்போதும் காப்பதால் 'அம்மையே! அப்பா!' என்றார் மாணிக்கவாசகர். 'பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்; பெற்றவள் குறமகள் பெற்றவளாமே' என்றார் பாலன் தேவராய சுவாமிகளும்.
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு என்றார் பொய்யாமொழிப்புலவர். இந்த உலகில் நாமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, நம் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்து, உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி இருக்குமாறு உதவி செய்ய, கைப்பொருள் மிக்க அவசியம் ஆகிறது. அந்த கைப்பொருளை அடையத்தான் இங்குள்ளவர் அனைவரும் தம் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த கைப்பொருளை பொன்னாகவும் மணியாகவும் மாற்றி சேமித்து வைத்தலும் நடக்கிறது. அப்படி நாம் சேமித்துவைக்கும் வைத்த நிதிகளிலேயே விலைமதிப்பற்ற ஒப்பு இல்லாத பெரும் மாணிக்கம் இறைவனே. அவன் அருள் இருந்தால் நாம் கைப்பொருளால் அடையும் அத்தனை இன்பத்தையும் அடைந்து அதற்கு மேலும் அடையலாம். நாம் சேர்த்துவைக்கும் 'வைத்த நிதிகள்' எல்லாம் காலவேகத்தில் கரைந்து போகும். ஆனால் இறைவனோ என்றும் அழியா பெரும் செல்வம் - வைத்த மா நிதி. அதனால் தான் பாண்டியனின் முதலமைச்சர் இறைவனை 'ஒப்பிலா மணியே' என்கிறார்.
அன்பே சிவம் என்றார் திருமூல நாயனார். அமுதம் கடலில் விளைந்தது. அந்த அமுதம் உண்டவர்களை இறவா நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. ஆனால் அந்த அமுதமும் அளவுக்கு மீறி அருந்தினால் திகட்டிவிடும். இறைவனோ அன்பே உருவாய் அந்த அன்பினில் விளைந்த ஆரா அமுதமானவன். அவனை அடைந்தால் இறவா நிலையும் பிறவா நிலையும் என்றும் அவன் அருகில் இருந்து ஆனந்தம் அடையும் நிலையும் அடையலாம்.
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களுக்கும் தலைவனாய் இருந்த போதிலும் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆனவன். இந்த உலகில் பிறக்கும் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவித அழுக்குகளால் மூடப்பெற்று இறைவனை மறந்து புலன்களின் வழியே சென்று பாவக்குழியில் விழுந்து சொல்லொணா துயரம் அடையும் போது, செய்த குற்றங்களை எல்லாம் மறந்து அந்த உயிர்களை நல்வழிக்குக் கூட்டிவந்து அருள்செய்வது இறைவனின் தனிப்பெரும்கருணை. தம் குழந்தைகள் எத்தனைத் தான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்து அந்த குழந்தைகளைக் காப்பது பெற்றோர் இயல்பு. இறைவன் அப்படி நம் குற்றங்களை எல்லாம் பெற்ற அன்னையும் தந்தையும் போல பொறுத்துக்கொண்டு நம்மை எப்போதும் காப்பதால் 'அம்மையே! அப்பா!' என்றார் மாணிக்கவாசகர். 'பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்; பெற்றவள் குறமகள் பெற்றவளாமே' என்றார் பாலன் தேவராய சுவாமிகளும்.
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு என்றார் பொய்யாமொழிப்புலவர். இந்த உலகில் நாமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, நம் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்து, உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி இருக்குமாறு உதவி செய்ய, கைப்பொருள் மிக்க அவசியம் ஆகிறது. அந்த கைப்பொருளை அடையத்தான் இங்குள்ளவர் அனைவரும் தம் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த கைப்பொருளை பொன்னாகவும் மணியாகவும் மாற்றி சேமித்து வைத்தலும் நடக்கிறது. அப்படி நாம் சேமித்துவைக்கும் வைத்த நிதிகளிலேயே விலைமதிப்பற்ற ஒப்பு இல்லாத பெரும் மாணிக்கம் இறைவனே. அவன் அருள் இருந்தால் நாம் கைப்பொருளால் அடையும் அத்தனை இன்பத்தையும் அடைந்து அதற்கு மேலும் அடையலாம். நாம் சேர்த்துவைக்கும் 'வைத்த நிதிகள்' எல்லாம் காலவேகத்தில் கரைந்து போகும். ஆனால் இறைவனோ என்றும் அழியா பெரும் செல்வம் - வைத்த மா நிதி. அதனால் தான் பாண்டியனின் முதலமைச்சர் இறைவனை 'ஒப்பிலா மணியே' என்கிறார்.
அன்பே சிவம் என்றார் திருமூல நாயனார். அமுதம் கடலில் விளைந்தது. அந்த அமுதம் உண்டவர்களை இறவா நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. ஆனால் அந்த அமுதமும் அளவுக்கு மீறி அருந்தினால் திகட்டிவிடும். இறைவனோ அன்பே உருவாய் அந்த அன்பினில் விளைந்த ஆரா அமுதமானவன். அவனை அடைந்தால் இறவா நிலையும் பிறவா நிலையும் என்றும் அவன் அருகில் இருந்து ஆனந்தம் அடையும் நிலையும் அடையலாம்.
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப்போகும்; நின்றதில் பதினைந்தாண்டு
பேதைப் பாலகனதாகும்; பிணி, பசி, மூப்பு, துன்பம்
என்று பாடுவார் ஆழ்வார். வேதங்கள் விதித்தபடி ஒரு மனிதன் நூறு பிராயம் வரை வாழ்ந்தாலும், அந்த நூறில் பாதியாகிய ஐம்பது வருடங்கள் உறக்கத்தில் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள ஐம்பதில் பதினைந்து வருடம் வரை ஏதும் அறியா பேதைப் பருவமாய் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள முப்பத்தி ஐந்தில் நாம் அடையும் துன்பங்கள் அளவில - பிணி உண்டு; பசி உண்டு; மூப்படைவோம்; மற்ற எத்தனையோ துன்பங்கள். இப்படி நூறு வயது வாழ்ந்தாலுமே இறைவனை நினைக்க நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு மிக குறைவு. அப்படி நிலையில்லாதவற்றையே நம்பி நம் வாழ்நாளை வீணே கழித்துக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கையையே 'பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்' வாழ்க்கை என்கிறார் மாணிக்கவாசகர்.
அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்த தமக்கு சிறந்த சிவபதம் என்னும் பெருமையை இறைவன் தானே வந்து அருளினான் என்பதால் 'செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே' என்றார்.
உன் அருளாலே உன் தாள் வணங்கினேன். இம்மையே இப்பொழுதே உன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்தேன். நீர் எம்மை விட்டு எங்கே சென்றுவிடப் பார்க்கிறீர்.
என்று பாடுவார் ஆழ்வார். வேதங்கள் விதித்தபடி ஒரு மனிதன் நூறு பிராயம் வரை வாழ்ந்தாலும், அந்த நூறில் பாதியாகிய ஐம்பது வருடங்கள் உறக்கத்தில் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள ஐம்பதில் பதினைந்து வருடம் வரை ஏதும் அறியா பேதைப் பருவமாய் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள முப்பத்தி ஐந்தில் நாம் அடையும் துன்பங்கள் அளவில - பிணி உண்டு; பசி உண்டு; மூப்படைவோம்; மற்ற எத்தனையோ துன்பங்கள். இப்படி நூறு வயது வாழ்ந்தாலுமே இறைவனை நினைக்க நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு மிக குறைவு. அப்படி நிலையில்லாதவற்றையே நம்பி நம் வாழ்நாளை வீணே கழித்துக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கையையே 'பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்' வாழ்க்கை என்கிறார் மாணிக்கவாசகர்.
அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்த தமக்கு சிறந்த சிவபதம் என்னும் பெருமையை இறைவன் தானே வந்து அருளினான் என்பதால் 'செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே' என்றார்.
உன் அருளாலே உன் தாள் வணங்கினேன். இம்மையே இப்பொழுதே உன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்தேன். நீர் எம்மை விட்டு எங்கே சென்றுவிடப் பார்க்கிறீர்.
Tuesday, July 29, 2008
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
அம்மையே - என் தாயே!
அப்பா - என் தந்தையே!
ஒப்பிலா மணியே - நிகரில்லாத மாணிக்கமே!
அன்பினில் விளைந்த ஆரமுதே - அன்பெனும் கடலில் உண்டாகிய அருமையான அமுதமே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் - பொய்யான செயல்களிலேயே ஈடுபட்டு என் வாழ்நாளை வீணே கழிக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு - புழுக்கள் நிரம்பிய உடலும் தலையும் கொண்டு அலையும் கீழ்மையான எனக்கு
செம்மையே ஆய - மிகவும் மேன்மையான
சிவபதம் அளித்த - என்றும் இன்பமயமான சிவ பதத்தைக் அருளிய
செல்வமே சிவபெருமானே - அருட்செல்வமே சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - இப்போதே, இவ்வுலகத்திலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன்
எங்கெழுந்தருளுவதினியே - நீர் இனிமேல் என்னை விட்டுவிட்டு எங்கே செல்லமுடியும்?
என் தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பெனும் கடலில் உதித்த அருமையான அமுதமே! என் உயிருக்கு உறுதி தரும் நல்ல செயல்களைச் செய்யாது தீமையான செயல்களையே செய்து என் வாழ்நாளை வீணே கழிக்கும் இந்தக் கீழானவனுக்கு மிக மேன்மையான சிவபதம் அருளிய அருட்செல்வமே! சிவபெருமானே! இந்தப் பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன். நீர் எங்கு என்னை விட்டு சென்றுவிடப் பார்க்கிறீர்?
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
அம்மையே - என் தாயே!
அப்பா - என் தந்தையே!
ஒப்பிலா மணியே - நிகரில்லாத மாணிக்கமே!
அன்பினில் விளைந்த ஆரமுதே - அன்பெனும் கடலில் உண்டாகிய அருமையான அமுதமே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் - பொய்யான செயல்களிலேயே ஈடுபட்டு என் வாழ்நாளை வீணே கழிக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு - புழுக்கள் நிரம்பிய உடலும் தலையும் கொண்டு அலையும் கீழ்மையான எனக்கு
செம்மையே ஆய - மிகவும் மேன்மையான
சிவபதம் அளித்த - என்றும் இன்பமயமான சிவ பதத்தைக் அருளிய
செல்வமே சிவபெருமானே - அருட்செல்வமே சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - இப்போதே, இவ்வுலகத்திலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன்
எங்கெழுந்தருளுவதினியே - நீர் இனிமேல் என்னை விட்டுவிட்டு எங்கே செல்லமுடியும்?
என் தாயே! தந்தையே! நிகரில்லாத மாணிக்கமே! அன்பெனும் கடலில் உதித்த அருமையான அமுதமே! என் உயிருக்கு உறுதி தரும் நல்ல செயல்களைச் செய்யாது தீமையான செயல்களையே செய்து என் வாழ்நாளை வீணே கழிக்கும் இந்தக் கீழானவனுக்கு மிக மேன்மையான சிவபதம் அருளிய அருட்செல்வமே! சிவபெருமானே! இந்தப் பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பற்றினேன். நீர் எங்கு என்னை விட்டு சென்றுவிடப் பார்க்கிறீர்?
வினையனேனுடைய மெய்ப்பொருளே!

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!
வினையனேனுடைய மெய்ப்பொருளே!
முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையில் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்ட
கடவுளே! கருணைமாக்கடலே!
இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இறைவன் தருமத்தின் தலைவன். கடைபிடிக்க வேண்டியதில் சிறந்தது தருமம். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: - தருமம் தன்னைக் காப்பவனைக் காக்கிறது என்கிறது வேதம். அந்த தருமம் எருது ரூபமாய் இருக்கும்போது அதன் மேல் அன்பு கொண்டு அதனைத் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளான் இறைவன்.
தரும வழி நடப்பவரே மனிதர் தொழும் தெய்வங்களாகி நிற்கிறார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறார்கள். இறைவன் தருமத்தின் தலைவன் ஆகையால் இயற்கையாகவே அவன் விண்ணில் வாழும் விண்ணவர் தலைவன் ஆகிறான்.
அவன் விண்ணவர் தலைவனாய் அவ்வளவு உயரத்தில் நின்றாலும் புண்ணிய பாவங்கள் செய்து அந்த வினைப்பயனை அனுபவித்துக்கொண்டிருக்கும் சாதாரண உயிர்க்கும் என்றும் நிலையான துணையாக இருக்கிறான்.
ஈசன் வானவர்க்கு என்பன்; என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்தப் பரஞ்சுடர் சோதிக்கே
என்பார் நம்மாழ்வார்.
நீசனாய் எந்த நற்குணங்களும் இல்லாமல் இருக்கும் என்னிடமும் அன்பு வைத்த இறைவனுக்கு 'வானவர் தலைவன்' என்பதா பெருமை? என்னிடமும் அன்பு வைத்தான் என்பதே பெருமை, என்கிறார் நம்மாழ்வார். அது போலவே வாதவூராரும் 'விடை விடாது உகந்த விண்ணவர் கோவே; வினையனேனுடைய மெய்ப்பொருளே' என்கிறார்.
அந்த கருத்தையே இன்னும் விரித்து 'உன் அடிமையாகிய நான் இந்த உடம்பில் கிடந்து கெட்ட நாற்றம் விடாது முதுமையடைந்து வீணே மண்ணாய் அழியாத வண்ணம் என்னை ஆண்டு கொண்டாய்' என்கிறார்.
அப்படி உயர்ந்தவன் தாழ்ந்தவனை ஆண்டுகொண்டதால் அவனைக் கருணைமாக்கடலே என்கிறார். எல்லோரும் தம்மில் உயர்ந்தவருடன் அன்புடன் நடந்துகொள்வர். தமக்கு இணையானவருடன் நட்புடன் நடந்துகொள்வர். தம்மிலும் சிறிது தாழ்ந்த நிலையில் இருப்பவருடன் அன்பு கொண்டாலே அவர்களைக் கருணைக்கடல் எனலாம். இறைவனோ மிகப் பெரியவனாய் இருந்த போதிலும் மிகத் தாழ்ந்த நம்மிடமும் கருணை கொள்வதால், அவனே 'கருணைமாக்கடல்' எனத் தகுந்தவன்.
என்னை ஆண்டு கொண்டவனே என்பதோடு நிறுத்தவில்லை. கடவுளே என்கிறார். எல்லாப் பொருளிலும் நம்மிலும் உள் கடந்து நிற்பதால் அவனுக்குக் கடவுள் என்று பெயர். நம் தனி முயற்சியால் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த உள் கடந்து நிற்பவனைக் காண முடியாது; அப்படி அவனைக் காணும் வரை நம் புலன்களின் ஆட்சியிலிருந்து விடுபட முடியாது. அவனே தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டும். இப்படி உள்கடந்து கடவுளாய் நின்றாலும் என்மேல் கருணை கொண்டு நீயாய் உன்னைக் காட்டிக்கொடுத்தாய் என்பதைக் குறிக்கத்தான் 'கடவுளே' என்கிறார்.
இப்படிப் பட்ட உன்னை இடைவிடாமல் நான் பிடித்துக்கொண்டேன். நீ எம்மை விட்டு செல்லவேண்டாம் என்று வேண்டி இந்தப் பாட்டை முடிக்கிறார்.
தரும வழி நடப்பவரே மனிதர் தொழும் தெய்வங்களாகி நிற்கிறார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறார்கள். இறைவன் தருமத்தின் தலைவன் ஆகையால் இயற்கையாகவே அவன் விண்ணில் வாழும் விண்ணவர் தலைவன் ஆகிறான்.
அவன் விண்ணவர் தலைவனாய் அவ்வளவு உயரத்தில் நின்றாலும் புண்ணிய பாவங்கள் செய்து அந்த வினைப்பயனை அனுபவித்துக்கொண்டிருக்கும் சாதாரண உயிர்க்கும் என்றும் நிலையான துணையாக இருக்கிறான்.
ஈசன் வானவர்க்கு என்பன்; என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்தப் பரஞ்சுடர் சோதிக்கே
என்பார் நம்மாழ்வார்.
நீசனாய் எந்த நற்குணங்களும் இல்லாமல் இருக்கும் என்னிடமும் அன்பு வைத்த இறைவனுக்கு 'வானவர் தலைவன்' என்பதா பெருமை? என்னிடமும் அன்பு வைத்தான் என்பதே பெருமை, என்கிறார் நம்மாழ்வார். அது போலவே வாதவூராரும் 'விடை விடாது உகந்த விண்ணவர் கோவே; வினையனேனுடைய மெய்ப்பொருளே' என்கிறார்.
அந்த கருத்தையே இன்னும் விரித்து 'உன் அடிமையாகிய நான் இந்த உடம்பில் கிடந்து கெட்ட நாற்றம் விடாது முதுமையடைந்து வீணே மண்ணாய் அழியாத வண்ணம் என்னை ஆண்டு கொண்டாய்' என்கிறார்.
அப்படி உயர்ந்தவன் தாழ்ந்தவனை ஆண்டுகொண்டதால் அவனைக் கருணைமாக்கடலே என்கிறார். எல்லோரும் தம்மில் உயர்ந்தவருடன் அன்புடன் நடந்துகொள்வர். தமக்கு இணையானவருடன் நட்புடன் நடந்துகொள்வர். தம்மிலும் சிறிது தாழ்ந்த நிலையில் இருப்பவருடன் அன்பு கொண்டாலே அவர்களைக் கருணைக்கடல் எனலாம். இறைவனோ மிகப் பெரியவனாய் இருந்த போதிலும் மிகத் தாழ்ந்த நம்மிடமும் கருணை கொள்வதால், அவனே 'கருணைமாக்கடல்' எனத் தகுந்தவன்.
என்னை ஆண்டு கொண்டவனே என்பதோடு நிறுத்தவில்லை. கடவுளே என்கிறார். எல்லாப் பொருளிலும் நம்மிலும் உள் கடந்து நிற்பதால் அவனுக்குக் கடவுள் என்று பெயர். நம் தனி முயற்சியால் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த உள் கடந்து நிற்பவனைக் காண முடியாது; அப்படி அவனைக் காணும் வரை நம் புலன்களின் ஆட்சியிலிருந்து விடுபட முடியாது. அவனே தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டும். இப்படி உள்கடந்து கடவுளாய் நின்றாலும் என்மேல் கருணை கொண்டு நீயாய் உன்னைக் காட்டிக்கொடுத்தாய் என்பதைக் குறிக்கத்தான் 'கடவுளே' என்கிறார்.
இப்படிப் பட்ட உன்னை இடைவிடாமல் நான் பிடித்துக்கொண்டேன். நீ எம்மை விட்டு செல்லவேண்டாம் என்று வேண்டி இந்தப் பாட்டை முடிக்கிறார்.
Monday, July 28, 2008
விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!
வினையனேனுடைய மெய்ப்பொருளே!
முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையில் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்ட
கடவுளே! கருணைமாக்கடலே!
இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே - தரும ரூபமான காளை மாட்டினை (விடையை) வாகனமாக விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள, வானில் வாழும் தேவர்களுக்கெல்லாம் அரசனே!
வினையனேனுடைய மெய்ப்பொருளே - கரும வினையின் அடிமையாகிய எனக்கு வேறு கதி இல்லை. நீயே எனக்குக் கதியாகும் உண்மைப்பொருள்.
அடியேன் - உன் அடிமையாகிய நான்
முழுபுழுக் குரம்பையில் கிடந்து - முழுவதும் நுண்ணுயிரிகளால் (புழுக்களால்) நிரம்பிய (அதனால் துன்பங்களை அடைந்து துயர் உறும்) இந்த உடலில் கிடந்து
முடை விடாது - அதனால் எழும் கெட்ட நாற்றம் (வடமொழியில் வாசனா எனப்படுவது) விடாது
மூத்தற மண்ணாய் - முதுமை அடைந்து இறுதியில் ஒன்றுமே இல்லாத மண்ணாகி
கடைபடா வண்ணம் - கீழ்மை நிலை அடையாத வண்ணம்
காத்து என்னை ஆண்ட கடவுளே
கருணைமாக்கடலே - வினைப்பயன்கள் மற்றும் வாசனைகளின் அடிமையாகிய என்னை உன் அடிமையாக்கிய கருணை மாக்கடலே.
இடைவிடாது - எப்போதும்
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்து அருளுவது இனியே!
வானில் வாழும் தேவர்களின் அரசனே! நீர் தருமத்தின் தலைவன். ஆதலினால் தரும ரூபமான ரிஷப தேவரை விரும்பி உம் வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ளீர். என் முன்வினைப் பயன்களால் பெரிதும் அலைப்புண்டு கலங்கி நிற்கும் எனக்கு நீரே மெய்யான கதி. உம் கடல் போன்ற கருணையால் என்னை இந்த கீழான வாழ்விலிருந்து கடைத்தேற்றினீர். நான் எப்போதும் உம் திருவடிகளை சிக்கெனப் பிடித்துள்ளேன். நீர் எங்கு செல்ல முயல்கிறீர்? நான் எப்போதும் உம் திருவடிகளைப் பற்றியுள்ளதால் நீர் எங்கும் தப்பிச் சென்று விட முடியாது.
வினையனேனுடைய மெய்ப்பொருளே!
முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையில் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்ட
கடவுளே! கருணைமாக்கடலே!
இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே - தரும ரூபமான காளை மாட்டினை (விடையை) வாகனமாக விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள, வானில் வாழும் தேவர்களுக்கெல்லாம் அரசனே!
வினையனேனுடைய மெய்ப்பொருளே - கரும வினையின் அடிமையாகிய எனக்கு வேறு கதி இல்லை. நீயே எனக்குக் கதியாகும் உண்மைப்பொருள்.
அடியேன் - உன் அடிமையாகிய நான்
முழுபுழுக் குரம்பையில் கிடந்து - முழுவதும் நுண்ணுயிரிகளால் (புழுக்களால்) நிரம்பிய (அதனால் துன்பங்களை அடைந்து துயர் உறும்) இந்த உடலில் கிடந்து
முடை விடாது - அதனால் எழும் கெட்ட நாற்றம் (வடமொழியில் வாசனா எனப்படுவது) விடாது
மூத்தற மண்ணாய் - முதுமை அடைந்து இறுதியில் ஒன்றுமே இல்லாத மண்ணாகி
கடைபடா வண்ணம் - கீழ்மை நிலை அடையாத வண்ணம்
காத்து என்னை ஆண்ட கடவுளே
கருணைமாக்கடலே - வினைப்பயன்கள் மற்றும் வாசனைகளின் அடிமையாகிய என்னை உன் அடிமையாக்கிய கருணை மாக்கடலே.
இடைவிடாது - எப்போதும்
உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்து அருளுவது இனியே!
வானில் வாழும் தேவர்களின் அரசனே! நீர் தருமத்தின் தலைவன். ஆதலினால் தரும ரூபமான ரிஷப தேவரை விரும்பி உம் வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ளீர். என் முன்வினைப் பயன்களால் பெரிதும் அலைப்புண்டு கலங்கி நிற்கும் எனக்கு நீரே மெய்யான கதி. உம் கடல் போன்ற கருணையால் என்னை இந்த கீழான வாழ்விலிருந்து கடைத்தேற்றினீர். நான் எப்போதும் உம் திருவடிகளை சிக்கெனப் பிடித்துள்ளேன். நீர் எங்கு செல்ல முயல்கிறீர்? நான் எப்போதும் உம் திருவடிகளைப் பற்றியுள்ளதால் நீர் எங்கும் தப்பிச் சென்று விட முடியாது.
Friday, July 25, 2008
இறைவன் மிகப்பெரியவன்

உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த
யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!
செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
இறைவன் மிகப்பெரியவன். தேவர்களின் அரசன். இந்த உலகில் வாழ்பவர் இம்பர். மற்ற தெய்வீக உலகங்களில் வாழ்பவர் உம்பர். அவர்கள் இருவகையினர் - எப்போதும் தெய்வீக உலகங்களில் வாழ்ந்து இறைத்தொண்டினை இடையறாது செய்பவர்; இவ்வுலகில் வாழ்ந்திருந்து இறைவன் கருணையால் அவன் தொண்டில் ஈடுபட்டு தெய்வீக உலகங்களை அடைந்து அங்கும் அவன் தொண்டினைத் தொடர்பவர்கள். இந்த இருவகை உம்பர்களுமே இம்பர்களின் வணக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் அரசாங்க அதிகாரிகள் போல. அவர்கள் சிற்றரசர்கள் போல. இறைவன் அவர்களுக்கு எல்லாம் அரசன். உம்பர்கட்கு அரசன். பேரரசன். ராஜராஜன். ராஜேந்திரன். தேவராஜன். இங்கு இறைவனின் 'பரம்பொருள்' தன்மை போற்றப்படுகிறது.
இறைவன் எங்கும் நிறைந்தவன். இந்தப் ப்ரபஞ்சத்தில் எங்கும் எந்த இடத்திலும் எப்பொருளிலும் எல்லாக் காலத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவன் எல்லாக் காலத்திலும் இங்கிருப்பதால் அவன் காலத்தைக் கடந்தவன் - காலாதீதன். அவன் இல்லாத இடமே இல்லை என்பதால் அவன் எல்லா எல்லைகளையும் கடந்தவன் - தேசாதீதன். அவன் எல்லா இடத்திலும் எப்போதும் இருந்தாலும் சாதாரணமாய் புலன்களுக்குப் புலப்படாமல் எங்கும் 'கலந்து' நிற்பவன். யோகம் என்றால் கலத்தல். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், ராஜ யோகம், தியான யோகம், ஹத யோகம், ப்ரபத்தி யோகம் என்று இறைவனை ஜீவன் கலப்பதற்கான வழிகள் எல்லாமே யோகம் என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம். இங்கு இறைவனின் 'எங்கும் எப்போதும் கலந்து நிற்கும்' தன்மை போற்றப்படுகிறது.
நானோ பொல்லா வினையேன். எல்லா தீய காரியங்களும் செய்துள்ளேன். அவன் பெருமையுடன் ஒப்பிடும் போது நான் மிக மிக மிகச் சிறியவன். இருந்தும் அவன், காலத்திற்கு முன் கனிந்த இனிய பழம் போல, எனக்கு அருள் செய்தான். அவன் என்னிடம் மட்டும் கருணை கொள்ளவில்லை. எனது குழு முழுவதையுமே தன் அடியார்களாக்கிக்கொண்டு எங்களுக்கு நிரந்தரமான வாழ்வு கொடுத்தான். இங்கு இறைவனின் கருணையும் எளிவந்த தன்மையும் போற்றப் படுகின்றன.
அவன் எல்லா அறிவு நூலகளாலும் அறிஞர்களாலும் 'செம்பொருள்' என்று போற்றப்படுகிறான். இங்கு இறைவனின் 'மேலான போற்றுதலுக்கு உரிய' தன்மை பேசப் படுகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.
அவனே எல்லோர்க்கும் கதி. அவன் திருவடிகளே எப்போதும் எவ்வகையினருக்கும் மிகச் சிறந்த கதி. இங்கு இறைவனின் 'மேலான கதி'யாகும் தன்மை போற்றப்படுகிறது.
அவனே நிரந்தரமான செல்வம். மற்ற வகைச் செல்வங்கள் எல்லாம் நிரந்தரமில்லை. அவன் வைத்தமாநிதி. இங்கு இறைவனின் 'அடியார்களுக்கு எல்லாமும்' ஆகும் தன்மை போற்றப்படுகிறது.
இப்படி பல விதமான 'சீர்கள்' இந்தப் பாடலில் போற்றப்படுகிறது.
Tuesday, July 22, 2008
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே! செல்வமே! சிவபெருமானே!

உம்பர்கட்கரசே! ஒழிவற நிறைந்த
யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடி முழுதாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே!
செம்பொருட்டுணிவே! சீருடைக்கழலே!
செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டுன்னைச் சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
உம்பர்கட்கரசே - தேவர்களுக்கு அரசனே!
ஒழிவற நிறைந்த யோகமே - இல்லாத இடமே இல்லையெனும் படியாய், தோற்றம் இறுதி இல்லாமல், எக்காலத்தும், எங்கும், எல்லாப் பொருளினிலும் எல்லா உயிரினிலும் நிறைந்து கலந்தவனே
ஊத்தையேன் தனக்கு - கேவலமான, அழுக்கான எனக்கு
வம்பெனப் பழுத்து - வீம்பாய் அருள் புரிந்து, பழுக்கும் காலமில்லாத காலத்தில் சீக்கிரமே பழுத்த பழம் போல தகுதி இல்லாவிடினும் எனக்கு அருள் புரிந்து
என் குடி முழுதாண்டு - என் குடும்பம், குலம், உற்றார், உறவினர், எல்லோரையும், உன் அடிமையாய் ஆண்டு
வாழ்வு அற வாழ்வித்த - நிலையில்லா வாழ்வு போகும்படி நிலையான வாழ்வு அளித்த
மருந்தே - அமுதம் போன்றவனே
செம்பொருள் துணிவே - பெரியோர்களால் உண்மைப் பொருள் என்று முடிவு செய்யப் பட்ட பொருளே; செம்பொருளாகிய வேதங்களால் முழுமுதல் என முடிவு செய்யப்பட்டவனே
சீருடைக்கழலே - அழகிய பெருமையுடைய சிறந்த திருவடிகளை உடையவனே
செல்வமே - என் செல்வமே
சிவபெருமானே
எம் பொருட்டு - எங்கள் பொருட்டு
உன்னைச் சிக் எனப்பிடித்தேன்
எங்கு எழுந்து அருளுவது இனியே - நீர் எங்கே சென்று விட முடியும்?
தேவர்களின் அரசனே! நீர் எங்கும் எப்பொருளும் விடாமல், இல்லாத இடமே இல்லை எனும்படியாய், நீக்கமற நிறைந்துள்ளீர். உமக்கு தொடக்கம் என்றும் முடிவு என்றும் இல்லாமல் எங்கும் எப்போதும் நிறைந்துள்ளீர். நிலையில் மிகவும் குறைந்தவனான கேவலமான எனக்கு பழுக்கும் காலத்திற்கு முன்பே பழுத்த இனிய பழம் போல அருள் புரிந்தவரே. நீர் எம்மை மட்டும் அல்ல என் குலம், நண்பர், உறவினர் என அனைவரையும் உன் அடியார்களாய் ஆக்கிக் கொண்டீர். எங்கள் நிலையில்லாத வாழ்வை நீக்கி, என்றும் நிலைக்கும் பெருவாழ்வைக் கொடுத்த அமுதம் போன்றவரே! ஞானிகளாலும், வேதங்களாலும் மெய்ப்பொருள் என்று துணியப் பட்டவரே! நீரே எல்லோருக்கும் அழியாத பெருஞ்செல்வம். சிவபெருமானே! எங்கள் நலனுக்காக நான் உமது திருவடிகளைச் சிக் எனப் பிடித்தேன். நீர் எங்கு செல்ல முயல்கிறீர். நான் உமது பாதங்களை பிடித்துவிட்டதால் நீர் எங்கும் தப்பிச் சென்று வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக